இலக்கு : ஐஏஸ்
பெரும் சவால்களைச் சந்திக்க நேர்ந்தபோதிலும், மனம் தளராத விடாமுயற்சியுடன், உலகிலேயே மிகவும் கடுமையான போட்டித் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற ‘யூபிஎஸ்சி’ தேர்வில் வெற்றி பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் போராட்டங்களை இந்நூல் சித்தரிக்கிறது. சிக்கிமைச் சேர்ந்த, பார்வைத் திறனற்ற ஓர் இளம்பெண், கேரளாவைச் சேர்ந்த ஓர் அரசு எழுத்தர், காஷ்மீரைச் சேர்ந்த ஓர் இளைஞர், இராஜஸ்தானைச் சேர்ந்த ஓர் ஐஐடி பட்டதாரி ஆகியோர் உட்பட, ஐஏஎஸ் கனவை நனவாக்கியுள்ள ஏழு இளம் ஐஏஎஸ் அதிகாரிகளின் தனித்துவமான கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதில் பகிரப்பட்டுள்ள, அந்த அசாதாரணமான சாதனையாளர்கள் பயன்படுத்திய உத்திகள், இத்தேர்வை எழுதத் துடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறப்பான உள்நோக்குகளை வழங்கும். விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, இலட்சியக் கனவு ஆகியவற்றின் சக்திக்கான நிரூபணமாக இக்கதைகள் திகழ்கின்றன. உங்களுடைய கனவு ஓர் ஐஏஎஸ் அதிகாரியாக ஆவதாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்தவொரு பெரிய இலக்காக இருந்தாலும் சரி, அக்கனவைப் பின்தொடர இந்நூல் உங்களுக்குப் பெரும் உத்வேகமூட்டும் என்பது உறுதி.
