{"title":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","description":null,"products":[{"product_id":"mutharkanal-classic-edition","title":"முதற்கனல்","description":"\u003cp\u003eமுகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம். ஆனால் அது அநீதியா என்பது மிகமிகச் சிக்கலான வினா. அது மகத்தான அறச்சிக்கலின் தருணம் என்று மட்டுமே சொல்லமுடியும். ஆகவேதான் மகாபாரதம் முடிவடையாத அறப்புதிர்களின் களமாக இன்றும் உள்ளது. அதில் நல்லவர்களோ கெட்டவர்களோ இல்லை. மாமனிதர்களின் மகத்தான இக்கட்டுகளே உள்ளன. அந்த களத்தைத் தொடங்கிவைக்கும் நாவல் இது. மகாபாரதம் இந்தியப்பண்பாட்டின் ஒட்டுமொத்த ஞானமும் ஒரே நூலில் திரண்டிருப்பது. ஆகவேதான் அது ஐந்தாம் வேதம் என அழைக்கப்படுகிறது. இந்நூல் அந்த ஞானக்களஞ்சியத்திற்குள் செல்லும் தோரணவாயில். வடிவ அளவில் இது ஒரு முழுமையான தனிப்படைப்பு. இதன் மொழியும் கட்டமைப்பும் இதற்குள்ளேயே நிறைவை அடைகின்றன. ஆனால் வெண்முரசு என்ற பெயரில் மகாபாரதத்தை ஜெயமோகன் விரிவாக எழுதிவரும் நாவல்தொடரின் தொடக்கநாவலும்கூட.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790511169899,"sku":"BK2782","price":1600.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/mutharkanal-classic-edition.jpg?v=1788280854"},{"product_id":"aalam","title":"ஆலம்","description":"\u003cp\u003eஆலம் என்றால் நஞ்சு. சரியான பொருள் ஆதிநஞ்சு. மானுட உள்ளங்கள் அனைத்திலும் உறைந்திருக்கும் அடிப்படையான நஞ்சு ஒன்றைச் சித்தரிக்கும் நாவல் இது. வெற்றிமாறன் - மிஷ்கின் - கௌதம் மேனன் இயக்கத்தில் திட்டமிடப்பட்ட ஒரு தொலைத்தொடருக்காக எழுதப்பட்ட முதல்வடிவம். தீவிரமான நிகழ்வுகள் வழியாகச் செல்லும் வேகமான கதையோட்டமும், பல இடங்களை அகத்தும் புறத்தும் தொட்டுச்செல்லும் கதைப்பின்னலும் கொண்ட நாவல்.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790511235435,"sku":"BK2783","price":264.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aalam.jpg?v=1788280853"},{"product_id":"aalayam-evarudaiyadhu","title":"ஆலயம் எவருடையது?","description":"\u003cp\u003eஆலயங்கள் எவருடையவை என்னும் விவாதம் இன்று எழுந்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் அவை இருக்கவேண்டுமா? பக்தர்களிடம் ஒப்படைக்கப்படவேண்டுமா? பக்தர்கள் என்பவர்கள் எவர்? பக்தர்கள் ஆலயங்களை வெறும் வழிபாட்டிடங்களாக எண்ணுவது சரியா? வழிபாட்டின் பொருட்டு அவற்றை மாற்றியமைக்க அவர்களுக்கு உரிமை உண்டா? நம் பேராலயங்கள் வெறும் வழிபாட்டிடங்கள் மட்டும்தானா? அவை பண்பாட்டு அடையாளங்களும் சரித்திரச் சின்னங்களும் இல்லையா? ஆலயங்களில் எந்த மாற்றத்தையும் செய்யலாகாதா? பழமையிலேயே நின்றுவிடவேண்டுமா? செய்யவேண்டுமென்றால் எவர் செய்யலாம்? இக்கேள்விகளுக்கான பதில்கள் அடங்கியது இந்நூல்.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790511268203,"sku":"BK2784","price":168.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aalayam-evarudaiyadhu.jpg?v=1788280854"},{"product_id":"aanaiyillaa","title":"ஆனையில்லா","description":"\u003cp\u003eஇந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச்செல்கிறார்கள். அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு ஓர் உலகைச் சமைக்கிறார்கள். புத்தம்புதிய ஓர் உலகு. ஒளிமிக்க உலகு. முதுமையில் அவர்கள் அங்கேதான் வாழ்கிறார்கள். என் இளமையைக்கொண்டு நான் சமைத்த இந்த உலகை இனியும் விரிவாக்குவேன் என நினைக்கிறேன். ஒருவேளை எழுதாமல் போகலாம். ஆனால் என்னுள் வளர்த்துக்கொள்வேன். இப்போதே எழுதப்படாத பல கதைகள் என்னுள் இருக்கின்றன. இவற்றிலுள்ள கள்ளமற்ற கொண்டாட்டமே இவ்வுலகில் நான் வேண்டுவது. இங்கே மானுடர் வாழவேண்டிய வகை அது.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790511300971,"sku":"BK2785","price":264.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aanaiyillaa.jpg?v=1788280854"},{"product_id":"aayiram-utrugal","title":"ஆயிரம் ஊற்றுகள்","description":"\u003cp\u003eஇக்கதைகள் திருவிதாங்கூர் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்டவை. அறியப்பட்ட வரலாற்றை இவை நுணுக்கமான தகவல்களுடன் மறுஆக்கம் செய்கின்றன. வழக்கமான வரலாற்றுக்கதைகளில் உள்ள சாகசமும் காதலும் இவற்றில் இல்லை. இவற்றில் காட்டப்பட்டிருப்பது ரத்தமும் கண்ணீருமாக வழிந்தோடும் வரலாற்றின் விரிவான யதார்த்தம். நாம் வரலாற்றில் வீரநாயகர்களை உருவாக்கிக் கொள்கிறோம். வீரவழிபாடு வரலாற்றை ஆராய்வதற்கான மனநிலையாக இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் மெய்யான வரலாற்றுநாயகர்கள் வெவ்வேறு விசைகளை திறம்படச் சமன் செய்து பயனுள்ள ஆட்சியை அளித்தவர்களே. அவர்களில் பலர் அரசியர். இந்த கதைகள் வரலாற்றை இன்றைய நவீன ஜனநாயகப் பார்வையில் உருவாக்கிக் காட்டுகின்றன\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790511333739,"sku":"BK2786","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aayiram-utrugal.jpg?v=1788280854"},{"product_id":"aazhnadhiyai-thedi","title":"ஆழ்நதியைத் தேடி","description":"\u003cp\u003eநான் தேடியதை கண்டடைந்ததை தர்க்கபூர்வமாக முன்வைப்பதற்கு பதிலாக கூடுமானவரை இலக்கியத்தின் வழியில் கவிதையினூடாக படிமங்களினூடாக முன்வைக்க முயன்றிருக்கிறேன். இலக்கியத்தைப்பற்றி எந்த ஆய்வும் எந்த உரையாடலும் இலக்கியமாகவே அமையவேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அது ஒருபோதும் பகுப்பாய்வின் மொழியில் பேசலாகாது. பகுப்பாய்வுக்கு சிக்குவது ஒருபோதும் இலக்கியமாக இருக்க முடியாது. ஆகவே இவை ஒருவகையான கவித்துவ உரையாடலாக அமைந்தன. ஆய்வு தோரணை இவற்றுக்கு இல்லை. இலக்கியம் இவற்றிற்கு பின்னணியாக அமைந்த ஒன்றாக அமைகிறதே ஒழிய இலக்கியம் இவற்றின் பேசுபொருளாக இல்லை. இவை அகத்தேடலாக தன்னைக் கண்டடைதலாக ஒருவகையில் சமகால தன்மை கொண்ட ஒரு தன்னிலையிலிருந்து என்றுமுள்ள ஒரு தன்னிலை நோக்கி நகரும் முயற்சியாக அமைந்துள்ளன.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790511366507,"sku":"BK2787","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aazhnadhiyai-thedi.jpg?v=1788280853"},{"product_id":"aindhu-neruppu","title":"ஐந்து நெருப்பு","description":"\u003cp\u003eகுற்றத்தைச் செய்யவைப்பது என்ன? தன்னை சமூக உறுப்பினன் என உணர்பவனே மனிதன். ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னை தனிமனிதனாக உணர்கிறது. தன் நலத்தை, தன் மகிழ்ச்சியை நாடுகிறது. சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறிச்செல்கிறது., அவ்வண்ணம் மீறிச்செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது. தன்னை வெளிப்படுத்திவிட்ட நிறைவு அது. குற்றத்தின், தண்டனையின் வெவ்வேறு தளங்களை தொட்டு பேசும் சிறுகதைகள் இவை. அதனூடாக வெளிப்படும் மனித ஆழத்தை அறிந்துவிட முயல்பவை. ஆகவே மனித அகமீறல்களின் பல தருணங்கள் இந்த கதைகளில் உள்ளன. அறிந்தும் அறியாமலும் செய்யப்படும் குற்றங்கள். எத்தனை தொகுத்தாலும் மனிதன் முற்றாக தொகுக்கப்பட முடியாத தனித்தன்மை கொண்டவன் என்பதை இவை கண்டடைகின்றன\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790511399275,"sku":"BK2788","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aindhu-neruppu.jpg?v=1788280854"},{"product_id":"anal-kaatru","title":"அனல் காற்று","description":"\u003cp\u003eபாலு மகேந்திரா எடுக்கவிருந்த படத்திற்காக நான் எழுதிய கதை இது. ஒரு குறுநாவல். இதை அவர் திரைக்கதை அமைப்பதாக இருந்தது. அந்த தயாரிப்பாளர் பங்குச்சந்தை வீழ்ச்சியில் காணாமல் போனதனால் திட்டம் கைவிடப்பட்டது. அவர் வேறு கதைக்குச் சென்றுவிட்டார். முற்றிலும் சொற்சித்திரமாக உள்ள இந்த உணர்ச்சிகரமான கதைக்கு அவர் எப்படி காட்சி வடிவம் அளித்து திரைக்கதை அமைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அது நிகழவே இல்லை என்பதில் வருத்தம் என்றாலும் எது நிகழ்கிறதோ அதுவே அது என்று கொள்ள வேண்டியதுதான்]-\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790511464811,"sku":"BK2789","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/anal-kaatru.jpg?v=1788280853"},{"product_id":"andha-mugil-indha-mugil","title":"அந்த முகில் இந்த முகில்...","description":"\u003cp\u003eஇந்தக்கதை நான் அறிந்த மெய்யான ஓரு வாழ்க்கையின் புனைவு வடிவம். அந்த வாழ்க்கையின் உச்சநிலைகள் வழியாக மட்டுமே செல்லும் கதை. எழுச்சியும் சரிவும் உச்சநிலையிலேயே நிகழ்கின்றன. நுரைக்காத தருணமே இல்லாத கதை. பின்னணியாக அமைந்தது சினிமா என்னும் கனவு. அதிலும் கறுப்புவெள்ளை சினிமா என்பது தூய கனவு. கனவின் எழில்கொண்ட ஒரு கற்பனாவாதப் படைப்பு இது. ஒரு காதல் கதை. இழந்தகாதலின் அல்லது இழக்க முடியாத காதலின் கதை. -ஜெயமோகன்\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790511530347,"sku":"BK2790","price":208.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/andha-mugil-indha-mugil.jpg?v=1788280853"},{"product_id":"aram","title":"அறம் சிறுகதைத் தொகுப்பு","description":"\u003cp\u003eஇந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றிச் சுழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஒரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே பயணங்கள். சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதாரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்டாடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790511661419,"sku":"BK2791","price":224.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aram.jpg?v=1788280854"},{"product_id":"arugarlain-paathai","title":"அருகர்களின் பாதை","description":"\u003cp\u003eஒருவர் ஒருநாளில் நடந்துசெல்லும் தொலைவுக்கு ஒன்று என அறநிலைகளை சமணர்கள் இந்தியாவில் அமைத்தார்கள் என்பது வரலாறு. உண்மையில் அவை இருந்தனவா, இன்று எப்படி உள்ளன என அறியும் பொருட்டு ஜெயமோகன் அவர் நண்பர்கள் ஆறுபேருடன் ஒரு காரில் ஒருமாத காலம் பயணம் செய்தார். ஈரோடு முதல் ராஜஸ்தானின் லொதுர்வா வரை ஆறு மாநிலங்கள் வழியாக. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத்தலங்களை தேடித்தேடிச் சென்று பார்த்தார். அந்த அறநிலைகளின் சங்கிலி இன்றும் அப்படியே இருப்பதைக் கண்டறிந்தார். அனேகமாக அத்தனை இடங்களிலும் அவர்கள் சமண அறநிலைகளில் உணவும் உறைவிடமும் பெற்றனர். மிகமிகக்குறைவான செலவில் அப்பயணத்தை நிறைவுசெய்தனர். அப்பயணத்தில் ஜெயமோகன் தினமும் பயணக் குறிப்புகளை தன் இணையத்தளத்தில் எழுதினார். பல்லாயிரம் வாசகர்களால் அவை வாசிக்கப்பட்டன. இந்நூல் அக்குறிப்புகளின் தொகுப்பு.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790511792491,"sku":"BK2792","price":168.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/arugarlain-paathai.jpg?v=1788280854"},{"product_id":"devi","title":"தேவி","description":"\u003cp\u003eஇத்தொகுப்பின் கதைகளில் உள்ள பொதுக்கூறு என பெண்மையின் ஜாலங்களைச் சொல்லலாம். வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் லீலையின் நாயகி, வாழ்க்கையை தன் கையில் எடுத்து ஆடும் தேவி. இந்த முகங்களை எழுதும்போது ஆசிரியனாக நான் அகத்தே புன்னகை கொண்டிருக்கிறேன். அப்புன்னகை இக்கதைகளிலும் உள்ளது. இன்று பெண்மையின் இந்த ஜாலங்களை தந்தையின் இடத்தில் இருந்துகொண்டு ஆடுக மகளே என்று சொல்லுபவனாக ஆகியிருக்கிறேன். இக்கதைகளின் நுட்பங்கள் என நான் நினைப்பது பெண் அளிக்கும் பாவனைகளை. அவை மெய்யாக வெளிப்படுபவையும்கூட. மண்ணின் பாவனைகளே பருவங்களும் பொழுதுகளும் என்பதுபோல. அவையே நம் வாழ்வின் அத்தனை அழகுகளையும் தீர்மானிக்கின்றன.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790511923563,"sku":"BK2794","price":184.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/devi.jpg?v=1788280853"},{"product_id":"eeraarukaal-kondezhum-puravi","title":"ஈராறுகால் கொண்டெழும் புரவி","description":"\u003cp\u003eஎன் படைப்புகளிலேயே மிக முக்கியமான சிலவற்றில் ஒன்று என நான் நினைப்பது ஈராறுகால் கொண்டெழும் புரவி. சித்தர்ஞானம் என்பதன் மீதான ஒரு விளையாடல் அது. இதிலுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளத்தைச்சேர்ந்ததாக உள்ளது. இவை சென்ற காலங்களில் நான் தங்கி மீண்டும் முன் சென்ற புள்ளிகள் என்று சொல்வேன்.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790511956331,"sku":"BK2795","price":264.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/eeraarukaal-kondezhum-puravi.jpg?v=1788280852"},{"product_id":"ezham-ulagam","title":"ஏழாம் உலகம்","description":"\u003cp\u003eநாம் வாழும் மண்ணுக்குக் கீழே ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்கு கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்துகொண்டிருக்கின்றன! \"ஏழாம் உலகம்\" அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், காதலிக்கிறார்கள் குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மானுடனாகவே இருக்கிறான். எந்த இருளும் எந்தச் சாக்கடையும் அவனை மிருகமாக்கிவிடுவதில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற \"நான் கடவுள்\" திரைப்படத்தின் மூலவடிவமாக அமைந்த நாவல் இது.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512087403,"sku":"BK2796","price":880.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ezham-ulagam.jpg?v=1788280853"},{"product_id":"ezhukathir","title":"எழுகதிர்","description":"\u003cp\u003eயதார்த்தமும் மிகைக்கற்பனையும் பின்னிப்பிணைந்த மாயக்கலவை கொண்ட கதைகள் இவை. இவை வாழ்க்கையைப் பேசுபவை. மானுடன் இங்கு அடையும் இடர்களை, துயரை, தனிமையை, ஏக்கத்தை. ஆனால் அந்த உணர்வுகளைச் சொல்லி நிறுத்திக்கொள்ளாமல் அவை சென்றடையும் ஆழத்தை நோக்கி இறங்குகின்றன. அந்த ஆழமே மாயமென இக்கதைகளில் நிறைந்துள்ளது. வரலாற்றின் வழியாகச் செல்கின்றன இக்கதைகள். அன்றாடத்தில் பரவி விரிகின்றன. ஒரு கணத்தில் தாவி எழுந்து தங்கள் முழுமையை அடைகின்றன. அங்கே தொன்மமோ கவிதையோ என மாறிவிடுகின்றன.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512218475,"sku":"BK2797","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ezhukathir.jpg?v=1788280854"},{"product_id":"ezhuthum-kalai","title":"எழுதும்கலை","description":"\u003cp\u003eநவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கான கையேடு இந்நூல். சிறுகதை, நாவல், கட்டுரை போன்ற இலக்கிய வடிவங்களின் அடிப்படை இலக்கணங்களை எளிமையாக அறிமுகம் செய்கிறது. எழுதுவதற்கான பயிற்சியை முன்வைக்கிறது. இலக்கிய ஆக்கங்களில் ஈடுபடுபவர்களுக்கு இலக்கியத்தில் எது இதுவரை சாதிக்கப்பட்டிருக்கிறது என இது காட்டுகிறது. அதை அடைவதற்கான சவாலை அறிமுகம் செய்கிறது என்று சொல்லலாம். எழுத ஆரம்பிக்கிறவர்களுக்கு மட்டுமல்லாமல் வாசிப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும். நவீன இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்து கொள்வதுதான் இது. இதன் மூலம் வாசகர்கள் ஓர் இலக்கிய ஆக்கத்தில் குறைந்தபட்சம் என்ன எதிர்பார்க்கலாம் என்று அறிந்துகொள்கிறார்கள். அது ரசனையைக் கூராக்க உதவும்.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512251243,"sku":"BK2798","price":168.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ezhuthum-kalai.jpg?v=1788280853"},{"product_id":"geethaiyai-aridhal","title":"கீதையை அறிதல்","description":"\u003cp\u003eஜெயமோகன் 2025ல் ஆற்றிய புகழ்பெற்ற கீதை உரையின் எழுத்துவடிவம் இது. கட்டுரைக்குரிய செறிவும் உரைகளுக்குரிய உணர்ச்சிகரமான ஒருமையும் உடையது இது. கீதையை அறிய அடிப்படைகளை அளிக்கும். கீதை பற்றிய ஐயங்களைக் களைய, கீதையை அறியும் சரியான வழிமுறைகளைப் பயில. கீதையை உள்வாங்கிக்கொள்வதற்கான தடைகளைக் களைய, கீதையின் மெய்யியலை சரியாகச் சென்றடைய இந்நூல் உதவும்.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512284011,"sku":"BK2799","price":168.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/geethaiyai-aridhal.jpg?v=1788280854"},{"product_id":"gnani","title":"ஞானி","description":"\u003cp\u003eமார்க்சிய சிந்தனையாளரான மறைந்த ஞானி [ கி . பழனிச்சாமி ] அவர்களைப் பற்றிய ஜெயமோகனின் நினைவுக்குறிப்புகள் இவை . ஜெயமோகன் எப்போதும் ஞானியை தன் ஆசிரியர் என குறிப்பிட்டு வந்தவர் . ஞானியும் அவ்வண்ணமே ஜெயமோகனை தன் மாணவன் என்றே குறிப்பிட்டுவந்தார் . ஞானியுடன் என் உறவு என்பது முழுக்க முழுக்க இலக்கியம் வரலாறு சார்ந்தது . தனிப்பட்ட பிரியம் இருந்தது . ஆனால் அவருடைய குடும்பம் , தனிவாழ்க்கை பற்றி எதுவுமே தெரிந்துகொள்ளவில்லை . அவருடனான உரையாடல்களே அவர் குறித்த என் நினைவுகள் . ஆகவே இந்நூலில் அவருடன் என் உரையாடல் சார்ந்த சித்திரம் மட்டுமே உள்ளது ” என்று ஜெயமோகன் முன்னுரையில் சொல்கிறார் . ஞானியை அவருடைய உரையாடல்கள் வழியாக தொகுத்துக்கொள்வதை, வகுத்துக்கொள்வதை இந்நூல் செய்கிறது\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512316779,"sku":"BK2800","price":304.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/gnani.jpg?v=1788280852"},{"product_id":"hindu-gnana-marabil-aaru-dharisanangal","title":"இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்","description":"\u003cp\u003eஇந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10 - ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை கொண்ட சிந்தனைகள் சரிபாதியை எடுத்துக்கொண்டிருந்தன. அவற்றுடன் விவாதித்தே ஆன்மிக மரபுகள்கூட வளர்ந்தன. பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்து ஞான மரபு பக்தி மார்க்கங்களால் ஆனதாக மாறியபோது லௌகீக ஞானங்கள் நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. அவை மறைந்தன. விளைவாக இந்து ஞானமே தேங்கி சீரழிந்தது. சடங்குகளாகவும் மூடநம்பிக்கைகளாகவும் சுருங்கியது. இந்நூல் இந்து ஞான மரபின் அடிப்படைகளான ஆறு தரிசனங்களை விரிவாக விவாதிக்கிறது. நவீன சிந்தனையுடன் அவற்றை எப்படி மீட்டு இன்றைய சூழலுக்கு ஏற்ப மறு ஆக்கம் செய்வது என்று பேசுகிறது.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512349547,"sku":"BK2801","price":136.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/hindu-gnana-marabil-aaru-dharisanangal.jpg?v=1788280853"},{"product_id":"hindu-gnanam-adippadai-kelvikal","title":"இந்து ஞானம்-அடிப்படை கேள்விகள்","description":"\u003cp\u003eஇந்நூல் இந்துமதம் மீது முன்வைக்கப்படும் அரசியல் சார்ந்த பல ஐயங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்கிறது. வரலாறு, பண்பாடு சார்ந்து அவற்றை விளக்குகிறது. இந்து மதத்திலுள்ள மெய்யியல்கூறுகளை முதன்மைப்படுத்துகிறது. தன் மரபை தானே ஐயத்துடன் அணுகும் இன்றைய இளைஞர்களுக்குரிய எளிமையான அறிமுக நூல் இது\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512382315,"sku":"BK2802","price":256.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/hindu-gnanam-adippadai-kelvikal.jpg?v=1788280854"},{"product_id":"hindu-meimai","title":"இந்து மெய்மை","description":"\u003cp\u003eஇன்றைய சூழலில் ஒருபக்கம் இந்துப் பண்பாடும் மெய்யியலும் காழ்ப்புடன் புறக்கணிக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் அதிகாரநோக்குடன் திரிக்கப்படுகின்றன. இரண்டுமே அழிவுச்சக்திகள் என்று சொல்லும் நிலைபாடு கொண்டவை இக்கட்டுரைகள். இந்துப் பண்பாடு என்பது நம் மரபு , நம் பண்பாட்டுசெல்வம் , நம் ஆழுள்ளம் அமைந்திருக்கும் வெளி. அதன்மேல் காழ்ப்பை , விலக்கத்தை உருவாக்கிக் கொண்டால் நாம் ஆழமற்றவர்களாவோம். மேலோட்டமான அரசியலுக்கு அப்பால் செல்லமுடியாதவர்கள் ஆவோம் என இவை முன்வைக்கின்றன. நம் பண்பாட்டின் மேல் நாம் விலக்கம் கொண்டால் அப்பண்பாட்டின் ஆழத்தில் தங்கள் உள்ளங்களை அமைத்துக்கொண்டு இங்கே இயல்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தியாவின் பெரும்பான்மை மக்களிடமிருந்து அயன்மைப்படுவோம். அதன்பின் அசலான சிந்தனையையோ கலையையோ நம்மால் உருவாக்க முடியாது என்று வாதிடுகின்றன. ஜெயமோகன் அவருடைய இணைய தளத்தில் வாசகர்களுடன் உரையாடலாக நிகழ்த்தியவை இவை.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512415083,"sku":"BK2803","price":136.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/hindu-meimai.jpg?v=1788280854"},{"product_id":"ilakkiyathin-nuzhaivaayilil","title":"இலக்கியத்தின் நுழைவாயிலில்","description":"\u003cp\u003eஇந்நூல் இலக்கியம் என்னும் அறிவியக்கத்தை, கலையை அறிமுகம் செய்துகொள்ளும் வாசகர்களுக்கு உதவியான ஒன்று. ஒரு வாசகன் இலக்கியத்திற்குள் நுழைகையில் எழும் பல வினாக்களை இது எதிர்கொள்கிறது. பலகோணங்களில் அவற்றை விவாதிப்பதன் வழியாக இலக்கியம் ஏராளமான வண்ணவேறுபாடுகள் கொண்ட ஒரு களம் என்னும் புரிதலை உருவாக்குகிறது. இலக்கியத்தின் கொள்கைகள், செயல்முறைகளைத் தெளிவுபடுத்துகிறது.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512447851,"sku":"BK2804","price":168.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ilakkiyathin-nuzhaivaayilil.jpg?v=1788280854"},{"product_id":"india-gnanam","title":"இந்திய ஞானம்","description":"\u003cp\u003eஉண்மையான பகுத்தறிவு என்பது மெய்யை பொய்யில் இருந்து பிரித்தறிவது அல்ல. மெய்யை பயனற்ற மெய்யில் இருந்து, பழைய மெய்யில் இருந்து பிரித்தறிவது. விசேஷ மெய்யை சாமானிய மெய்யில் இருந்து பிரித்தறிவது. அதற்குத்தான் ஞானிகள், சிந்தனையமைப்புகளின் வழிகாட்டல் தேவை. இக்கட்டுரைகள் அதன் விளைகனிகள். இக்கட்டுரைகள் இந்திய மெய்யியலை பகுத்தறிவுநோக்கில் ஆய்வு செய்பவர்களுக்குரியவை. ஆய்வுநோக்கும் தொகுப்புப் பார்வையும் கொண்டவை. அடிப்படையில் நாராயணகுரு முன்வைத்த தூய வேதாந்த அணுகுமுறை கொண்டவையும்கூட.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512578923,"sku":"BK2805","price":168.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/india-gnanam.jpg?v=1788280854"},{"product_id":"india-payanam","title":"இந்தியப்பயணம்","description":"\u003cp\u003eஒட்டுமொத்தமாக இந்தியாவிற்குக் குறுக்கே ஒரு பயணத்தை மேற்கொள்வதென்பது அளிக்கும் இந்திய தரிசனமே வேறு. நூறு கிலோ மீட்டர்களுக்குள் உணவு உடை பேச்சு எல்லாமே மாறிவிடும் அற்புதம். மாடுகளின் கொம்புகளேகூட மாறிக்கொண்டிருக்கும். ஆனால் மாறாத ஒன்று உண்டு. அதை உணர்ந்துகொண்டே இருப்போம். எப்போதோ ஒருபுள்ளியில் அதிர்ச்சியுடன் தூலமாகக் கண்டடைவோம். அதுதான் இந்திய தரிசனம். இந்தியாவுக்கு குறுக்கே ஜெயமோகனும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008ல் மேற்கொண்ட பயணத்தின் பதிவுகள் இவை. அன்றன்று எழுதி இணையத்தில் பிரசுரமானவை. ஆகவே விரித்துரைப்பு இல்லாமல் நேரடியான அனுபவக்குறிப்புகளாகவே இவை உள்ளன. வெளிவந்த காலகட்டத்தில் நாளும் பல ஆயிரம்பேர் காத்திருந்து வாசித்தவை இப்பதிவுகள்.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512611691,"sku":"BK2806","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/india-payanam.jpg?v=1788280854"},{"product_id":"iravu","title":"இரவு","description":"\u003cp\u003eஇரவு இந்த இரவில் இப்புவியில் எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன! காட்டில் கரிய பெரும் யானைகள் மண்ணுக்குள் எலிகள் நீருக்குள் மீன்கள் பல்லாயிரம் கோடி புழுக்கள் பூச்சிகள் நாளைய புவி இங்கே கரு புகுகிறது நிறைவுடன் சற்றே சலிப்புடன் பெருமூச்சு விட்டுக் கொண்டு திரும்பிப் படுக்கிறது இரவு\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512644459,"sku":"BK2807","price":224.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/iravu.jpg?v=1788280852"},{"product_id":"iru-kalaignargal","title":"இரு கலைஞர்கள்","description":"\u003cp\u003eஇந்தக் கதைகள் வாழ்ந்த மெய்யான ஆளுமைகளைப் பற்றியவை. ஆனால் நேரடிச் சித்தரிப்புகளல்ல, புனைவுகள். அந்த ஆளுமைகளில் சிலர் நேரில் அறிந்தவர்கள். சிலர் நான் அறியாத வரலாற்று நாயகர்கள். அவர்களின் அகம் திகழும் சில கணங்களை தொட்டு எடுக்க இப்புனைவுகள் முயன்றுள்ளன. இக்கதைகளை அந்த ஆளுமைகளை நோக்கிச் செல்லும் முயற்சிகள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அதியமானைப் பாடிய ஔவையாரின் கண்களே நான் கோருவன.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512742763,"sku":"BK2808","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/iru-kalaignargal.jpg?v=1788280854"},{"product_id":"kaadu","title":"காடு","description":"\u003cp\u003eஅதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்குமு் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு, மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின் பலவிமான வண்ணபேதங்களை தேர்ந்த வாசகனுக்கு மட்டும் எட்டும்படி நுட்பமாகச் சொல்லி மேல்தளத்தில் சரளமான உத்வேகமான கதையோட்டத்தை முன்வைக்கிறது\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512808299,"sku":"BK2809","price":264.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kaadu.jpg?v=1788280854"},{"product_id":"kadhaanayagi","title":"கதாநாயகி","description":"\u003cp\u003eகதாநாயகி ஒரு பேய்கதை. புத்தகத்திற்குள் இருந்து எழுந்து வந்து நிகழ்காலத்தில் உருக்கொள்ளும் பேய். ஆனால் எளிமையான ஒற்றைமையக் கதை அல்ல. வாசிப்பு என்னும் செயலின் படிநிலைகள் அதிலுள்ளன. வாசிப்பு என்பது நாம் இறந்த காலத்தை, வரலாற்றை, நினைவை உருவாக்கி மீட்டிக்கொள்ளும் செயல்தான். மானுடர் மானுடமென்னும் ஒற்றைத்திரளாக தங்களை தொகுத்துக்கொள்வது அதனூடாகத்தான். புத்தகங்களில் இருந்து எழுந்து வருவன அனைத்தும் காலமென தங்களை ஆக்கிக்கொண்ட ஆளுமைகளும் சிந்தனைகளும் உணர்வுகளும்தான்\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512873835,"sku":"BK2810","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kadhaanayagi.jpg?v=1788280852"},{"product_id":"kanneerai-pinthodardhal","title":"கண்ணீரைப் பின் தொடருதல்","description":"\u003cp\u003eஇந்நூல் இந்தியாவின் வெவ்வேறு மொழிகளிலிருந்து இருபது நாவலாசிரியர்களின் படைப்புகளை முன்வைக்கிறது. அவற்றைப்பற்றிய ரசனைக்கட்டுரை என்று இவற்றை சொல்லலாம். அவை ஏன் மகத்தான நாவல்களாக இருக்கின்றன என்பதையே இக்கட்டுரைகள் ஆராய்கின்றன. எழுதப்பட்டு பல ஆண்டுகளுக்குப்பிறகு இக்கட்டுரைகள் அண்மையில் கனலி இணையதளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. மீண்டும் அடுத்தடுத்த தலைமுறையால் இவை படிக்கப்படுகின்றன என்பதே இக்கட்டுரைகளின் தேவைக்கும் தரத்திற்கும் சுவாரசியத்திற்கும் சான்று என்று நினைக்கிறேன். இவை படைப்பாளி, படைப்பு, அது உருவான களம் ஆகிய மூன்றையும் ஒரே பார்வையில் பார்க்கும் தன்மை கொண்டவை. ஆகவே அந்நூல்களை மிக விரிந்த களத்தில் வைத்து வாசகன் அணுக முடியும்.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512906603,"sku":"BK2811","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kanneerai-pinthodardhal.jpg?v=1788280854"},{"product_id":"kanni-nilam","title":"கன்னிநிலம்","description":"\u003cp\u003eகமாண்டென்ட் சோமசுந்தரத்துடன் டாமனில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட வேகத்தில் எழுதியது இந்தக் கதை. இதை ஒரு த்ரில்லர் என்றுதான் சொல்ல வேண்டும்; கொஞ்சம் காதல். நான் எழுதுவதில் முதல் நோக்கமாக இருப்பது என் சுவாரசியம்தான், சில சமயம் ஆழமான மன எழுச்சி; சில சமயம் ஆழமான தேடல். சில சமயம் வெறும் சலிப்பை வெல்லப் பகல் கனவுகளை உருவாக்கிக்கொள்ளவும் எழுதுவதுண்டு. எழுத்தில் எந்த வடிவமும் விலக்கல்ல என்பது என் எண்ணம். நான் பேய்க்கதைகள் எழுதியதும் அறிவியல் புனைகதைகள் எழுதியதும் அதனாலேயே. த்ரில்லர் எழுதவேண்டும் என்று ஆசை. அதே-போல நல்ல துப்பறியும் கதை. இதில் எனக்கு முன்மாதிரி புதுமைப்பித்தன்தான். இக்கதை யதார்த்தங்களில் இருந்து கனவின் கன்னிநிலம் நோக்கி ஒரு தப்பி ஒட்டம்; அவ்வளவுதான் கன்னிநிலம். இப்படிச் சொல்லலாம், யதார்த்த உலகம் சலித்துப்போய் எழுதிய ஒரு கற்பனாவாதம் கதை. இதில் எல்லாமே உச்சம்தான். இக்கதை சொற்கள் வழியாக உருவாகும் மிகையுணர்ச்சிகளால் ஆனது. மிக ரொமாண்டிக் ஆனது; ரொமாண்டிக் மனநிலையில் எழுதியது. அது என் இயல்பான நிலை அல்ல. எங்கே தன்னை இழந்து ஒரு நிலை கூடுகிறதோ அங்கே ஆன்மீகத்துக்கான ஒரு வாசல் இருக்கிறது; அதில் காதலும் ஒன்று. ஆகவேதான் பிரேமை என்பது நூற்றாண்டுகளாக நம் மரபில் ஒருவகை ஆன்மீகமாகவே கருதப்படுகிறது. காதல் போன்ற ஒன்று அனைவரையும்தான் பைத்தியமாக ஆக்குகிறது. ஒரு எளிய மனிதனை பைத்தியமாக ஆக்கினால் அதில் கதை இல்லை. ஒரு அபாரமான மனிதனை அப்படி ஆக்கினால்தான் அது கதை\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512939371,"sku":"BK2812","price":264.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kanni-nilam.jpg?v=1788280854"},{"product_id":"kanyakumari","title":"கன்னியாகுமரி","description":"\u003cp\u003eஇந்நாவல் மானுட துக்கத்தையும் வலியையும் முன்வைப்பது. மாறுதல்கள் அனைத்தும், வளர்ச்சிகள் கூட, இழப்புகளையும் வலிகளையும் உருவாக்குகின்றன. எந்த அமுதக்கடலும் கடையப்பட்டால் விஷத்தையே உமிழும்போலும். நமது வாழ்வின் அலைகளில் ஒன்றில் உருவான ஒரு மிடறு விஷமும், அமுதமும், உதிரமும் இந்நாவலில் உள்ளது. இதன் எளிய கதை நகர்வின் உள்ளே பற்பல உள்ளோட்டங்களும் சிக்கல்களும் இருக்கின்றன. ஜெயமோகன்\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790512972139,"sku":"BK2813","price":304.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kanyakumari.jpg?v=1788280853"},{"product_id":"kodungoloor-kannagi","title":"கொடுங்கோளூர் கண்ணகி","description":"\u003cp\u003eதமிழ் ஆய்வாளர் கணக்கில் கொள்ளவேண்டிய குறிப்பான தளம் கேரள நாட்டார் பழங்குடி மரபாகும். கேரளப்பழங்குடி வாழ்க்கையில் உள்ள சங்ககால வாழ்க்கைக்கூறுகள் வியப்பூட்டுபவை. வேலன் வெறியாட்டம் இன்றும் நடக்கிறது. வேலன் என்னும் சாதி இப்போதும் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? காளியூட்டும் பெருங்களியாட்டமும் போன்ற நூறு நூறு சடங்குகள் தமிழ் வாழ்வின் அறியாத பக்கங்களைப்பற்றிய பலவிதமான தெளிவை நமக்கு அளிப்பவை. முனைவர் விஷ்ணு நம்பூதிரி தொகுத்த ’கேரள ஃபோக்லோர் நிகண்டு’ என்ற கலைக்களஞ்சியம் அளவுக்கு சங்க காலத்தமிழ் வாழ்க்கையைப்பற்றிய தெளிவை அளிக்கும் நூல்கள் குறைவே.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513004907,"sku":"BK2814","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kodungoloor-kannagi.jpg?v=1788280854"},{"product_id":"koondhal","title":"கூந்தல்","description":"\u003cp\u003eகுறியீட்டு ஆழமும் மொழியும் அழுத்தமும் உடைய ஜெயமோகனின் சிறு கதைகள் உத்வேகம் ஊட்டும் வாசிப்பனுபவங்களும் கூட. எளிமையான ஒரு மேற்பரப்பு எல்லா கதைகளுக்கும் உள்ளது. பேய்கதைகளின் பாணியில் எழுதப்பட்ட கதைகள் சுயசரிதைக் குறிப்புகள் போன்ற கதைகள், கட்டுரைக்கும் கதைக்கும் நடுவில் இயங்கும் கதைகள் என பலவகைப்பட்ட வகைமாதிரிகள் இவற்றில் உள்ளன. சாதாரணமான புனைவின் வழியாக கவித்துவத்தை மௌனமாக தொட்டு விட முயல்பவை இவை.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513135979,"sku":"BK2815","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/koondhal.jpg?v=1788280854"},{"product_id":"kotravai","title":"கொற்றவை","description":"\u003cp\u003eகொற்றவை தமிழில் எழுதப்பட்ட நாவல், ஆனால் ஒரு காவியத்தின் வடிவமைப்பும் மொழிநடையும் கொண்டது. இளங்கோ கண்ணகியை ’வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்’ என்று கூறுகிறார்.ஆனால் கண்ணகி மதுரையை அடைந்தபோது ‘மாமயிடன் செற்றிகந்த கொற்றத்தாள்’ என்று விதந்து பாடுகிறார். கால் மண்ணை அறியாமல் வாழ்ந்தவள் எப்படி மகிடனை பலிகொண்ட கொற்றவையாக ஆனாள்? அந்த வளர்ச்சியை ஐவகை நிலங்களின் வாழ்க்கை வழியாக, சங்கம் மருவிய காலகட்டத்தின் வரலாற்றின் வழியாக பேரோவியமாக தீட்டிக்காட்டும் நாவல் இது. இதன் கதை தமிழும் தோன்றாத, தெய்வங்களும் தோன்றாத தொல்பழங்காலத்தில் தொடங்கி இன்றையகாலம் வரை வந்து நிற்கிறது. புதுக்காப்பியம் என போற்றப்பட்ட படைப்பு இது\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513168747,"sku":"BK2816","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kotravai.jpg?v=1788280854"},{"product_id":"kumarithuraivi","title":"குமரித்துறைவி","description":"\u003cp\u003e1311ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு. 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள். அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல். “இது ஒரு மங்கலப்படைப்பு. முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513201515,"sku":"BK2817","price":216.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kumarithuraivi.jpg?v=1788280854"},{"product_id":"malai-poothapodhu","title":"மலைபூத்தபோது","description":"\u003cp\u003eஇவை கவிதையின் விளிம்பில் நின்றிருக்கும் கதைகள். கவிதைக்குரிய சொல்லி முடிக்காத தன்மை, உருவாகாத உணர்வுகளாக நின்றிருக்கும் தன்மை, சொல்லாட்சிகள் வழியாக மட்டுமே தொடர்புறுத்தும் தன்மை ஆகியவை கொண்டவை இக்கதைகள். அவ்வகையில் தமிழில் புதுமைப்பித்தனில் இருந்து தொடங்கும் ஒரு நுண்ணிய மரபில் இணைபவை. ஆகவே உணர்வெழுச்சிகளை, வாழ்க்கையின் முழுச்சித்திரங்களை இக்கதைகள் காட்டுவதில்லை. புன்னகைக்க வைக்கும், கற்பனை விரியச்செய்யும், வாழ்க்கையின் முழுமை நோக்கிய பார்வை ஒன்றை அளிக்கும் ஒரு தருணம், அல்லது உளநிலை மட்டுமே இவற்றில் வெளிப்படுகிறது.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513234283,"sku":"BK2818","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/malai-poothapodhu.jpg?v=1788280854"},{"product_id":"malarthuli","title":"மலர்த்துளி","description":"\u003cp\u003eமலரினும் மெல்லிது என்று காதலைச் சொன்னார் மூதாதை. காதல் என்பது மானுட உள்ளங்கள் தொட்டுக்கொள்ளும் மிக நுட்பமான, மிகப்பூடகமான, மிகத்தற்செயலான ஒரு புள்ளி மட்டும்தான். அந்தப் புள்ளியை வெவ்வேறு வகையில் சொல்லிவிட முயன்றிருக்கும் கதைகள் இவை. அந்த புள்ளியில் இருக்கும் பாவனைகள், கரவுகள், கண்டடைதல்கள், பரவசங்கள். அதைச் சொல்லிவிடவே எல்லா புனைவு உத்திகளும் இவற்றில் கையாளப்பட்டுள்ளன.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513267051,"sku":"BK2819","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/malarthuli.jpg?v=1788280853"},{"product_id":"mann","title":"மண்","description":"\u003cp\u003eவெண்முரசு எழுதும் கனவு எனக்கு 1990 முதல் இருந்துவந்தது. என் பழைய கடிதங்களில் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன் என நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான உளநிலையை, அறிவை உருவாக்கவே இருபத்தைந்தாண்டுகள் ஆயின. அந்த பயணத்தில் மகாபாரதத்தை ஒட்டி சிலகதைகளை எழுதிப்பார்த்தேன். அவற்றில் திசைகளின் நடுவே, பத்மவியூகம் போன்ற கதைகள் புகழ்பெற்றவை. இன்று வாசிக்கையில் அவற்றினூடாக வெண்முரசின் மெய்மையை நோக்கி நான் நகர்ந்து வந்திருப்பதை காணமுடிகிறது. இக்கதைகள் நான் என் மகாபாரதத் தேடலின் தடங்கள். அதேசமயம் நவீனக்கதைகளும்கூட\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513299819,"sku":"BK2820","price":136.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/mann.jpg?v=1788280855"},{"product_id":"merku-chalaram","title":"மேற்குச் சாளரம்","description":"\u003cp\u003eஇலக்கிய அழகியலுக்காக நாம் எப்போதும் மேற்குச் சன்னலை திறந்து வைத்திருக்கிறோம். பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பா உலகமெங்கும் சென்றது, உலக இலக்கியங்களை எல்லாம் தன் மொழிகளில் கொண்டுவந்து குவித்தது. ஆகவே உலகை அறிய ஐரோப்பாவை நோக்கியே ஆகவேண்டும். இதுவும் அத்தகைய ஒரு முயற்சி. ஆனால் வழக்கமாக எது அதிகமாகப் பேசப்படுகிறதோ அதை மட்டுமே கவனிப்பது நம் வழக்கம். இந்நூல் பரவலாகப் பேசப்படாத நூல்களைப் பற்றி பேசுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலான மாஸ்டர் கிறிஸ்டியன் (மேரி கொரெல்லி) முதல் சமகாலத்து நாவலான காண்டாக்ட் (கார்ல் சகன்) வரை, ஜப்பானிய நாவலான வுமன் ஆன் டியூன்ஸ் (கோபோ ஆப்) முதல் மத்தியக்கிழக்கு நாவலான பிரிட்ஜ் ஆன் தி டிரினா (இவோ ஆண்டிரிச்) வரை அதன் எல்லை விரிகிறது. இந்நூல் அந்நாவல்களின் கதையை அழகிய சுருக்கமான சித்திரமாக அளிக்கிறது. அவற்றின் மீது வாசக மனம் திறக்கும்படி சில நுண்ணிய அவதானிப்புகளை நிகழ்த்துகிறது.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513398123,"sku":"BK2821","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/merku-chalaram.jpg?v=1788280855"},{"product_id":"mudhunaaval","title":"முதுநாவல்","description":"\u003cp\u003eபுறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன. மிகமெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள், அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன. எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ அங்குதான் இக்கதைகளின் மையக் கண்டடைதல் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது. இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன. அங்கிருந்து அவை கொண்டுவருவது இவ்வுலக வாழ்க்கையை புதிய ஒளியில் காட்டும் ஒரு கோணத்தை. இவ்வாழ்க்கையை பிளந்துசெல்லும் ஒரு புதிய ஒரு அர்த்தப்பரப்பை. மெய்மை எப்போதுமே அப்பால்தான் உள்ளது.. மலையுச்சிமேல் நின்றாலொழிய நகரத்தைப் பார்க்க முடியாது. இவை அத்தகைய உச்சிமுனைப் பார்வைகள்.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513430891,"sku":"BK2822","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/mudhunaaval.jpg?v=1788280854"},{"product_id":"munsuvadugal","title":"முன்சுவடுகள்","description":"\u003cp\u003eபாதை என்பது முன்னால் சென்றவர்களின் சுவடுகள் இணைந்து உருவான ஒற்றைச் கவடு பல சமயம் அவற்றை நம் விழிகள் பிரித்தறிகின்றன. அவற்றை விட்டுச் சென்ற மாமனிதர்களைக் காண்கிறோம். அவர்களின் முகங்கள் அளவுக்கே துல்லியமானவை காலடிச்சுவடுகள். சந்திக்க நேர்ந்த பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய நினைவுக்குறிப்புகள் இவை. உதிரி நினைவுகளாக இல்லாமல் புனைவெழுத்தாளனின் மொழியாளுமையுடன் கதைபோல சித்திரிக்கப்பட்டவை. ஆகவேதான் நெகிழ்வும் எழுச்சியும் அளிக்கும் தருணங்களால் ஆனவையாக உள்ளன இவை. வரலாற்றை மனிதர்களாக்க காணும் அரிய அனுபவத்தை அளிப்பவை இப்படைப்புகள்.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513463659,"sku":"BK2823","price":88.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/munsuvadugal.jpg?v=1788280854"},{"product_id":"naangavadhu-kolai","title":"நான்காவது கொலை","description":"\u003cp\u003eதிண்ணை இணையதளத்தில் 2002ல் இதை நான் எழுதினேன். வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு கேலிக்கூத்தான உலகம் இது. எழுத்து, இதழியல் பற்றிய கேலி என்று சொல்லலாம்\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513496427,"sku":"BK2824","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/naangavadhu-kolai.jpg?v=1788280854"},{"product_id":"nathaiyin-paadhai","title":"நத்தையின் பாதை","description":"\u003cp\u003eஇலக்கியம் விந்தையானதொரு கலை. முதன்மையாக கலையென நிலைகொள்கிறது. எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை. ஆனால் இலக்கியமென்னும் கலை அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட. ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது. ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது. பிற கலைகளைப்போல் அன்றி நேரடியாகவே சமூக உருவாக்கத்தில், அரசியலில் பங்கெடுக்க முடிகிறது. அந்த ஊடாட்டத்தின் சில புள்ளிகளை இக்கட்டுரைகள் தொட்டுப் பேசுகின்றன. பெரும்பாலும் சிந்தனைக்குரிய சில திறப்புகளை உருவாக்குவதை, சில வினாக்களை முன்வைப்பதை மட்டுமே செய்கின்றன. இலக்கியம் எழுதுவது, வாசிப்பதனால் மட்டுமல்ல தொடர்ச்சியான விவாதத்தாலும் நிலைகொள்ளவேண்டிய ஒன்று. இலக்கியத்தை அதன் வெவ்வேறு களங்களை முன்வைத்து விவாதிக்கும் இக்கட்டுரைகள் இலக்கியத்தை ஓர் அறிவியக்கமாக நிலைநிறுத்தவும் அதன் கலைப்பரப்பை விரிவாக்கவும் முயல்பவை\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513529195,"sku":"BK2825","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/nathaiyin-paadhai.jpg?v=1788280855"},{"product_id":"naveenathamilakkiya-arimugam","title":"நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்","description":"\u003cp\u003eஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது. இந்நூலின் முதல் பகுதி, எளிய வாசகன் ஒருவனுக்கு இலக்கிய அறிமுகம் உருவாகும்போது ஏற்படும் ஐயங்-களைப்பற்றிப் பேசுகிறது. விளக்கங்களை அளிக்கிறது. ஒரு நூலை எப்படி வாசிப்பது என்று கற்பிக்கிறது. இரண்டாம் பகுதி, நவீனத் தமிழிலக்கிய வரலாறை அறிமுகப்படுத்துகிறது. மூன்றாம் பகுதி, நவீனத் தமிழிலக்கியத்தை வாசிப்பதற்கான விரிவான பரிந்துரைகள் அடங்கியது. சிறந்த நாவல்கள், சிறந்த சிறுகதைகள், சிறந்த கவிதைகள், சிறந்த கட்டுரை நூல்கள் ஆகியவற்றைப் பட்டியல் இடுகிறது. நான்காம் பகுதி, இலக்கிய இயக்கங்களையும் இலக்கியக் கொள்கை-களையும் சுருக்கமாக அறிமுகம் செய்கிறது. ஐந்தாம் பகுதியில், இலக்கிய வாசிப்புக்கு உதவக்கூடிய 200 இலக்கியக் கலைச் சொற்கள் விளக்கத்துடன் அளிக்கப்பட்டுள்ளன.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513561963,"sku":"BK2826","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/naveenathamilakkiya-arimugam.jpg?v=1788280854"},{"product_id":"nooru-naarkaaligal","title":"நூறு நாற்காலிகள்","description":"\u003cp\u003e\"இது நம் கண்முன்னால் நிகழ்ந்த வாழ்க்கை நம் காலடியில் ஏங்கெங்கோ இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை.”\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513594731,"sku":"BK2827","price":400.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/nooru-naarkaaligal.jpg?v=1788280854"},{"product_id":"novel-kotpaadu","title":"நாவல் கோட்பாடு","description":"\u003cp\u003eநாவல் என்றால் என்ன? கதை, சிறுகதை, நெடுங்கதை, நாவல் - இவற்றுக்கு இடையே என்ன வித்தியாசம்? தமிழில் எழுதப்பட்ட ‘நாவல்கள்’ என்று சொல்லப்படுபவை உண்மையிலேயே நாவல்கள்தானா? இதுபோன்ற கேள்விகளை எழுப்பும் ஜெயமோகன் அந்தக் கேள்விகளுக்கு, தெளிவான, தருக்கபூர்வமான பதில்களை நிறுவுகிறார்.இந்நூல் ஜெயமோகன் எழுதிய முதல் திறனாய்வு நூல். வெளியான காலத்தில் பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கினாலும், சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு நூலாகவே இருந்துள்ளது.ஒரு தேர்ந்த வாசகனது ரசனையை மேம்படுத்துவதில் இந்த நூல் வெற்றி அடைகிறது என்றே சொல்ல வேண்டும்.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513627499,"sku":"BK2828","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/novel-kotpaadu.jpg?v=1788280854"},{"product_id":"olirum-paathai","title":"ஒளிரும் பாதை","description":"\u003cp\u003e“ஒரு நூலை வாசிக்கத் தோன்றும் ஒருவர் இயற்கையால் கோடானுகோடிகளில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட அபூர்வமான பிறவி. அவருக்கு ஒரு வரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். தன் சூழலை மாற்றமுடியும். தெரிந்தோ தெரியாமலோ எதிர்காலத்தை மாற்றமுடியும். அந்த வரம் பெற்ற ஒருவர் எனக்கு கை ஓடவில்லை, கால் விளங்கவில்லை, காது கேட்கவில்லை என்று சொல்வதில் உள்ளது மிகப்பெரிய அறியாமை. அது அந்த ஆற்றலை அவருக்களித்த பெரும் இயற்கைச் சாரத்துக்குச் செய்யப்படும் ஓர் நுண் அவமதிப்பு.”\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513660267,"sku":"BK2829","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/olirum-paathai.jpg?v=1788280855"},{"product_id":"oomai-chennaai","title":"ஊமைச்செந்நாய்","description":"\u003cp\u003eஅது அவனுடைய சுயமறியும் தருணமும்கூட. ஆகவே அது ஒரு தியானம். நம் மாபெரும் குருநாதர்களின் வாழ்க்கையில் எல்லாம் சாகசம் என்னும் அம்சம் இருப்பதைக் காணலாம். சாகசத்தையும் மிகுபுனைவையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட உத்வேகமிக்க சிறுகதைகளின் தொகுதி இது. ‘மத்தகம்,’ ‘ஊமைச்செந்நாய்,’ ‘காமரூபிணி’போன்ற புகழ்மிக்க கதைகள் இதில் உள்ளன.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513693035,"sku":"BK2830","price":264.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/oomai-chennaai.jpg?v=1788280854"},{"product_id":"orupaaluravu","title":"ஒருபாலுறவு","description":"\u003cp\u003eதமிழ்ச்சூழலிலேயே ஒருபாலுறவு ஈர்ப்பு கொண்டவர்கள் பலர் இருப்பதும், இங்குள்ள சமூகநோக்கு அவர்களை ஒரு தலைமறைவுச் சமூகமாக ஆக்கியிருப்பதும் இணைய ஊடகம் வந்த பின்னரே தெரியவந்தது. ஜெயமோகனின் இணையதளத்தில் வந்த கடிதங்களில் இருந்து தொகுக்கப்பட்ட இத விவாதங்களில் பல தளங்களில் இருந்து குரல்கள் ஒலிக்கின்றன. ”என்னுடைய பார்வை எப்போதுமே தெளிவானது. நான் பாலியல், ஒழுக்கவியல் கொண்டு மனிதர்களை அளவிடுவதில்லை. சமூகப்பங்களிப்பைக் கொண்டே அளவிடுகிறேன். ஒருவர் தன் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்வது அப்பங்களிப்பின் வழியாகவே. அதை இயற்றுவதற்குரிய வாழ்க்கையை அவர் அமைத்துக்கொண்டார் என்றால் அதுவே உகந்த வாழ்க்கை” என்று ஜெயமோகன் இவ்வுரையாடலைத் தொகுக்கும்போது குறிப்பிடுகிறார்.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513725803,"sku":"BK2831","price":136.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/orupaaluravu.jpg?v=1788280854"},{"product_id":"padaiyal","title":"படையல்","description":"\u003cp\u003eஇந்நூலில் உள்ள கதைகள் அனைத்தும் தமிழகம் வெவ்வேறு அரசியல் ஆடல்களால் கொந்தளித்துக் கொண்டிருந்த மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் நிகழ்பவை. அந்த காலப்பின்னணியில் அரசகுடியினர், சாமானியர் என பல்வேறு தனிமனிதர்கள் சந்தித்த சிக்கல்களையும், அவர்களின் உள்ளங்களையும் ஆராய்கின்றன இவை. வேகமான, தீவிரமான வாசிப்பனுபவம் அளிக்கும் கதைகள். படையல் அக்காலகட்டத்தின் ஆன்மிக உச்சநிலை ஒன்றைச் சொல்கிறது என்றால் எரிசிதை அக்காலகட்டத்தின் ஆழ்ந்த காதலொன்றைப் பேசுகிறது. மங்கம்மாள் சாலை என்னும் குறுநாவல் ஆன்மிகமும் இலக்கியமும் வாழ்க்கையைச் சந்திக்கும் மர்மப்புள்ளி ஒன்றை தொட்டுக்காட்டுகிறது.\u003c\/p\u003e","brand":"விஷ்ணுபுரம் பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":53790513758571,"sku":"BK2832","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/padaiyal.jpg?v=1788280855"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/collections\/Vishnupuram_Pathippagam.jpg?v=1788280668","url":"https:\/\/anytamilbooks.com\/collections\/vishnupuram-pathippagam.oembed?page=3","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}