Skip to product information
புத்தனாவது சுலபம்
Rs. 200.00
Rs. 160.00
Save 20%
புத்தனாவது சுலபம்: தனது கதைகளில் கற்பனைக்கும், யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
இலவம்பஞ்சு ஒரு போதும் காற்றைக் கண்டு பயப்படுவதில்லை. அது மரத்திலிருந்து விடுபட்டுப் பறக்கிறது. அந்த விடுபடலை யாராலும் தடுக்கவே முடியாது. காற்றில் பறந்து உலகின் முடிவற்ற நிலப்பரப்புகளை நோக்கி அது பயணிக்கிறது. பிள்ளைகளும் அப்படித்தான். அவர்களுக்கு வீடு போதுமானதில்லை. உலகை நோக்கி பறந்து போகவே செய்வார்கள். அதைத் தந்தையால் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஒவ்வொரு தந்தையும் புத்தனை பாதுகாத்த தந்தையைப் போல உலகிடமிருந்து பிள்ளையைப் பாதுகாக்கவே செய்கிறான். ஆனால் உலகம் தான் கடைசியில் வெல்லுகிறது.