Skip to product information
பகவத் கீதை
Rs. 120.00
Rs. 96.00
Save 20%
வேதத்தின் கொள்கைகளை விளக்குவதற்காகவே பகவத்கீதை படைக்கப்பட்டதாகச் சொல்கிறார் பாரதியார். மனிதன் தனது துக்கங்களிலிருந்து விடுபடுவதற்கான வழி முறைகளைப் போதிக்கிறது கீதை. உலகப்பற்றுகள் அனைத்தையும் துறக்க வேண்டும். மனச்சோர்வு, கவலை, பயம், சந்தோகம் இவற்றிற்கு மனதில் இடங்கொடாதிருக்க வேண்டும் என்றெல்லாம் உபதேசிக்கிறதுகீதை. மனிதன் துன்பங்களிலிருந்து விடுபட விரும்புகிறான். பேரின்பத்தை அனுபவிக்க விரும்புகிறான், அதற்கான வழி என்ன என்று சொல்கிறது கீதை. எல்லாவற்றிற்கும் மேலாக பூவுலகவாசிகள் அனைவரும் மேம்படுவதற்கான அனைத்து வழிகளையும் உணர்த்த வேண்டுமென்பது தான் கீதை படைக்கப்பட்டதற்கான நோக்கமே.