Skip to product information
கூழாங்கற்கள் பாடுகின்றன
Rs. 100.00
Rs. 80.00
Save 20%
கூழாங்கற்கள் பாடுகின்றன :
அலைவுறும் மேகம் போல சுற்றியலைந்த துறவிகளே ஜென் கவிஞர்களாக இருந்தார்கள். இயற்கையைப் பாடுதலே ஜென் கவிதைகளின் ஆதாரம். ஜென் கவிதைகள் ஜென் பௌத்த கோட்பாட்டின் சாரத்தில் ஊறியவை.
ஜென் கவிதைகள் உலகை நாம் முன் அறிந்த விதத்திலிருந்து உருமாற்றி நம்மை புதிய அனுபவத்திற்கு தயார்படுத்துகின்றன.
ஜென் கவிதையின் வாசகன் தனது பரபரப்புகளில் இருந்து விடுபட்டு கூழாங்கற்களை கையில் ஏந்தி தடவுவது போல வார்த்தைகளை மிருதுவாகத் தடவி அனுபவித்து அறியும்போது அவன் இயற்கையின் முடிவற்ற பாடலைக் கேட்கத்துவங்குகிறான். அதுவே ஜென் நிலை.