Skip to product information
கெத்து – இலட்சுமணப் பெருமாள் கதைகள்
Rs. 80.00
Rs. 64.00
Save 20%
கரிசல் வட்டார வாழ்க்கையை உச்சமான அங்கதச் சுவையுடன் தன் சிறுகதைகளில் படைத்து வருபவர் தோழர் லட்சுமணப் பெருமாள். சார்லி சாப்ளின் படங்களில் வருவது போல நகைச்சுவைக்கு மறுபக்கமாகவும், அதன் உள்ளார்ந்தும் இருப்பது இந்த சமூக வாழ்வின் துயரமும் நெருக்கடிகளும் தான். கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணன் போட்ட பாதையில் அதிகம் பேச்சு மொழியைக் கைக் கொண்டு கதை சொல்பவர். வில்லிசைக் கலைஞராகவும் இன்னொரு பரிமாணம் கொண்டுள்ள இவரது நடையில் கதைகள் “ஜல் ஜல்” என்று பயணிக்கும் வேகம் கொண்டவை.
