Skip to product information
நரகத்தின் உப்புக்காற்று
Rs. 150.00
Rs. 120.00
Save 20%
‘எனக்குத் தொழில் கவிதை’ என்றான் பாரதி. தவறான இடத்தில் தவறான காலத்தில் பிறந்துவிட்டேன் என்றான் ஆத்மாநாம். ஒரு வகையில் மனிதன் என்கிற அர்த்தம் முடிந்துவிட்டது. அதை எப்படியெல்லாம் விளக்க முடியும் என்கிற இடத்தில்தான் அய்யப்ப மாதவனின் கவிதைகள் புழங்குகின்றன. கவிதையும் வாழ்வுமாய் நீண்ட காலம் இயங்கி வந்திருக்கும் அய்யப்ப மாதவனின் 15ஆவது தொகுப்பான ‘நரகத்தின் உப்புக்காற்று’ எனும் இத்தொகுப்பை அதற்கான ஒரு முன்னுரைக்கென வாசித்தபோது மேற்சொன்ன எண்ணங்கள் என் மனதில் பலவிதமான உணர்வுகளைத் தூண்டியது. - யவனிகா ஸ்ரீராம்
