{"product_id":"tamilnadu-varalaru","title":"தமிழ்நாட்டு வரலாறு","description":"\u003cp\u003eதமிழ்நாட்டு வரலாறு பேராசிரியர் கே.ராஜய்யனின் இந்நூல் 40 ஆண்டுகால உழைப்பில் கிடைத்த அறுவடை. தமிழரின் மத - ஆன்மீகத் தத்துவத்தைத் திராவிடம் என்று தனித்துக் கூறுவதுடன், இழந்துபோன தமிழ் அடையாளத்தை மறு கண்டுபிடிப்புச் செய்கிறது. களப்பிரர் காலம் இருண்ட காலமல்ல, அவர்களது காலத்தில்தான் குறளும், சிலம்பும், மேகலையும் உருக்கொண்டன. அது சமண - பௌத்தர் மேலோங்கியிருந்த காலமாதலால், இருண்ட காலமாக்கப்பட்டது என்கிறது. பழங்காலத்திலிருந்து, விடுதலை பெற்றது வரையிலான ஆட்சியதிகாரம் சார்ந்த வரலாற்றுடன் நின்றுவிடாமல், தமிழீழப் போராட்டம் வரையிலான நவீன வரலாற்றையும் சேர்த்து, தமிழரின் பண்பாட்டுக் கொடையினையும் வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1800 - 1801 தென்னிந்தியக் கலகத்திலிருந்து தொடங்குகிறது என்று நிறுவுகிறது. பெரியார் உள்ளிட்ட வரலாற்று ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் சாதக - பாதக அம்சங்களுடன் பரிசீலித்து, ல்லியமானதும், முழுமையானதுமான ஒரு பதிவை நோக்கிய பெரியதொரு காலடிவைப்பை எடுத்துவைக்கிறது.\u003c\/p\u003e","brand":"எதிர் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53862499811691,"sku":"BK6557","price":440.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/tamilnadu-varalaru-10002682.png?v=1789558812","url":"https:\/\/anytamilbooks.com\/products\/tamilnadu-varalaru","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}