கார் நாற்பது களவழி நாற்பது: பதினெண்கீழ்க்கணக்கு நூல்(உரை), மதுரைக் கண்ணங்கூத்தனார், கௌரா பதிப்பகம்

கார் நாற்பது களவழி நாற்பது: பதினெண்கீழ்க்கணக்கு நூல்(உரை)

Sale price  Rs. 48.00 Regular price  Rs. 60.00
Skip to product information
கார் நாற்பது களவழி நாற்பது: பதினெண்கீழ்க்கணக்கு நூல்(உரை), மதுரைக் கண்ணங்கூத்தனார், கௌரா பதிப்பகம்

கார் நாற்பது களவழி நாற்பது: பதினெண்கீழ்க்கணக்கு நூல்(உரை)

Rs. 60.00 Rs. 48.00
Save 20%

அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவர் இயற்பெயர். கண்ணன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் வாழ்ந்த ஊர் மதுரை. இவர் இந் நூலின் முதற் செய்யுளில் முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனைக் குறித்துள்ளார். பலராமனைப் பற்றியும் நூலில் கூறியுள்ளார்(19). எனவே, இவர் வைணவ சமயத்தவராதல் கூடும். இவர் நூலில் வேள்வித் தீயையும் (7) கார்த்திகை நாளில் நாட்டவரால் ஏற்றப்படும் விளக்கையும்(26) கூறியுள்ளார். கார்த்திகை நாளில் விளக்கு வைத்து விழாக் கொண்டாடுதல் பண்டை வழக்கமாகும். நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுள் நூல் இறுதியில் தரப்பட்டுள்ளது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

எழுத்தாளர்:
மதுரைக் கண்ணங்கூத்தனார்
அட்டை:
காகித அட்டை
பக்கங்கள்:
80

You may also like