Skip to product information
ஈரம் கசிந்த நிலம்
Rs. 230.00
Rs. 184.00
Save 20%
தமிழில் நாவல் இலக்கியத்துக்குத் தடம் அமைத்த முக்கிய படைப்புகளான ‘மண்ணாசை’யையும் ‘நாகம்மா’ளையும் இந்த மண் தந்திருக்கிறது. சி.ஆர். ரவீந்திரனின் ‘ஈரம் கசிந்த நில’த்தையும் அதன் தொடர்ச்சியாகவே பார்க்க முடியும். இன்றைய மனிதவாழ்வில் எச்சங்களாகி நிற்கும் அடிப்படையான சில குணாம்சங்களுக்கு ஆதாரமான மண்சார்ந்த கிராமிய வாழ்வின் பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியுள்ளது சி.ஆர். ரவீந்திரனின் ஈரம் கசிந்த நிலம். அந்த வகையில் இதுவொரு நாவல் மட்டுமல்ல. பண்பாட்டு ஆவணமும் ஆகும். -முன்னுரையில் எம். கோபாலகிருஷ்ணன்
