Skip to product information
தண்டனை
Rs. 200.00
காலந்தோறும் ஒவ்வொரு நாட்டிலும் மாறிவரும் அரசியல் சமூகச் சூழலுக்கேற்பச் சிறைகளும் அவை நிறைவேற்றும் தண்டனைகளும் மாறி வந்துள்ளன. மனிதனை நல்வழிப்படுத்தல் என்னும் போர்வையில் சிறைவாசத்தில் நிறைவேற்றப்படும் அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் கணக்கிலடங்காதவை. சில நேரங்களில், அங்கு அரங்கேறும் சித்திரவதைகள் மனித உரிமை மீறலின் உச்சமாக இருக்கும். ஆனால், அவற்றை வரலாற்று நூல்கள் மறைக்க முயன்றாலும் அத்தகையச் சமூக அவலங்கள் கலை இலக்கியத்தில் பதிவாவதைத் தடுக்க இயலாது. இதனை மீண்டும் நிறுவும் விதமாக 2018ஆம் ஆண்டில் வெளியான ‘தண்டனை’ என்னும் தஹர் பென் ஜெலூனின் தன்புனைவு புதினம் அமைந்துள்ளது.