UnnAI அறிந்தால்
AI உங்கள் வேலையைப் பறிக்கப் போவதில்லை; ஆனால் AI தெரிந்த ஒருவர் உங்கள் வேலையைப் பறிக்கக்கூடும்! தொழில்நுட்பம் என்பது இனி சிலருக்கு மட்டுமானதல்ல; அது நம் அனைவருக்குமானது. உலகை மாற்றிக்கொண்டிருக்கும் 'ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்' (AI) எனும் மாயக்கண்ணாடியை, ஒரு பாமரத் தமிழனும் புரிந்துகொள்ளும் வகையில் உடைத்துக்காட்டுகிறது இந்தப் புத்தகம். தஞ்சாவூர் விவசாயி முதல் திண்டுக்கல் ஆசிரியை வரை, ஒரு சாமானியனின் அன்றாட வாழ்வில் AI எப்படியெல்லாம் புரட்சியை ஏற்படுத்தப்போகிறது என்பதை மிக எளிய கதைகளுடன் விளக்குகிறார் சாமுவேல் மாத்யூ. இது வெறும் தொழில்நுட்பப் புத்தகம் அல்ல; பயத்தைப் போக்கி, தன்னம்பிக்கையை ஊட்டி, உங்களை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு வழிகாட்டி. இந்தப்புத்தகம் உங்களுக்காகத் திறக்கும் புதிய கதவுகள்: சிக்கலான AI கருவிகளை எளிய தமிழில் புரிந்துகொள்ளலாம். கல்வி, விவசாயம், மருத்துவம், வியாபாரம் என அனைத்துத் துறைகளிலும் ஏஐ-யின் மாயாஜாலங்கள். வேலையைச் சுமையின்றி முடிக்க உதவும் 'ப்ராம்ப்ட்' (Prompt) எனும் மந்திரக்கோல். பிரத்யேகமான www.unnai.in இணையதளம் மூலம் புத்தகம் தாண்டிய நேரடிப் பயிற்சி. எதிர்காலம் என்பது அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கோ, ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கோ மட்டும் சொந்தமானதல்ல; மாறாக, காலத்திற்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்பவர்களுக்கே! பழைய தெருக்களில், புதிய கனவுகளுடன் நடைபோடத் தயாராகுங்கள். 'உன்னை அறிந்தால்'... உலகம் உனக்குக் கீழ்!