Skip to product information
தங்க மாங்கனி: சிறுவர்களுக்கான நாட்டுப்புறக் கதைகள்
Rs. 120.00
Rs. 96.00
Save 20%
இந்த நூலில் ஆறு கதைகளைக் கொண்டு வந்திருக்கிறேன். இந்த கதைகளின் சொந்தக்காரன் நான் இல்லை. இவை நாட்டுப்புறக் கதைகள். கதைக்கட்டி வாழ்ந்த நம் முன்னோர்கள் கட்டிய கதைகள். வாய்மொழியாக சொல்லப்பட்டவை. பலரும் கேட்டு கேட்டு, பல தலைமுறைகளை கடந்து வந்த கதைகள். இந்தக் கதைகளை களத்திற்கு சென்று சேகரிக்கவில்லை. நான் வளர்ந்த காலத்தில், எங்கள் ஊரில் எனக்குக் கிடைத்தவை. கிடைத்தவற்றை அப்படியே எழுதிவிடவில்லை. கதையை மாற்றாமல் என்னுடைய சொற்களில் சொல்லியிருக்கிறேன். இதை மறுபடைப்பு என்றும் சொல்லலாம். இந்தக் கதைகள் கற்பனை அழகுள்ளவை. சில செய்திகளை தன்னுள் பதுக்கி வைத்துள்ளவை. படித்துப் பாருங்கள். ஆனால், படிப்பதோடு நிறுத்தி விடாதீர்கள். மற்றவர்களிடம் சொல்லிப் பழகுங்கள். அப்படி பழகினால் நீங்களும் கதைச்சொல்லி ஆகலாம். சரியா!
