காந்தியத் தடம்
கட்டுரைகளின் தலைப்புகள் வெவ்வேறாக இருப்பினும், எல்லாவற்றிற்கும் கதாநாயகன் காந்திதான். அனைத்துக் கட்டுரைகளுமே காந்திய இழைகளைக் கொண்டு பின்னப்பட்டவையே. இஃது ஒரு தொகுப்பு நூலாக இருப்பதால், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் இதற்கு இட்ட தலைப்புதான் 'காந்தியத் தடம்" நூலாசிரியர் ஒவ்வொரு வாசகரும் தெரிந்துகொள்ள வேண்டிய பல முக்கியமான உண்மைகளை அவர் தேடித்தேடித் தொகுத்துள்ளார். அவருடைய உழைப்பு பாராட்டுக்குரியது. 'காந்தியத் தடம்' விஜயராமலிங்கத்தின் உழைப்பையும் ஆர்வத்தையும் பறைசாற்றும் அடையாளமாக விளங்கும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. விஜயராமலிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! எழுத்தாளர் பாவண்ணன் அகிம்சையை வலியுறுத்தும் பல்வேறு தலைவர்களோடு காந்தியடிகளை இணைத்து, ஆய்வுக் கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்பே இந்த நூல். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை அறிந்துகொள்ள விரும்பும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் காந்தியைப் பற்றிய ஆழமான புரிதல் கிய தேவைப்படும் அனைவரும் படிக்க வேண்டிய முக்கிய நூல்கள் யில் இந்த நூலும் இடம்பெறும் என்பதில் சந்தேகம் வரிசையில் இல்லை. - அ. அண்ணாமலை. இயக்குநர், தேசிய காந்திய அருட்காட்சியகம், புது டில்லி.