KS

யானைகளும் அரசர்களும்: சுற்றுச்சூழல் வரலாறு

Sale price  Rs. 232.00 Regular price Rs. 290.00
Skip to product information
KS

யானைகளும் அரசர்களும்: சுற்றுச்சூழல் வரலாறு

Rs. 290.00 Rs. 232.00
Save 20%

இந்த நூலில் ஆசிரியரின் கவனம் போர் யானைகளைப் பற்றியது. காலாட்படை, குதிரைப்படை, தேர், இவற்றுடன் யானைப்படையும் ஒன்றாக இருந்தது. ஒரு காலகட்டத்தில் இந்திய மன்னனின் படையில் குதிரைகளைவிட யானைகள் மிகுந்திருந்தன. குதிரையை இறக்குமதி செய்தாக வேண்டும். ஆனால் முதிர்ந்த யானைகளைக் காட்டிலிருந்து பிடித்துக் கொண்டுவந்து பழக்கினார்கள். ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளாக யானைகள் ஆசியாவின் பல போர்க்களங்களில் இயங்கின. முற்றுகையிடுதலிலும் கோட்டை கொத்தளங்களை தாக்குவதிலும் யானைகள் முக்கிய பங்காற்றின. அரசர்கள் யானையின் சிறப்பை உணர்ந்திருந்ததால் காடுகளை பாதுகாப்பதின் தேவையை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்கிறார் நூலாசிரியர். இந்தியாவிலிருந்து போர்யானை எவ்வாறு மேற்கு நாடுகளுக்கும், கிழக்கு நாடுகளுகும் பரவியது என்பதையும் டிரவுட்மன் விளக்குகின்றார்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
தாமஸ் டிரவுட்மன்
அட்டை:
காகித அட்டை
பதிப்பு:
முதற் பதிப்பு - 2022

You may also like