Skip to product information
குறளினிது
Rs. 150.00
Rs. 120.00
Save 20%
ஜெயமோகன் கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நிகழ்த்திய குறள் பற்றிய தொடர் உரையின் நூல்வடிவம் இது. உரை என்பதனால் சரளமான ஓட்டமும் உணர்ச்சிகரமான வேகமும் கொண்ட இந்நூல் எளிமையான வாசிப்புக்குரியது. ஆனால் குறள் பற்றிய ஒட்டுமொத்தமான பார்வையை செறிவாகவும் சுருக்கமாகவும் முன்வைக்கிறது. எளிமையான அன்றாட அரசியல் சார்ந்தும், சாதாரணமான உலகியல் பிரச்சினைகள் சார்ந்தும் குறளை விளக்கமுயலும் நூல்களுக்கு நடுவே இந்நூல் குறளை இந்திய மெய்ஞானமரபின் விரிவான பின்னணியில், சமண மரபின் தொடர்ச்சியில் வைத்து அணுகுகிறது. ஒரு தியானநூலாக, முடிவில்லாத ஆழம் கொண்ட மூலநூலாக குறளை முன்வைக்கிறது.