Skip to product information
ஓசை உடைத்த கவிதைகளில் இசை
Rs. 190.00
Rs. 152.00
Save 20%
தமிழ்க் கலாச்சாரத்தில் இசை ஏற்படுத்தும் தாக்கம், தமிழிசை வரலாற்றின் மைல் கற்கள், தென்னிந்திய இசை வடிவங்களின் சமுதாய மற்றும் கலாச்சாரக் குறியீடுகள், இசை வல்லுனர்களின் சிறப்பம்சங்கள்; அவர்களின் சோதனைகள்; சாதனைகள்; அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவக் குறிப்புகள், நவீன தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் போன்றவை இக்கட்டுரைகளில் இடம் பெற்றுள்ளன. பார்வையில் படாத பழங்கவிதைகள், நூற்றுக்கணக்கான புதுக்கவிதைகள் போன்றவை பாடலாகியுள்ள விதம், சங்கீதத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவு என இசையின் பன்முகத் தளங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஒரு நாவலின் அத்யாயங்களைப் படிப்பதுபோல அவ்வளவு எளிமையாக சுவாரஸ்யமாக விவரிக்கப்பட்டுள்ளன. ரவிசுப்பிரமணியத்தின் இந்நூல் இசை சார்ந்த எழுத்துக்கு ஒரு புது வரவு. திவாகர் சுப்பிரமணியம்
