Skip to product information
ஆகோள்
Rs. 230.00
Rs. 184.00
Save 20%
ஒரு பெருங்கதை என்பது பல கிளை கதைகளையும் துணை கதைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆகோள் என்ற இந்த நாவலின் எந்த அத்தியாயத்தை நீங்கள் திறந்தாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். அத்தனை கதைகளும் ஒட்டுமொத்தமாக ஒரு பிரபஞ்சத்தில் இயல்பாக இணைவதுதான் இந்த நாவலின் தன்மை. ஓர் அத்தியாயத்தை நாம் கவனமின்றி கடந்து சென்றாலும், ஒரு பக்கத்தில் ஒரு வரியை நாம் தவறவிட்டாலும் இந்த கதையின் உள்ளடக்கத்தையும் உண்மைகளையும் நாம் தவற விட வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில், இதுவரை சமகால இலக்கியத்தில் பதிவாகாத ஒரு முழுமுதற் தொழில்நுட்ப உலகத்தைத் தன் கதை வழி வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார் கபிலன்வைரமுத்து.