தர்ம சாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை
தர்ம சாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை “தர்மசங்கடம் என்பது முற்றிலும் முரண்பாடான இரு நிலைகளுள் எதனை ஏற்பது என்று தவிக்கும் நிலை. இது யோக்கியர்களுக்கு மட்டுமே அடிக்கடி ஏற்படும்.” அயோக்கியர்களுக்கு இந்தக் கவலையே இல்லை. ஏனெனில் அவர்களது ஆசைகளே அவர்களை வழிநடத்திச் செல்கின்றன. முக்கால்வாசி மக்கள் முழுக் கெட்டவர்களும் இல்லை. முழு நல்லவர்களும் இல்லை. ஒருபுறம் தர்மம் அவர்கள் மனதை ஈர்க்கும். மறுபுறம் ஆசாபாசங்கள் அவர்களை இழுக்கும். இத்தகைய மக்களுக்காகவே, தடுமாற்றத்தால் தத்தளிப்பவர்களை நல் வழிப்படுத்துவதற்காகவே நம் முன்னோர்களால் தர்ம சாஸ்திரங்கள் அருளப்பட்டுள்ளன. ராகு காலத்தில் பயணம் செய்வது போன்ற சிறு பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்வது முதற்கொண்டு மிகப் பெரிய பிரச்சனைகளிலிருந்து விடுபடுவது வரைக்குமான அனைத்திற்கும் அவற்றில் துல்லியமான விளக்கங்கள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் பற்றி இந்த நூலில் நாம் விரிவாகக் காணலாம்.