Skip to product information
மரீஃபா
Rs. 330.00
Rs. 264.00
Save 20%
ஜெயமோகன் எழுதிய குற்றப்புலனாய்வு நாவல் இது. ஒரு குற்றத்திலிருந்து அதன் உளவியலுக்கும், அதிலிருந்து மெய்யியலுக்கும் செல்லும் ஒரு பயணம் இதில் உள்ளது. தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி வெவ்வேறு வகையான குற்றப்புலனாய்வாளர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் இதில் உள்ள துப்பறிவாளர் போல ஒருவர் வந்ததில்லை. அவர் வழியாகவே இந்த கதைகள் எல்லாமே ஒரு மெய்யியல் தளத்தை நோக்கி செல்கின்றன. மெய்யியல் என்பது ஒரு மீறல். குற்றம் என்பது இன்னொரு மீறல். மீறல்களே மனிதனின் அதீத எல்லைகளைக் காட்டுபவை. மனிதனின் ஆழ்ந்த இயல்பு வெளிப்படுபவை. ஆகவே அவை ஒன்றை ஒன்று காட்டும் இரு கண்ணாடிகள். வளைந்து வந்து சந்திக்கும் இரு எல்லைகள். ஆகவே கலை எப்போதுமே மீறல்களை நோக்கி ஆர்வம் கொண்டிருக்கிறது.