Skip to product information
சிலோன்
Rs. 220.00
Rs. 176.00
Save 20%
’சிலோன்’ தொகுப்பில் உள்ள கதைகள் படரும் இடங்களும் மனிதர்களும் ஏறக்குறைய அரை நூற்றாண்டாய் என் மனதில் மாறாமல் கனன்று கொண்டிருப்பவை. மலையகம் சார்ந்த கதைகள் முப்பதுகள் தொடங்கி இன்று வரை வந்து கொண்டுதானிருக்கின்றன. இருப்பினும் இம்மனிதர்கள் குறித்து வந்த படைப்புகளில் பெரும்பாலானவை மலையக மண்ணிலிருந்தே எழுதப்பட்டவை அல்லது அங்கிருந்து தாயகம் திரும்பியவர்களால் எழுதப்பட்டவை. தமிழ்நாட்டின் படைப்பாளிகளில் இவர்களது துயர வாழ்வைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியவர்கள் புதுமைப்பித்தன் போன்ற வெகு சில படைப்பாளிகளே. அந்த வகையில் தோழர் பிரசாந்தின் ‘சிலோன்’ முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது.
