கண்கொத்திப் பறவை
படைப்பாளிகளுக்கேயுரிய இயல்பான மெல்லிய மனதிற்கு சொந்தக்காரரான சத்ரியனின் மெல்லுணர்வுகள் எளியத் தமிழில் இந்நூலில் பதியப்பட்டுள்ளன. ஒரு முறை இத்தொகுப்பை முழுமையாக வாசிக்கும் ஆணோ, பெண்ணோ தங்களால் உணரமுடியாத காதலின் இன்னொரு அனுபவத்தை பெறுவது உறுதி! “மாரி காலத்திற்கு தானியம் சேகரிக்கும் எறும்புகள் போல, மரணகாலத்திற்கு உன் நினவுகளைச் சேகரித்து வைக்கிறேன்” என்னும் கவிதைவருஇகளில், கவிதை மனம் மரணத்தை வெல்கிறது. “உளி வேண்டாம் ஒரு துளி மட்டும் உன்னிடம் தந்தால் போதும் உயிர்ச்சிலை செய்துதரும் அதிசயப் பிறவி நீ” இப்படி தொகுப்பு முழுக்க காதல் சொட்டும் கவிதை வரிகள் அடர்ந்த தொகுப்பின் 128 பக்கங்களும் அழகிய உயர்ரக தாளில் அச்சிடப் பட்டு மிகக் குறைவாக ரூ.90 மட்டுமே விலை வைக்கப்பட்டுள்ளதின் நோக்கம் எல்லோரிடமும் இது சென்று சேர வேண்டும் என்பதற்கே.