Skip to product information
இன்னும் மனிதர்கள்
Rs. 150.00
Rs. 120.00
Save 20%
இன்று நவீன தமிழ் இலக்கியம் எதார்த்தத்தை தாண்டி வெவ்வேறு கதையாடல்களில், சொல்லாடல்களில், இசங்களில், நுட்பமான மொழிக் கட்டுமானங்களில், தொன்மங்களின் பரிமாணங்களில் அசுர பாய்ச்சலில் பாய்கிறது என சொல்லப் படுகிறது. இருக்கலாம். ஆனால் வாழ்வும் அதில் பின்னிப் பிணைந்திருக்கும் சிக்கலான முடிச்சுகளும், மனிதர்களின் மன உலகமும் அதில் சஞ்சரிக்கும் விசித்திரமான போக்குகளும் எல்லாக் காலங்களிலும் இலக்கியத்துக்கும் மட்டுமல்ல அரசியல், பொருளாதாரம் என எல்லாத் துறைகளுக்கும் அஸ்திவாரம்தான். இன்றைய புதுமை நாளைய பழமை. நேற்றைய பழைமை இன்றைய புதுமை.. இந்த சக்கரம் எப்போதும் இப்படித்தான் சுற்ரிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தக் கதைகள் நிஜமானவை; இயல்பானவை.