மார்க்ஸ் பார்வையில் இந்தியா
" 'இந்தியாவில் ஒரு பொற்காலம் இருந்தது' என்ற கருத்தை நான் மறுக்கிறேன். இந்துஸ்தானம் இதற்கு முன்பு பட்ட எல்லாக் கொடுமைகளையும் விட பிரிட்டிஷ்காரர்களிடம் பட்டதுன்பமே மிகமிக மோசமானது... உள்நாட்டு போர்கள் அந்நியப் படையெடுப்புகள், புரட்சிகள், வெற்றிகள், "பஞ்சங்கள்" இப்படிப்பட்ட சிக்கலான திடீர் அழிவுகள் இந்துஸ்தானத்தில் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் மேல் மட்டத்திலேயே நின்றுவிட்டன. இங்கிலாந்து தான் இந்துஸ்தான சமூக அமைப்பை சுக்கல் சுக்கலாகத் தகர்த்து எறிந்து விட்டது... தற்போதுள்ள இந்தியன் தன்னுடைய பழைய உலகத்தை இழந்துவிட்டு புதிய வரவு ஒன்றுமில்லாமல் துக்கத்தில் உழல்கின்றான். தற்போது பிரிட்டிஷாரால் ஆளப்படுகிற இந்துஸ்தானம் தன் தொன்மை வாய்ந்த பாரம்பரியமின்றி, கடந்தகால எல்லா சரித்திரமும் அற்றுப் போய் முற்றிலும் வித்தியாசமாக மாறிவிட்டது." காலனி ஆதிக்கம் பக். 35–36, மார்க்ஸ்.
