Skip to product information
நீர் பிறக்குமுன்
Rs. 60.00
Rs. 48.00
Save 20%
ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலராக இருந்த இந்திரா, தனது பகுதியிலுள்ள தலித் மக்களின் பதினைந்தாண்டு காலக் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வுகாண மேற்கொண்ட நேர்மையான, சாத்வீகமான தொடர் போராட்டத்தை உணர்வுபூர்வமாக விவரிக்கும் நூல். அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் தனது உறவினர்களின் நேரடியான, மறைமுகமான எதிர்ப்புகளையும் ஏளனங்களையும், ஒரு பெண் என்பதனால் தான் அடைந்த அவமானங்களையும் பொருட்படுத்தாமல், நீரின்றித் தவித்தலைந்த தலித் மக்களின் தாகம் தணிக்க மேற்கொண்ட அறப்போராட்டத்தை மிகையேதுமின்றி, சரளமான நடையில் இந்நூலில் பதிவு செய்துள்ளார் இந்திரா.
