பி.ஆர். அம்பேத்கரின் அறிவுஜீவித வரலாறு

பி.ஆர். அம்பேத்கரின் அறிவுஜீவித வரலாறு

Sale price  Rs. 475.00 Regular price  Rs. 500.00
Skip to product information
பி.ஆர். அம்பேத்கரின் அறிவுஜீவித வரலாறு

பி.ஆர். அம்பேத்கரின் அறிவுஜீவித வரலாறு

Rs. 500.00 Rs. 475.00
Save 5%

நவீனக் கல்வியியலின் தந்தை என்று போற்றப்படும் ஜான் டூயி, ‘பிரக்மாடிசம்’ (Pragmatism - நடைமுறைவாதம்) என்னும் தத்துவத்தின் முன்னோடி. டூயியின் இந்தத் தத்துவம் அம்பேத்கருக்குள் ஏற்படுத்திய தாக்கம் என்ன, இந்தியச் சூழலுக்கு ஏற்ப அந்தத் தத்துவத்தை அம்பேத்கர் எவ்வாறு தகவமைத்து நடைமுறைப்படுத்தினார் என்பதை மிகவும் சுவாரசியத்துடன் இந்நூல் விவரிக்கிறது.

சாதி என்பது வெறும் மதக் கோட்பாடு அல்ல; அது ஒரு சமூகத் தீமை. அதன் விளைவுகள் மானுடத் தன்மையற்றவை என்பதால் அதை ஒழிக்க வேண்டும் என்ற ‘நடைமுறைவாத’ அணுகுமுறையை டூயியிடமிருந்து அம்பேத்கர் பெற்றார் என்று இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. தன்னுடைய புகழ்பெற்ற ‘சாதி ஒழிப்பு’ (Annihilation of Caste) நூலில் ஜனநாயகம் பற்றிப் பேசும்போது, “சமூகம் என்பது வெறும் மனிதர்களின் தொகுப்பு அல்ல, அது பொதுவான இலக்குகளைக் கொண்ட மனிதர்களின் பிணைப்பு” என்று அம்பேத்கர் கூறுகிறார். இது அம்பேத்கரிடம் டூயியின் சிந்தனைகள் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்திற்கு ஒரு சிறந்த சான்றாகும்.

“கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்” என்ற அம்பேத்கரின் தாரக மந்திரத்தின் வேர்கள் டூயியின் கோட்பாடுகளோடு ஒத்துப்போகின்றன. கல்வி மட்டுமே ஒரு மனிதனைச் சிந்திக்கத் தூண்டும் என்பதும், அடிமைத்தனத்தை உணரச் செய்ய கல்வியை விடச் சிறந்த ஆயுதம் வேறில்லை என்பதும் இவ்விரு அறிஞர்களின் பொதுவான நம்பிக்கையாக இருந்தது.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி

அட்டை:
காகித அட்டை

You may also like