Skip to product information
எனக்கெனப் பொழிகிறது தனி மழை
Rs. 110.00
Rs. 88.00
Save 20%
‘எனக்கெனப் பொழிகிறது தனி மழை’ என்ற அழகான தலைப்பில் என் வாசிப்பு முற்றத்தில் கவித்தூறல் கொட்டிப் போயிருக்கிறது பிருந்தா என்னும் புது மேகம். பிருந்தாவின் கவிதைகளின் அடிநாதம் என்பது ‘அடிநாட்களின் அன்பும், நினைவுகளும்’ என்று சொல்லி விடலாம். அதுவே எனக்கு அவரை என் மனதுக்கு நெருக்கமானவராக ஆக்குகிறது. - கவிஞர் கலாப்ரியா இவரது பல கவிதைகள், பல்வேறு சிற்றிதழ்களில் வெளிவந்துள்ளன. ஆறு கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது ஒரு சிறப்பம்சம்.டாக்டர் பிருந்தா என்பதை விடவும் கவிஞர் பிருந்தா என்பது தானே கூடுதல் சிறப்பு! - எழுத்தாளர் நாறும்பூநாதன்