Skip to product information
அமுதமாகி வருக
Rs. 320.00
Rs. 256.00
Save 20%
எழுதிச் செல்லும் கவியின் கை எழுதி எழுதி மேற்செல்கிறது. எடுத்துப் பிரித்து அடுக்கி அச்சாக்கம் காண்பதற்குள் இன்னும் பல படைப்புகள் அவரிடம் இருந்து பிறந்துகொண்டே இருக்கும். அவை நம்மைப் புதிதாய்ப் பிறப்பிக்கவும் செய்யும். வெளியெங்கும் நிரம்பிய காற்று உள் நுழைந்து மீண்டால்தானே உயிர் இயக்கம், உள்ளும் புறமும் ஒன்றாகி. அதுவும் நன்றாகி. அனைத்தையும் அனைவரையும் அமுதமாகி வருக' என்று அழைத்துக் கொண்டே இருக்கிறது நமது சிற்பியின் கவிதைப் பேருள்ளம். அமுதம் பருக, அன்புடன் வருக!