Skip to product information
உலகை உலுக்கிய உழவர்களின் டெல்லி போராட்டம்
Rs. 120.00
Rs. 96.00
Save 20%
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பிஜேபி ஒன்றிய அரசு எடுத்துக் கொண்ட முயற்சிகளைவிட, தமிழ்நாட்டில் இப்போராட்டத்தைத் தடுப்பதற்கும், சீர்குலைப்பதற்கும் அப்போதிருந்த அதிமுக ஆட்சி எடுத்துக் கொண்ட முயற்சி கூடுதல் என்றே சொல்லலாம். காவல்துறையை ஏவி போராட்டத்தைத் தடுப்பது, பொய் வழக்குப் போராடுவது, விவசாயிகளை அச்சுறுத்துவது, போராட்டத்திற்கு ஆதரவானவர்களை மிரட்டுவது, வீட்டுக்காவலில் வைப்பது என தமிழ்நாட்டி ல் இப்போராட்டத்தை எப்படியாவது பலவீனப்படுத்திட வேண்டுமென பகீரதபிரயத்தன முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், இத்தனை தடைகளையும் மீறி தேசீய அளவில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி கொடுத்த அனைத்து அறைகூவல்களும் வெற்றிகரமாக நடத்தப்பட்டன என்பதைப் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.
