ஞானி
Rs. 380.00
Rs. 304.00
Save 20%
மார்க்சிய சிந்தனையாளரான மறைந்த ஞானி [ கி . பழனிச்சாமி ] அவர்களைப் பற்றிய ஜெயமோகனின் நினைவுக்குறிப்புகள் இவை . ஜெயமோகன் எப்போதும் ஞானியை தன் ஆசிரியர் என குறிப்பிட்டு வந்தவர் . ஞானியும் அவ்வண்ணமே ஜெயமோகனை தன் மாணவன் என்றே குறிப்பிட்டுவந்தார் . ஞானியுடன் என் உறவு என்பது முழுக்க முழுக்க இலக்கியம் வரலாறு சார்ந்தது . தனிப்பட்ட பிரியம் இருந்தது . ஆனால் அவருடைய குடும்பம் , தனிவாழ்க்கை பற்றி எதுவுமே தெரிந்துகொள்ளவில்லை . அவருடனான உரையாடல்களே அவர் குறித்த என் நினைவுகள் . ஆகவே இந்நூலில் அவருடன் என் உரையாடல் சார்ந்த சித்திரம் மட்டுமே உள்ளது ” என்று ஜெயமோகன் முன்னுரையில் சொல்கிறார் . ஞானியை அவருடைய உரையாடல்கள் வழியாக தொகுத்துக்கொள்வதை, வகுத்துக்கொள்வதை இந்நூல் செய்கிறது