Skip to product information
தீண்டத்தகாதவன்
Rs. 130.00
Rs. 104.00
Save 20%
தமிழக தலித் இலக்கியத்திற்கே வழிகாட்டியவர்கள் டேனியல் போன்ற ஈழத்து தலித் எழுத்தாளர்கள்தான். பெரும்பாலான தலித் எழுத்துக்கள் தன் வரலாறாகத்தான் படைக்கப்படுகின்றன. 1980களில் மராட்டியம் இதற்கு வழிகாட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால் 1951ல் தமிழில் எழுதப்பெற்ற தலித் பதிவை வாசிக்கும்போது தமிழ் தான் அதற்கு முன்னோடி என உரத்துக்கூறி மனம் எழுச்சி பெறுகிறது. அ.மார்க்ஸை டேனியலோடு சேர்த்து வைத்து சந்தித்த காலங்களும் டேனியல் தலித் இலக்கிய விருது வழங்கிய காலங்களும் நிழலாடுகின்றன. தமிழ் உலகம் போற்றி வரவேற்க வேண்டிய காலப் பெட்டகம் இது.
