Skip to product information
உமார் கயாம் (வரலாற்று நாவல்)
Rs. 250.00
Rs. 200.00
Save 20%
உலகமகா கவிகளுள் ஒருவரான உமார் கயாமின் இளமைக் கால காதல் வாழ்வை, சுவையும் விறுவிறுப்பும் நிறைந்த ஒரு தொடர் கதையாக "காதல்" மாத இதழில் திரு. நாரா. நாச்சியப்பன் அவர்கள் எழுதினார். பதினொன்றாம் நூற்றாண்டில் பெர்ஷியாவில் (தற்பொழுதைய ஈரான்) பிறந்தவர் உமார் கயாம். பழைமைவாத மதத் தலைவர்களின் பல வகையான எதிர்ப்புகளுக்குமிடையே, ராஜவமிச ஆதரவினால் உமார் கயாம் மேற்கொண்ட வான் மண்டல ஆராய்வுகளும், கணித தெளிவு முறைகளும் பிற்கால வளர்ச்சிகளுக்கு பெரிதும் உதவின. அரசியல் மாற்றங்களினால் அவருடைய வாழ்வு நிலை அவ்வப்பொழுது பாதிப்புக்கு உள்ளாயினும், அவரது நான்கு வரிப் பாடல்கள் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. வாசகர்களின் பேராதரவைப் பெற்ற அந்த வரலாற்று நாவலை இப்பொழுது புத்தகமாக வெளியிடுவதில் பெரிதும் உவகை அடைகின்றோம்.