Skip to product information
By
தமிழ் திசை
நேர்முகம் கவனம்
Rs. 140.00
எழுத்துத் தேர்வில் உயரிய மதிப்பெண் குவிக்கும் பலர் சறுக்கி விழுவது நேர்முகத் தேர்வில்தான். இந்த சோகம், வழக்கமான அலுவலகப் பணிவாய்ப்பு முதல் குடிமைப் பணிவரை பொருந்தும். ஏனென்றால், நேர்முகத் தேர்வை அணுகுவதற்கான பாடத்திட்டம் எந்த பல்கலைக்கழகத்திலும் கிடையாது. இதற்கென குறுக்குவழியோ சூத்திரங்களோ கிடையாது. ஆனால், நேர்முகத் தேர்வில் வெற்றி பெற பல நுட்பங்கள் உள்ளன. அதன் அடிப்படையில்தான் தேர்வாளர்கள் நேர்முகத் தேர்வை நடத்தித் தங்களுக்கு தேவையான ஊழியர்களைத் தேர்வு செய்கிறார்கள். இத்தகைய நுட்பங்களை நுணுக்கமாக விளக்கும் புத்தகம்தான், ‘நேர்முகம்-கவனம்’.