{"product_id":"inaiya-siraiyin-panaya-kaithigal","title":"இனையச் சிறையின் பணயக் கைதிகள்","description":"\u003cp\u003eஇணையம் இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத அளவுக்கு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இணையமும் அது தொடர்பான கருவிகளின் பயன்பாடும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. உலக மக்கள் தொகையில் 4.66 பில்லியன் மக்கள் அதாவது, சுமார் 460 கோடி பேருக்கும் மேல் துடிப்பாக இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது உலக மக்கள் தொகையில் 59 சதவீதம். இதில் 91 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் கைப்பேசி வழியாகத்தான் இணையத்தை அணுகுவதாக அண்மையில் வெளியான ஓர் ஆய்வின் முடிவு சொல்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eதற்போது கிடைக்கும் தரம் உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்களின் வரவு இணையத்தை அணுகுவதை இன்னும் எளிமையாக்கி விட்டது என்றே கூறலாம். மனிதனும் கணினியும் தொடர்பு கொள்ளும் விதத்தில் மனித மனம் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பற்றியும், அதன் நன்மை தீமைகள் என்ன என்பதைப் பற்றியும் விளக்குவது தான் ‘சைபர் சைக்காலஜி' என்ற பிரிவு. உளவியலின் இப்பிரிவு சற்றே கடினமானதாகவும் புதுமையானதாகவும் இருந்தாலும் எளிதில் விளங்கும்படியாக எழுதியுள்ளார் மருத்துவர் மோகன வெங்கடாசலபதி. கைப்பேசிப் பயன்பாட்டிலும், அதன் மூலம் சமூக வலைதளங்களை அணுகுவதிலும் இத்தனை விஷயங்கள் உள்ளனவா என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன இந்த நூலின் அத்தியாங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"தமிழ் திசை","offers":[{"title":"inaiya siraiyin panaya kaithigal","offer_id":53117264298347,"sku":"BK00107","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/inaisiraiyinpanaikaithi.jpg?v=1772539268","url":"https:\/\/anytamilbooks.com\/products\/inaiya-siraiyin-panaya-kaithigal","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}