Skip to product information
புதியன புகுதலும்
Rs. 270.00
Rs. 216.00
Save 20%
பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதம் தலித் வரலாற்று மாதமாகக் கொண்டாடப்படுவதை ஒட்டி நீலம் பண்பாட்டு மையம் 'வானம் கலைத் திருவிழா' என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறது. அவற்றில் 'வேர்ச்சொல் - தலித் இலக்கியக் கூடுகை' பிரதானமானது. அக்கூடுகையில் 2025ஆம் ஆண்டுக்கான வேர்ச்சொல் விருது எழுத்தாளர் ப.சிவகாமி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அப்பின்னணியில் அவரைப் பற்றிய மதிப்பீடுகள், நினைவுகள், மறுபதிவுகள் கொண்ட நூலாக இத்தொகுப்பு வெளியாகிறது. எழுத்தாளர், இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, அரசியல் தலைவர், பத்திரிகையாளர் என்றமைந்த ப.சிவகாமியின் பன்முகத்தை இத்தொகுப்பு விரிவாகவும் நுட்பமாகவும் இனங்காட்டியிருக்கிறது.