{"product_id":"la-sa-ra-therntheduththa-sirukathaikal","title":"லா.ச.ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகள்","description":"\u003cp\u003eஅப்பாவைப் பொறுத்த வரையில் அயராத உழைப்பாளி. தான் தேடும் நயம் கிடைக்கும் வரை மீண்டும் மீண்டுமெழுதியதையே பலமுறை எழுதத் தயங்கியதே இல்லை. அலுத்துக்கொள்வதும் இல்லை. அப்பாவின் சிறுகதைகள் பல அவரது நினைவின் அடிவாரத்தில் வருடக்கணக்கில் ஊறிக்கிடந்தவை. எந்த சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்டும் தொட்டுக் கொள்ள தன்நினைவை பழக்கிக்கொண்டவர். அவர் கதை எஉத உட்கார்ந்ததில்லை. கதை மனதில் உட்கார ஆரம்பிக்கும் போது எழுத ஆரம்பிப்பார். கதை தன்னை நடத்திக் கொள்ளும் போது அதன் உருவத்தை எழுத்தாக்கினார். பெண்குழந்தை தானாகத் தன்பருவம் அடைந்து கன்னியாவதைப் போல அப்பாவின் கதை எவருடைய வற்புறுத்தலுமின்றி தன் பக்குவம் அடைந்து கன்னிமை அடையும். அவரும் தன் கதையின் வேளைக்கு, தருணத்திற்குக் காத்திருந்தார். வற்புறுத்தப்படாத செழுமையில் அவர் கதைகள் இருப்பதால்தான் சிரஞ்சீவத்துவம் பெற்று விளங்குகின்றன. - லா.ச.ரா. சப்தரிஷி\u003c\/p\u003e","brand":"டிஸ்கவரி புக் பேலஸ்","offers":[{"title":"Default Title","offer_id":53823509889387,"sku":"BK3780","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/la-sa-ra-therntheduththa-sirukathaikal.jpg?v=1788861624","url":"https:\/\/anytamilbooks.com\/products\/la-sa-ra-therntheduththa-sirukathaikal","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}