Skip to product information
மதினிமார்கள் கதை
Rs. 80.00
Rs. 64.00
Save 20%
கோணங்கியின் முதல் கட்டக் கதைகளில் தென்படும் சூழலின் வெறுமையும் சில பாத்திர வார்ப்புகளில் அறிய நேர்கிற தன்னிரக்கமும் மிக முக்கியமானது.தமிழ்க் கதை சொல்லல் மரபில் கோணங்கியின் கழுதையாவாரிகள்,மாயாண்டிக் கொத்தனின் ரஸமட்டம்,ஆதி விருட்சம்,கொல்லனின் ஆறு பெண்மக்கள்,அப்பாவின் குகையில் இருக்கிறேன்,சலூன் நாற்காலியில் சுழன்றபடி,நான்கு பக்கமும் மரணவாசல்,நீலநிறக் குதிரைகள் போன்ற கதைகள் ஏற்படுத்துகிற மன உணர்வுகள் தனித்துவமிக்கவை.கழுதையாவாரிகள் கதையில் ராசப்பன் அடையும் மனநிலை கழுதையடையும் நிலையுடன் ஒத்தபடியிருக்கிறது.ராசப்பனும் கழுதையும் சூழலில் ஒன்றெனவே பதிவு பெறுகிறார்கள்.தனது ரஸமட்டத்துடன் பெருநகரங்களை அளக்கும் மாயாண்டிக் கொத்தனும் தமிழுக்கு கோணங்கியின் வழி புதிதாக அறிமுகமாகிறார்கள்
