Skip to product information
மனதில் நிற்கும் மாணவர்கள்
Rs. 240.00
Rs. 192.00
Save 20%
ஓர் ஆசிரியர் தம் மாணவர்களைக் குறித்து எழுதியுள்ள முன்னோடி நூல். தம்மிடம் பயின்ற மாணவர்களைப் பற்றிப் பெருமாள்முருகன் எழுதிய நாற்பது கட்டுரைகளின் தொகுப்பு. அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறையாக உயர்கல்வி கற்க வருபவர்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் திறன், குடும்பச் சூழல், வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை நுட்பமான பார்வையுடன் இக்கட்டுரைகள் விவரிக்கின்றன. நம் கல்வி முறை பற்றிய பல்வேறு கோணங்களைப் போகிற போக்கில் சுட்டுச் செல்லும் தெறிப்புகள் நூலெங்கும் விரவியுள்ளன. எளிய மொழிநடையும் சுவையான சம்பவங்களுமாக வாசிப்புத்தன்மை கொண்ட நூல் இது.
