வள்ளிச் சந்தம்
பேராசிரியர். மரபுக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்பட பாடலாசிரியர், என பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டிருப்பவர். சென்னை, புதுக்கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும், சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளாராகவும் பணியாற்றியவர். ஈரோடு தமிழன்பன் வணக்கம் வள்ளுவ நூலுக்காக சாகித்ய அகாதமி (2004) விருது பெற்றவர். இப்பாடல்கள் அழகும், ஓசையும், கற்பனையும் நயமும் எதார்த்தமும் எளிமையும் அமையப் பெற்றவை.கட்டுத்திட்டமான எதுகை மோனைகள் யாப்புவிதிமுறைகள் நெகிழ்ந்துபோய் குழந்தைகளோடு குழந்தையாகப் பாடுகின்றன. ஆடுகின்றன. எந்த இலக்கணத்தில் புன்னகையை அடக்க முடியும் எந்த வரன்முறையில் பூக்களின் அசைவுகளை, அழகு அதிர்வுகளைப் பதிவு செய்ய முடியும்.
