அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்
இன்னொரு சமயத்தில் அதே நாளேடு ஹிட்லர் தனது சோவியத் யூனியன் யுத்தத்திற்குப் பின் இந்தியாவின் மீது படையெடுக்கத் திட்டம் தீட்டியிருந்தார் என்று வரைபடத்துடன் கூடிய அவரது திட்டத்தை வெளியிட்டிருந்தது. நமது தேச விடுதலைக்காக, நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஹிட்லரின் உதவியை நாடியது; 'அவசரநிலை' காலத்தில் பிரதமர் இந்திராவை ஹிட்லருடன் ஒப்பிட்டுக் கேலிச் சித்திரங்கள், கட்டுரைகள் வெளியானது, ஹிட்லரால் இலட்சக்கணக்கான உயிர்கள் பலியானது போன்ற செய்திகள் ஹிட்லரைப் பற்றி மேலும் அறிவதற்கு என்னைத் தூண்டின. அதையடுத்து ஹிட்லரைப் பற்றிய கதை, கட்டுரை நாவல்... என எது கிடைத்தாலும் வாசிக்கத் தொடங்கினேன் .அந்த வகையில் இராபர்ட் பேனெ எழுதிய THE LIFE AND DEATH OF ADOLF HITLER என்னும் நூலினை படித்த போது,அது என்னை மிகவும் கவரவே,அதைத் தமிழில் மொழிபெயர்க்கலாமே என்று எண்ணினேன்.