Skip to product information
பாரதி செல்லம்மா
Rs. 690.00
Rs. 552.00
Save 20%
பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். உணர்வுகளை உள்ளபடி கடத்துவதற்கு நாவல் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. நூலின் மற்றொரு சிறப்பு பாரதியாரின் வரலாற்றைப் பெண்ணிலை நோக்கில் எழுதியிருப்பது. பாரதி பிறந்த நெல்லைதான் ராஜம் கிருஷ்ணனின் பூர்வீகமும். எனவே அந்தக் காலத்து வாழ்வின் சூழலை அதே மொழியில் இயல்பாக விவரிக்கிறார். ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற பெயரில் 1983இல் வெளியான இந்நூல் தற்போது ‘பாரதி செல்லம்மா’ என்ற தலைப்புடன் வெளியாகிறது.
