Skip to product information
அத்திமரச் சாலை
Rs. 130.00
Rs. 104.00
Save 20%
பொழுது மேற்கே சரிந்துகொண்டிருந்தது. மஞ்சள் வெயில் ஊர் மேல் படரத் தொடங்கிற்று. நான் பள்ளிக்கூடம் விட்டு வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தேன். வீதி வெறிச்சிட்டுக் கிடந்தது. மேற்குப் பார்த்த நடைகள்மீது வெயில் ஏறித் தகித்தது. பெரும்பாலும் வீடுகள் பூட்டியே கிடந்தன. தற்போது வயலில் நடவு நடைபெறும் காலம். இருட்டிய பின்னர்தான் ஜனங்கள் வீடு திரும்புவார்கள். எங்கும் மனித முகமே தென்படவில்லை. வளவுகள் பெரும் நிசப்தம் பூண்டிருந்தன. மின்சாரக் கம்பிகளில் மணிப்புறாக்கள் வரிசையாக அமர்ந்திருந்தன.