Skip to product information
குறுந்தொகை
Rs. 275.00
Rs. 220.00
Save 20%
1930-இல் கலாநிலையம் எனும் இலக்கிய வார இதழில் கே. இராமரத்நம் ஐயரால் வாரந்தோறும் எழுதப்பெற்ற குறுந்தொகை உரையின் நூலாக்கம் தற்பொழுது செம்மைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்நூல் ஆய்வுரைப் பகுதிகளையும் உரைப்பகுதி வழியாக வருவிக்கப் பெற்ற பல்வேறு இணைப்புக்களையும் கொண்டுள்ளது. குறுந்தொகைப் பதிப்பு வரலாற்றை அறிந்தவர்கள் இவ்வாய்வுரைகளின் இணைப்புப் பகுதிகளின் அருமையையும் தேவையையும் இந்நூல் வழியாக அறிய இயலும்.