BP

கந்தர்வன் கவிதைகள்

Sale price  Rs. 160.00 Regular price Rs. 200.00
Skip to product information
BP

கந்தர்வன் கவிதைகள்

Rs. 200.00 Rs. 160.00
Save 20%

கந்தர்வன் கவிதைகள் 2000 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான கவிதை வரலாறு கொண்ட தமிழ் மொழியில், எழுதத் தலைப்படும் எல்லோரும் கவிஞராக முயற்சிக்கும் ஒரு சூழலில் தனித்துவம் மிக்கதொரு கவிக்குரல் கந்தர்வன். ஆழமான அரசியல் கவிதைகளும் அழகியலோடு படைக்கப்படுவது சாத்தியம் என்பதை நிரூபித்தவர். கிழிசல்கள், சிறைகள், மீசைகள் உள்ளிட்ட கவிதைத் தொகுதிகளின் மொத்த தொகுப்பே இந்நூல். நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை என்பது போன்ற எளிமையும், நேர்த்தன்மையும், கச்சிதமும் பொருந்திய கவிதை வரிகள் நிரம்பிக் கிடக்கும் தொகுப்பு. 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் வருகிறது. ஆனால், புதிதாய் வரும் ஒரு முதல் தொகுதியின் வசீகரத்தோடு இருப்பது கந்தர்வனின் கவித்திறனைக் காட்டுகிறது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
கந்தர்வன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2015
பக்கங்கள்:
232

You may also like