{"product_id":"tinguvidam-kelungal-paagam-2","title":"டிங்குவிடம் கேளுங்கள் (பாகம் - 2)","description":"\u003cp\u003e‘கேள்வி கேட்கும் குழந்தையே, அறிவின் விதையை விதைக்கும் விவசாயி’ என்று சொல்வது உண்டு. உலகின் மிகச் சிறந்த விஷயங்களில் ஒன்றாகவும் கடினமானதாகவும் இருப்பது ‘கேள்வி’ கேட்பதுதான்! ‘ஏன், எதற்கு, எப்படி’ போன்ற கேள்விகளாலேயே உலகம் உருவாகியிருக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eகுழந்தையாக இருக்கும்போது கேள்விகள் உதித்துக்கொண்டே இருக்கின்றன. வளர வளர கேள்விகள் கேட்பது குறையும். அதற்குக் காரணம், ‘பெரியவர்களும் ஆசிரியர்களும்தான் கேள்விகள் கேட்பார்கள்; பதில் சொல்வது குழந்தைகள், மாணவர்களின் பொறுப்பு’ என்கிற எழுதப்படாத விதி ஒன்று இங்கே இருப்பதுதான். அதனால், கேள்வி கேட்க நினைக்கும் மாணவர்களின் இயல்பான ஆர்வம் தொலைந்துவிடுகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஉங்கள் கைகளில் தவழும் ‘டிங்குவிடம் கேளுங்கள்’ இரண்டாம் பாகம், வெறும் புத்தகம் அல்ல. இது ஓர் அறிவியல் களஞ்சியம். இந்து தமிழ் திசை ‘மாயா பஜார்’ இணைப்பிதழில் ‘டிங்குவிடம் கேளுங்கள்’ பகுதியில் கேட்கப்பட்ட அற்புதமான கேள்விகளின் தொகுப்பு இது.\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"tinguvidam kelungal paagam 2","offer_id":53117261447531,"sku":"BK00181","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/tinguvidam-kelungal-paagam-2.jpg?v=1773999405","url":"https:\/\/anytamilbooks.com\/products\/tinguvidam-kelungal-paagam-2","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}