{"product_id":"nirami","title":"நிறமி","description":"\u003cp\u003eசமகாலத்தில் ஒலிக்கும் நவீனப் பெண்ணியக் குரலாகக் கலைமதி இத்தொகுப்பில் தன்னை அழுத்தமாக அடையாளப்படுத்தியிருக்கிறார். வாழ்வில் கடக்கும் பல்வேறு அனுபவங்கள் - பார்வைகள் இத்தொகுப்பில் கவிதையாக்கம் பெற்றுள்ளன. எழுத்து-சொல் - பொருள் - உணர்வு - கருத்தியல் கொண்ட கவிஞர் இவர் என்பதற்கு இக்கவிதைகள் சாட்சியாகத் திகழ்கின்றன. இத்தொகுப்பு கலைமதியை கவிதை தளத்தில் அடையாளப்படுத்தும் என்று கருதுகிறேன். வாசிப்பவர் மனதில் சிறுபொறியை தெறிக்கவிடும் என்று நம்புகிறேன் - கவிப்பேரரசு வைரமுத்து பால்யகாலத்தின் மீதான பிரம்மைகளால் உந்தப்பட்டவராக பல கவிதைகளில் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். நிறமி கவிதைகளின் குரல், உலகத்திற்கு புதிய குரல் என்றாலும் , அது புதியதொரு குரல் மாதிரி இல்லாமல் இருப்பதுதான் வியப்பு. கவிதையின் வெற்றிக்கு கவிதை குறித்த பிரக்ஞை அவசியம் என்று சொல்வார்கள். அந்த பிரக்ஞை தான் இக்கவிதைகளின் முழுமைக்கு காரணமாக இருக்கிறது - கவிஞர் சல்மா\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823521948011,"sku":"BK4043","price":64.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/nirami.jpg?v=1788861591","url":"https:\/\/anytamilbooks.com\/products\/nirami","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}