{"product_id":"kadalamma-pesuran-kannu","title":"கடலம்மா பேசுறங் கண்ணு!","description":"\u003cp\u003eகாடுகளில் வாழும் பழங்குடிகளைப் போல், கடலைச் சார்ந்து வாழ்பவர்களும் கடல் பழங்குடிகள்தான். அவர்களுடைய தொழிலும் பண்பாடும் பல விதங்களில் இன்றைக்கு மாறியிருந்தாலும்கூட, வேட்டை – உணவு சேகரிப்பு என்ற பண்டைய அடிப்படை அப்படியேதான் இருக்கிறது. தொழில் புரியும் விதம் மட்டும் நவீனமடைந்திருக்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eதமிழகத்திலும் இந்தியாவிலும் மீனவ மக்கள் குறித்த கவனம் மிகக் குறைவாகவே இருக்கிறது. தமிழகக் கடற்கரையெங்கும் விரவியுள்ள மீனவர்கள் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது ஒருபுறம். மற்றொருபுறம் சமவெளி மக்களும் நமது கடல்களையும் மீனவ மக்களையும் சரிவரப் புரிந்துகொள்ளாமல் இருப்பதே நிதர்சன நிலை.\u003c\/p\u003e\n\u003cp\u003eசமவெளியில் வேளாண்மை பெரும் ஆபத்தை எதிர்கொண்டிருப்பதைப் போலவே, மீனவர்களின் வாழ்வாதாரமான கடல் வளமும் ஆபத்தின் விளிம்பில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. அள்ள அள்ளக் குறையாத வளமாகக் கருதப்பட்ட கடல்கள், இன்றைக்குப் பெரும் தடுமாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன. அதன் காரணமாகவும் அரசியல்ரீதியிலும் மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"kadalamma pesuran kannu","offer_id":53117261513067,"sku":"BK00179","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kadalamma-pesuran-kannu.jpg?v=1773919982","url":"https:\/\/anytamilbooks.com\/products\/kadalamma-pesuran-kannu","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}