Skip to product information
மாட வீடுகளின் தனிமை
Rs. 220.00
Rs. 176.00
Save 20%
அந்த வருடம் கார்மழையற்றுப் போனது. காற்றுக்காலம் தொடங்கியதும் வெள்ளாமையில்லாமல் தோட்டவெளி எங்கும் வெறுமையானது. குடியானவர்கள் பண்டம்பாடிகளை விற்றுக் கொண்டிருந்தனர். மில்காரர்கள் வந்து தெற்கு வளவுத் தோட்டத்தை விலைக்குக் கேட்டனர். சித்தப்பாக்கள் யாரையும் கேட்காமல் விற்று விட்டனர். சிறிது நாட்களில் அவர்கள் எல்லோரும் நகரத்தை நோக்கிப் போயினர். சித்திமார்கள் இல்லாமல் வீடே வெறிச்சோடிப் போனது. மனோகரியக்காவும் பெரியம்மாவும் தனித்தே கிடந்தனர். நாளாக நாளாகப் பேச்சுக்கூட வீடு கிணற்றுக்குள் இருந்து பேசுவதுபோல எதிரொலிக்கத் தொடங்கிற்று. அப்புச்சி வெளியில் எங்கும் கிளம்பிப் போவதேயில்லை. ஆசாரத்து ஊஞ்சலே கதியென உட்கார்ந்து கிடந்தார்.