{"title":"வளரி","description":null,"products":[{"product_id":"sillarai-muthalitalargal","title":"சில்லரை முதலீட்டாளர்கள்","description":"\u003cp\u003eஒரே பாட்டில் சூரிய வம்சம் சரத்குமார் போன்றோ, அண்ணாமலை ரஜினிபோல உயர நினைக்கிறீர்களா? கண்டிப்பாக இந்தப் புத்தகத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462285675,"sku":"BK3082","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/sillarai-muthalitalargal.jpg?v=1788695785"},{"product_id":"pangu-chandail-vettrigaramana-varthagathirrku-25-eliya-vazhi","title":"பங்குச் சந்தையில் வெற்றிகரமான வர்த்தகத்திற்கு 25 எளிய வழிகள்","description":"\u003cp\u003eஇந்நூல் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதை சொல்லும் நூல் இல்லை. பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பதற்கான Emotional Balance பற்றியது. சந்தையில் நடக்கும் ஆறு மணி நேர வர்த்தகத்திற்கு முன்னும், பின்னும் நீங்கள் செய்ய வேண்டிய பயிற்சியைப் பற்றியது. இந்நூல் எந்தப் பங்கில் முதலீடு செய்தால், எவ்வளவு லாபம் என்று பேசாது. நீங்கள் எந்த மாதிரி மனநிலையில் முதலீடு செய்ய வேண்டும், எந்த மாதிரி சூழ்நிலையில் வெளியே வர வேண்டும் என்பதை பேசுகிறது. சில இடத்தில், சந்தையை வேடிக்கைப் பார்ப்பதைக் கூட சாணக்கியத்தனம் என்கிறது இந்நூல். களத்தில் விளையாட செல்லும் ஆட்டக்காரர், பயிற்சி எவ்வளவு முக்கியமோ, சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் போதிய தெளிவான மனநிலை முக்கியம். இந்நூல் ஒவ்வொரு Retail முதலீட்டாளர்களுக்கும் Emotional Guide -ஆக இருக்கும்.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462318443,"sku":"BK3083","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/pangu-chandail-vettrigaramana-varthagathirrku-25-eliya-vazhi.jpg?v=1788695786"},{"product_id":"aalapanai","title":"ஆலாபனை","description":"","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462351211,"sku":"BK3084","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/aalapanai.jpg?v=1788695786"},{"product_id":"cbi-oozhalukku-ethiraana-muthal-amaippu","title":"சி.பி.ஐ : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு","description":"\u003cp\u003eஐம்பது வருடம் முன்பு கட்சி தொடங்கியவர்கள் முதல் நேற்று கட்சி தொடங்கியவர்கள் வரை ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுக்கிறேன் என்கிறார்கள். ஆனால், இந்தியாவை ஊழல் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதிகாரவர்க்கத்தின் அனைத்து மட்டங்களிலும் லஞ்சம் சகஜமாகிவிட்டது. ஊழலுக்கு எதிராகப் பலர் வாய் கிழியக் கத்தினாலும், அதை வெளியே கொண்டு வருவதில் கடைசி வாய்ப்பாக நாம் நம்பியிருப்பது சி.பி.ஐயை மட்டும்தான். சி.பி.ஐ என்பவர்கள் யார்? இந்தப் பணிக்கு யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? அவர்களின் விசாரணை கைது நடவடிக்கைகளில் எப்படியெல்லாம் யுக்திகளை கையாள்கிறார்கள்? அரசியல் தலையீடுகளுக்குப் பணிய வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஏன் வருகிறது? இப்படி, நம்மில் பலருக்கும் சி.பி.ஐ குறித்து பல கேள்விகள் இருக்கிறது. இத்தனைக் கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் புரிந்துகொள்ள உதவும்.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462383979,"sku":"BK3085","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/cbi-oozhalukku-ethiraana-muthal-amaippu.jpg?v=1788695786"},{"product_id":"chathrapathi-sivaji","title":"சத்ரபதி சிவாஜி","description":"","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462416747,"sku":"BK3086","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/chathrapathi-sivaji.jpg?v=1788695785"},{"product_id":"corporate-samiyarkal","title":"கார்ப்பரேட் சாமியார்கள்","description":"\u003cp\u003eமாறிவரும் வாழ்க்கைச் சூழல், உணவு முறைப் பழக்கம் போன்றவற்றால் மனிதர்களுக்கு உடல் அளவிலும் மனத்தளவிலும் எத்தனையோ பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில், பெரும்பாலானவர்கள் அறிவியல் மற்றும் மருத்துவ முறையில் நிவாரணம் வேண்டி மருத்துவர்களைத் தேடிச் செல்கின்றனர். மற்றவர்கள், ஆன்மிகவாதிகளைத் தேடிச் செல்கின்றனர். ஒரு காலத்தில், ஆதிசங்கரர், சங்கராச்சாரியார், சாய்பாபா, குருநானக் என எத்தனையோ துறவிகள், தங்களுடைய ஆன்மிக அனுபவங்களை மக்களை நல்வழிப்படுத்தவும், நெறிப்படுத்தவும் பயன்படுத்தினர். அப்படி மக்களுக்குச் செய்யும் 'சேவை'யை, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று அவர்கள் நினைத்துச் செயல்படுத்தினர். இவர்களைத் தொடர்ந்து வந்த சிலர், எதையும் இலவசமாகக் கொடுத்தால் மக்கள் உதாசீனப்படுத்திவிடுவார்கள், மக்கள் மத்தியில் 'நிற்க' முடியாது என்று நினைத்து, மக்களுக்கான சேவையில் கொஞ்சம் மசாலாவைச் சேர்த்துக் கொண்டதன் விளைவு, ’கார்பரேட் சாமியார்கள்’ என்ற முத்திரை. இன்று உலக அளவில் எத்தனையோ ஆன்மிகவாதிகள், மக்களுக்கான உண்மையான சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் புத்தகத்தில், இந்தியாவில் செயல்பட்ட, செயல்பட்டுக்கொண்டிருக்கும் சில ஆன்மிகவாதிகளைப் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு சாதாரண நிலையில் இருந்து இன்று பெரிய பெரிய ஆசிரமங்களையும், கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் வைத்துக்கொண்டு, மக்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகளை அலசி ஆராய்ந்துள்ளார், நூலாசிரியர் குகன்.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462449515,"sku":"BK3087","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/corporate-samiyarkal.jpg?v=1788695785"},{"product_id":"cryptocurrency-puthaiyalaa-bhoothamaa","title":"கிரிப்டோகரன்ஸி: புதையலா? பூதமா?","description":"\u003cp\u003eகிரிப்டோவில் பணம் போடு லட்சங்களில் பெருகிவிடும். வீட்டில் உட்கார்ந்தபடியே காலாட்டிக்கொண்டு சுகமாக வாழலாம் என பலர் களத்தில் இறங்கியுள்ளார்கள். கிரிப்டோ முதலீட்டில் பணம் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் அவர்களின் கடுமையான உழைப்பை பற்றி யாருக்கும் தெரிவதில்லை. உழைப்பில்லா பணம் , சுகபோகமாக வாழ பணம் என்று ’கிரிப்டோகரன்ஸி’ ஒரு குறுக்குவழி எனப் பலரும் இதில் போய் விழுந்து மடிகிறார்கள். கிரிப்டோவைப் பற்றியும், அதன் நதிமூலமான சைபர்பங்க்ஸ் பற்றியும் பேசும் முதல் தமிழ் புத்தகம் இதுதான். கிரிப்டோகரன்ஸி பற்றியும், ப்ளாக் செயின் தொழில்நுட்பத்தைப் பற்றியும், சாதாரண மக்கள் மீதான அன்புடன் அவர்கள் ஏமாந்துவிடக் கூடாதென அக்கறையுடன் எழுதப்பட்ட புத்தகம். இந்தப் புத்தகம் உங்கள் எதிர்காலத்தின் ஒரு திறவுகோல் என்றால் மிகையில்லை.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462482283,"sku":"BK3088","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/cryptocurrency-puthaiyalaa-bhoothamaa.jpg?v=1788695785"},{"product_id":"dark-net","title":"டார்க் நெட் (இருள் இணையத்தின் வரலாறு)","description":"","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462515051,"sku":"BK3089","price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/dark-net.jpg?v=1788695786"},{"product_id":"enadhu-parvaiyil-ramayanam-mahabaratham","title":"எனது பார்வையில் இராமாயணம், மகாபாரதம்","description":"","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462547819,"sku":"BK3090","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/enadhu-parvaiyil-ramayanam-mahabaratham.jpg?v=1788695786"},{"product_id":"endrendum-nandriyudan","title":"என்றென்றும் நன்றியுடன்...","description":"\u003cp\u003eஎன்றென்றும் நன்றியுடன்... இந்நூலின் ஆசிரியர் ஜே.டி.ஜீவா அவர்கள் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்களிடம் துணை, இணை இயக்குனராகப் பணிபுரிந்தவர். தற்போது இயக்குனராகும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். இந்தப் புத்தகம் படிக்கும் போது இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்கள் பற்றிய பல அரியத்தகவல்கள், சுவாரஸ்யமான விஷயங்கள் இதுவரை தெரியாத அவரைப் பற்றிய மெய்சிலிர்க்கவைக்கும் பதிவுகள் நம்மை பிரம்மிப்பூட்ட வைக்கும். கே.எஸ்.ரவிகுமாரை உதவி இயக்குனராக, இயக்குனராக, திரைக்கதை ஆசிரியராக, கதையாசிரியராக மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. 'கே.எஸ்.ரவிகுமார்' என்னும் நல்ல மனிதரையும் இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் இந்நூல் ஒரு வழிகாட்டி.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462580587,"sku":"BK3091","price":56.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/endrendum-nandriyudan.jpg?v=1788695785"},{"product_id":"enthira-arinajn","title":"எந்திர அறிஞன்","description":"","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462613355,"sku":"BK3092","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/enthira-arinajn.jpg?v=1788695785"},{"product_id":"evm-minnanu-vaakkuppathivu-iyanthiram","title":"EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்","description":"\u003cp\u003eEVM-கள் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலா? EVM-களை ஹேக்கிங் செய்ய முடியுமா? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்து வாக்குகளைத் திருட முடியுமா? ஒரு அரசியல் கட்சிக்குச் சாதகமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்க முடியுமா? வளர்ந்த நாடுகள் ஏன் EVM-களைப் பயன்படுத்துவதில்லை? EVM-கள் தேர்தல் முறைகேடுகளைக் குறைக்குமா? கடினமான உண்மை, ஆதாரப்பூர்வமான பதிவுகள், EVM-களின் வளர்ச்சி செயல்முறையில் ஈடுபட்டுள்ளவர்களின் நேரடி விவரிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில், நமது அனைத்து நச்சரிக்கும் கேள்விகளுக்கும் தெளிவு ஏற்படுத்தும் வகையில் தர்க்கத்துடன் இந்தப் புத்தகம் பதிலளிக்கிறது. அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அதிர்ஷ்டம் மாறினால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான தங்கள் நிலைப்பாட்டை எவ்வாறு மாற்றிக்கொண்டார்கள் என்பதையும் இது காட்டுகிறது. EVM-கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய உண்மையான மற்றும் எளிமையான தொழில்நுட்ப விளக்கங்களைச் சாதாரண நபர்களுக்கு வழங்குகிறது.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462646123,"sku":"BK3093","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/evm-minnanu-vaakkuppathivu-iyanthiram.jpg?v=1788695785"},{"product_id":"galileo-galilei","title":"கலீலியோ கலீலி","description":"\u003cp\u003eஎதையும் கேள்வி கேள் என்றார் சாக்ரடீஸ். அதை நடைமுறையில் வெற்றிகரமாகச் செயல் படுத்தியவர் கலீலியோ கலீலி. சூரியன்தான் பூமியைச் சுற்றுகிறது என்று உலகம் திடமாக நம்பிக்கொண்டிருந்த சமயத்தில் வலுவான எதிர்ப்புக்குரலை எழுப்பினார் கலீலியோ. ‘சொல்லும் விஷயம் தவறாக இருந்தால் தயங்காமல் முரண்படு. போராடு. உன் வாதத்தை நியாயமாக எடுத்து வை.’ கலீலியோ கற்றுத் தரும் பாடம் இது. பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்று கலீலியோ முறைப்படி நிரூபித்துக் காட்டியபோதும் அத்தனை சீக்கிரத்தில் உலகம் ஏற்றுக்கொண்டுவிட வில்லை. இதென்ன புதிய கதை என்று கேலி பேசினார்கள். ‘பைபிளுக்கு எதிராக இப்படி ஒரு புரளியா; உன்னை என்ன செய்கிறேன் பார்!’ என்று மிரட்டினார்கள். போராட்டங்களை எதிர்கொண்டு வாழ்க்கை யில் வெற்றி பெறுவது எப்படி என்பதை கற்றுத்தரும் மந்திர வரலாறு இது.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462678891,"sku":"BK3094","price":64.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/galileo-galilei.jpg?v=1788695785"},{"product_id":"hindhi-atchi-mozhiyanal","title":"இந்தி ஆட்சி மொழியானால்?","description":"","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462711659,"sku":"BK3095","price":88.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/hindhi-atchi-mozhiyanal.jpg?v=1788695785"},{"product_id":"ilavarasan","title":"இளவரசன்","description":"\u003cp\u003eஇத்தாலியின் சர்வாதிகாரியான முசோலினி, கல்லூரி மாணவராயிருக்கும் போது, டாக்டர் பட்டம் பெறுவதற்காகத் தான் எழுத வேண்டிய பொருளாராய்ச்சிக் கட்டுரைக்கு இந்த நூலையே தேர்ந்தெடுத்தார். ஹிட்லரின் படுக்கையறையில் அவர் படிப்பதற்காகப் பயன்படுத்திய நூல்களில் ’இளவரசன்’ நூல் மிக முக்கியமானது. மாகிஸ் வேனர் என்ற பேராசிரியர் இந்த நூலுக்குத் தாம் எழுதியுள்ள முன்னுரையில், லெனினும், ஸ்டாலினும் கூட மாக்கியவெல்லியின் இந்த நூலைத் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். 1559-ஆம் ஆண்டில் ரோம் பேரரசால் தடை செய்யப்பட்ட நூல் பட்டியலில் இந்த நூலும் சேர்க்கப்பட்டது. நிக்கோலோ மாக்கியவெல்லி வேறு பல நூல்களை எழுதி இருந்தாலும் இவருக்குப் புகழையும், எதிர்மறை விமர்சனத்தையும் பெற்றுத் தந்த நூலாகவும் புகழ்வாய்ந்த நூலாகவும் ’இளவரசன்’ உள்ளது. இது ஒரு பழமையான அரசியல் நூலாக இருந்தாலும், தற்கால அரசியலுக்கும் ஏற்றவாறு இருப்பதாகப் பலரும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். எப்படியாயினும் அரசியலில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படுபவர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாகத் திகழ்கிறது.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462744427,"sku":"BK3096","price":136.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ilavarasan.jpg?v=1788695785"},{"product_id":"inappadukolaikal","title":"இனப்படுகொலைகள்","description":"\u003cp\u003eஎதுவெல்லாம் இனப்படுகொலை ? • ஒர் இனத்தின் மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்வது. • குறிப்பிட்ட இனத்தின் அடுத்த தலைமுறையை உருவாகவிடாமல் தடுப்பது • ஓர் இனத்தின் மக்களை உடலாலும், உள்ளத்தாலும் காயப்படுத்துவது உட்பட குறிப்பிட்ட இன மக்கள் மீது நிபந்தனைகள் விதித்து, அவர்களின் வாழ்வாதாரங்களைக் குறைத்து, வாழும் இடத்தை விட்டு அகற்றுவது • ஓர் இனத்தை வளரவிடாமல் செய்து இருந்த சுவடே தெரியாமல் அழிப்பது • போர் செய்யும் போது பின்பற்ற வேண்டிய மரபுகளை மீறி, போர்க் குற்றங்கள் வழியாக ஓர் இன மக்களை அடியோடு அழிப்பது. பல இடங்களில் நடந்த இனப்படுகொலைகளை, பதைபதைக்கச் செய்யும் ஒரு வரலாற்றை, அதன் தீவிரம் குறையாமல் சொல்லும் நூல்.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462777195,"sku":"BK3097","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/inappadukolaikal.jpg?v=1788695785"},{"product_id":"india-arangal","title":"இந்திய அரண்கள்","description":"\u003cp\u003eஇந்திய எல்லையைக் காப்பவர்கள் இராணுவத்தினர்கள். மாநிலத்தின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுபவர்கள் காவல்துறையினர். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தவறு செய்தால் விசாரணை நடத்துவதற்கு சி.பி.ஐ இருக்கிறது. வெளிநாட்டில் நமக்குச் சாதகமாகத் தகவல்களைச் சேகரிக்கவும், எதிராக நடக்கும் சம்பவங்களை ஒடுக்கவும், இவை குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுக்கவும் ‘ரா’ (RAW) என்ற உளவு அமைப்பு இருக்கிறது. மாவோயிஸ்ட், லோக்கல் தீவிரவாதிகளின் செயல்களைத் தடுக்க ஐ.பி (I.B) என்ற உளவு அமைப்பு இருக்கிறது. இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ATS, EIC, CEIB, NCB, NATGRID, WCCB, NTRO, JCB, SFIO, ED, CID, CAPF, CVC, NIA போன்ற அமைப்புகளின் உதவியில்லாமல் இந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. ஒரு சில அமைப்பினர் உதவியில்லாமல் காவல்துறையினரோ, இராவணுவமோ, உளவுத்துறையோ தனியாகச் செயல்பட முடியாது. தங்களின் அதிரடி ஆப்பரேஷன், மீட்புப் பணி, எதிரிகளை வீழ்த்துவது போன்ற பல முயற்சிகளில் அவர்களின் உதவியில்லாமல் வெற்றிபெறவோ, பல தாக்குதல்களைப் புலனாய்வு செய்யவோ முடியாது. நமது நாட்டைக் காக்கும் உண்மையான அரண்களைப் புரிந்துகொள்ள இந்த நூல் எளிமையான கையேடு.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462809963,"sku":"BK3098","price":88.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/india-arangal.jpg?v=1788695785"},{"product_id":"irandu-per","title":"இரண்டு பேர்","description":"\u003cp\u003eடால்ஸ்டாயை வாசிக்கையில் என்ன நேர்கிறது. முதலில் அது ஒரு ரஷ்ய நாவல் என்ற அந்நியத்தன்மை விலகிப்போய் மிக நெருக்கமாக வாழ்வை அது விவரிக்கிறது. அத்தோடு நாவலின் மையமாக ஒரு கதாபாத்திரம் இருப்பதில்லை. நாவல் வாழ்வின் எண்ணிக்கையற்ற கிளைவேர்களுடன் இணைந்தே விரிவடைகிறது. அத்தோடு நாவலின் வழியாக சமகாலமும் வாழ்வின் சுகதுக்கங்களும் அபத்தங்களும் விவரிக்கபடுகின்றன. விமர்சிக்கபடுகின்றன. அதே நேரம் ரஷ்யவாழ்வின் தனித்துவங்களும் அதன் கலாச்சார நுண்மையும் நம்மால் உணர முடிகிறது. குறிப்பாக டால்ஸ்டாய் என்ற கதைசொல்லியின் ஆளுமை பன்முகப்பட்டது. சிலவேளைகளில் அது ஒரு போர்வீரனைப் போல கலக்கமற்று வாழ்வினை விவரிக்கிறது. சில வேளைகளில் அது ஒரு ஞானியைப் போல வாழ்வு இவ்வளவு தான் என்று அடையாளப்படுத்துகிறது. இன்னும் சில தருணங்களில் அது ஜிப்சியைப் போல சாகசமே வாழ்க்கை என்கிறது. சில தருணங்களில் இயற்கையின் பிரம்மாண்டத்தின் முன்பாக மனித வாழ்க்கை காற்றில் அடித்து செல்லப்படும் ஒரு மணல்துகள் என்று சுட்டிக்காட்டுகிறது. - எஸ். ராமகிருஷ்ணன் 2012ல், இரண்டு பேர் நாவலை மையமாக வைத்து ‘Boxing Day' என்ற ஆங்கிலப் படம் எடுக்கப்பட்டது.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462842731,"sku":"BK3099","price":96.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/irandu-per.jpg?v=1788695785"},{"product_id":"irantu-kizhavarkal-marrum-pira-pataippukal","title":"இரண்டு கிழவர்கள் மற்றும் பிற படைப்புகள்","description":"","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462875499,"sku":"BK3100","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/irantu-kizhavarkal-marrum-pira-pataippukal.jpg?v=1788695786"},{"product_id":"iruvar-mgr-vs-karunanithi-oruvana-kathai","title":"இருவர் எம்.ஜி.ஆர் VS கருணாநிதி உருவான கதை","description":"\u003cp\u003eஇருவர் எம்.ஜி.ஆர் VS கருணாநிதி உருவான கதை பெரியார் – ராஜாஜி நட்புக்குப் பிறகு, தமிழகத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் நட்பு என்றால் கருணாநிதி – எம்.ஜி.ஆர் நட்புதான். கருத்து ரீதியாக இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டார்களே தவிர, கொள்கை ரீதியாக இருவருமே ’அண்ணா’ வழி செல்பவர்கள். நாம் ஏற்றாலும், ஏற்காவிட்டாலும் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு “கருணாநிதி – எம்.ஜி.ஆர்” நட்பு. நண்பர்களாக இருக்கட்டும், எதிரிகளாக இருக்கட்டும் இருவரின் வாழ்க்கையில் இருந்தும் நாம் கற்க வேண்டியது அதிகமாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் – கருணாநிதி இருவருக்கும் நாற்பது வருட பழக்கம். இருபத்தைந்து வருடம் நண்பர்களாகவும், பதினைந்து வருடங்கள் அரசியல் எதிர் தரப்பிலும் இருந்து செயல்பட்டவர்கள். அடுத்து வரும் அரசியல் தலைவர்கள் மக்களுக்காக ஒற்றுமையாகச் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இந்தப் புத்தகம் அவசியாக இருக்கிறது.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462908267,"sku":"BK3101","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/iruvar-mgr-vs-karunanithi-oruvana-kathai.jpg?v=1788695785"},{"product_id":"kadalukku-appaal","title":"கடலுக்கு அப்பால்","description":"\u003cp\u003eதமிழில் முதல் புலப்பெயர்வு நாவல் என்று சொல்லலாம். பழைய இராமநாதபுரம் ஜில்லா மக்களின் வாழ்க்கை கிட்டதட்ட 60 வருடங்களுக்கு முன்பு வரை இந்தோனேசியாவிலும், மலையாவிலும் வட்டித் தொழில் செய்வதும், அதில் வேலை பார்ப்பதும் தான் பிரதானமாக இருந்தது. இதனை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் ப.சிங்காரம். இரண்டாம் உலகப் போர் கால மலையாவில் கதை தொடங்குகிறது நேதாஜி மீது இருந்த நம்பிக்கை, அவர் மரணத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள், போரின் இழப்புகள், சின்னதொரு காதல் கதை, தத்துவங்கள் என்று அந்தக் காலகட்டத்திற்கே இப்புதினம் நம்மை அழைத்து செல்கிறது.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462941035,"sku":"BK3102","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kadalukku-appaal.jpg?v=1788695785"},{"product_id":"kalaingar-ninaivalaigal-100","title":"கலைஞர் நினைவலைகள் 100","description":"\u003cp\u003eகலைஞர் குறித்தும், கலைஞர் நகைச்சுவை பேச்சு குறித்தும் சுவையான 100 தகவல்கள்.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807462973803,"sku":"BK3103","price":64.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kalaingar-ninaivalaigal-100.jpg?v=1788695785"},{"product_id":"kappalottiya-thamizhan-voc","title":"கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை","description":"","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463006571,"sku":"BK3104","price":88.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kappalottiya-thamizhan-voc.jpg?v=1788695785"},{"product_id":"mahtama-gandhi-vazhvum-paniyum","title":"மகாத்மா காந்தி வாழ்வும் போராட்டமும்","description":"","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463039339,"sku":"BK3105","price":64.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/mahtama-gandhi-vazhvum-paniyum.jpg?v=1788695786"},{"product_id":"marxin-gorky-kathaikal","title":"மார்க்சிம் கார்க்கி கதைகள்","description":"\u003cp\u003e“இலக்கியம் என்பது சமூகக் காரணிகளின் விளைவு மட்டுமல்ல. அது சமூக விளைவுகளின் காரணியுமாகும்.” – மார்க்சிம் கார்க்கி மக்களின் நலன் காக்க தன் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு இயக்கத்தையும் முழுமையாக அர்ப்பணித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு என்றால் அது மார்க்சிம் கார்க்கிதான். கார்க்கியின் தாக்கம் பல எழுத்தாளர்களை, விடுதலைப் போராளிகளை, முற்போக்குச் சிந்தனையாளர்களை, யதார்த்தவாதிகளை உலகம் முழுதும் உருவாக்கிருக்கிறது. அதனாலையே அவர் பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாக கருதப்பட்டார். அன்று முதல் இன்று வரை கார்க்கியின் “தாய்” புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்திற்கு வீரியமூட்டியிருக்கிறது. அப்படிப்பட்ட மார்க்சிம் கார்க்கியின் முத்துக்களான ஐந்து கதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது. உலகில் உழைத்து வாழும் மக்கள் உள்ளவரை, மனிதகுலம் இந்தப் பூமியில் நீடித்திருக்கும் வரை மார்க்சிம் கார்க்கி புகழ் அழியாது நிலைத்திருக்கும்.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463072107,"sku":"BK3106","price":136.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/marxin-gorky-kathaikal.jpg?v=1788695785"},{"product_id":"murintha-chirakukal","title":"முறிந்த சிறகுகள்","description":"","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463104875,"sku":"BK3107","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/murintha-chirakukal.jpg?v=1788695786"},{"product_id":"neruppu-manithan-nelson-mandela","title":"நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா","description":"","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463137643,"sku":"BK3108","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/neruppu-manithan-nelson-mandela.jpg?v=1788695786"},{"product_id":"or-ulavaliyin-kathai","title":"ஓர் உளவாளியின் கதை","description":"\u003cp\u003e”டிசம்பர் 26, 2004-இல் நடந்தது சுனாமி தாக்குதல் அல்ல. நடுக்கடலில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ நடத்திய அணு ஆயுதத் தாக்குதல். இந்தியா அதை மறைக்கிறது.” - இப்படி ஒரு கருத்தைக் கொண்டு லண்டனில் ஓர் இந்திய எழுத்தாளர் புத்தகம் வெளியிட இருக்கிறார். இருபது வருடங்கள் கழித்து இது வெளியே தெரிந்தால் இந்தியாவுக்கு அவமானம். அந்தக் கருத்து உண்மையா? பொய்யா? என்று விவாதிப்பதைவிட, இதைப் பற்றி யாரும் பேசக் கூடாதென்று இந்திய அரசாங்கம் நினைக்கிறது. அதற்காக சி.பி.ஐ, ரா உளவுத்துறை, இராணுவ உளவுத்துறை என மூன்று துறையின் முக்கிய அதிகாரிகளும் கலந்தாலோசிக்கிறார்கள். இன்னொரு பக்கம், இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதை ரா உளவாளி ஒருவன் கண்டுபிடிக்கிறான். அந்தத் தாக்குதல் நடந்தால் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படுவார்கள். அந்தத் தீவிரவாத தாக்குதலை ரா உளவாளி தடுக்க நினைக்கிறான். லண்டனில் நடக்கும் நூல் வெளியீட்டுக்கும், இந்தப் புத்தகத்திற்கும், தீவிரவாதத் தாக்குதலுக்கும் என்ன சம்மந்தம்? அந்தப் புத்தகம் வெளியானதா? ரா உளவாளி தாக்குதலைத் தடுத்து நிறுத்தினாரா? என விறுவிறுப்பாக இந்த நாவல் செல்கிறது.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463170411,"sku":"BK3109","price":88.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/or-ulavaliyin-kathai.jpg?v=1788695786"},{"product_id":"ore-nadu-ore-ilakku-ore-arasiyalamaippu-sattam","title":"ஒரே நாடு ஒரே இலக்கு ஒரே அரசியலைப்புச் சட்டம்","description":"\u003cp\u003eபெரியோர்களே, நாம் அரசியல் அதிகாரம் பெற வேண்டுவதன் அவசியம் குறித்து தேவைக்குமேல் மிகுதியாகவே வலியுறுத்தியுள்ளேன். ஆனால், ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் கேடுகளுக்கெல்லாம் அரசியல் அதிகாரம் மட்டுமே தீர்வாகிவிடாது என்பதையும் கூறியாக வேண்டும். அவர்களின் விடுதலை என்பது சமூக மேம்பாட்டில்தான் உள்ளது. கல்வி பெறுதல் கட்டாயமான தேவை. எழுதப் படிக்கப் பேசத் தெரிந்து கொள்ளல் மட்டும் போதாது. நம்மில் பலர் கல்வியின் உச்ச நிலைகளை அடைந்து, அதன் வழி தங்கள் சமூகம் முழுவதையுமே தங்களோடு உயர்த்தி பொதுமதிப்பிலும் உயர்ச்சி பெறப் பாடுபட வேண்டும். - அண்ணல் அம்பேத்கர் (நூலிலிருந்து…)\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463203179,"sku":"BK3110","price":72.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ore-nadu-ore-ilakku-ore-arasiyalamaippu-sattam.jpg?v=1788695785"},{"product_id":"paarapaas","title":"பாரபாஸ்","description":"\u003cp\u003eஇருவரில் ஒருவரை சிலுவையில் அறையலாம் என்ற நிலையில், அரசுக்கு எதிராக செயல்பட்ட இயேசு மிக ஆபத்தானவராக கருதப்படுகிறார். ஆகையால் இயேசுவின் மரணதண்டனையை உறுதி செய்து, திருட்டு குற்றத்திற்கு தண்டனைக்குள்ளான மற்றொருவனை விடுக்கிறார்கள். விடுவிக்கப்பட்ட அந்த மனிதன்தான் பாரபாஸ். சிலுவையை சுமந்து செல்லும் இயேசுவை தன்னிச்சையாக தொடர்கிறான் பாரபாஸ். சிலுவையில் அறையப்பட்ட அந்த மனிதனைப் பார்க்கிறான். அந்த மனிதனின் உயிர் உயிர் அவனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கரைந்துகொண்டிருந்தது. தன்னை விடுவித்துவிட்டு இவனை சிலுவையில் அறைகிறார்கள் என்றால் இவன் தன்னை விட பெரும் குற்றத்தை செய்தவனாக இருக்கவேண்டும். ஆனால் இந்த மனிதனை பார்த்தால் அப்படி தெரியவில்லையே. உடல் மெலிந்தவனாக பலம் அற்றவனாக இருக்கும் இவன் அப்படி என்ன குற்றம் செய்திருப்பான் . எல்லா கண்களும் தன்னையே மொய்ப்பதாக உணர்கிறான். இறந்துகொண்டிருக்கும் இந்த மனிதனின் தாயைப் பார்க்கிறான். மற்றவர்களின் துயரத்திற்கும் இந்த பெண்ணின் துயரத்திற்கும் பெரிய வேறுபாட்டை உணர்கிறான். மற்றவர்களை விட இவள் அதிகமாக அவனுக்காக துயருற்றிந்தாள். மகன் சிலுவையில் தொங்குவதற்கு மகனையே குற்றம் சாட்டிக் குறைக்கூறுவது போன்ற பாவம் அவள் முகத்தில் இருந்தது. பாரபாசுக்கு உறவு என்று யாரும் கிடையாது. ஒருவேளை தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் தனக்காக யார் அழுவார்கள் என்று எண்ணிப் பார்க்கிறான். இயேசுவின் உயிர் பிரிகிறது. மகனின் உடலை பார்த்த தாய் தன் துயரத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தமுடியாமல் திணறிக் கொண்டிருக்கையில் அங்கிருந்த ஒரு பெண் பாரபாஸை அத்தாயிடம் சுட்டிக்காட்டி ஏதோ சொல்கிறாள். அந்த பார்வையிலேதான் எவ்வளவு பரிதாபமும், குற்றம் சாட்டும் தன்மையும் நிறைந்திருந்தது. அந்த தாயின் பார்வையை தன் வாழ்நாள் முழுதும் மறக்கமுடியாது என்பதை உணர்கிறான். கல்லறையில் அந்த மனிதனை அடக்கம் செய்து ஒரு பெரிய கல்லை வைத்து மூடும்வரை அங்கு நின்றுகொண்டிருந்தவன் அந்த இடத்தை விட்டு ஜெரூசலத்தை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறான்.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463235947,"sku":"BK3111","price":115.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/paarapaas.jpg?v=1788695786"},{"product_id":"paarthipan-kanavu","title":"பார்த்திபன் கனவு","description":"\u003cp\u003eபள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சரித்திரப் பாடங்களைப் படிக்க அலுத்துக் கொள்ளும் மாணவர்கள்கூட மிகவும் ஆர்வத்தோடும், கவனத்தோடும் படித்து கடைச் சோழர்களான விஜயாலயனுடைய வம்சத்தைப் பற்றியும், காஞ்சி மாநகரைக் கட்டியாண்ட மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன், வாதாபியை ஆண்ட புலிகேசி ஆகியோரைப் பற்றியும், உறையூரையாண்ட சோழர்கள் பற்றியும் விரும்பிப் படிக்க வைத்த வரலாற்றுக் கதையாசிரியர் “கல்கி”. பெரும் வரலாறு படைத்த வரலாற்று ஆசிரியர் கல்கி அவர்களின் படைப்பை அடுத்த தலைமுறை வாசகர்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் வளரி வெளியீடு மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463268715,"sku":"BK3112","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/paarthipan-kanavu.jpg?v=1788695786"},{"product_id":"panakkutty","title":"பணக்குட்டி","description":"\u003cp\u003eகல்வி அட்டவணையில் தமிழகத்தை எடுத்துக்கொண்டால் நாம் ஜப்பானுக்கு நிகராக இருக்கிறோம். அதுவே பொருளாதாரம் குறித்தப் புரிதலில் நாம் குஜாரத்திகளில் பாதியளவு கூட இல்லை என்பதே உண்மை. இதற்குக் காரணம் 'வணிகத்தில் தமிழர்களின் பங்களிப்பு குறைவு' என்பதல்ல. பணத்தைக் குறித்தும், பணத்தைச் சரியாக சேமிப்பது குறித்தும், சேமித்த பணத்தை நமக்காக பணமாக குட்டிபோட வைப்பதற்கான வழிகள் குறித்த விழிப்புணர்வும் நமக்கு இல்லை என்பதுதான். மொத்தத்தில் Education Literarcy இருக்கும் அளவிற்கு Financial Literarcy இல்லை. அளவுக்கு மீறி பணமிருந்தால் சந்தோஷம் போய்விடும் என்ற தத்துவத்தை மறந்துவிடுங்கள். பணத்தைப் பற்றி சரியான புரிதல் இருந்தால், வாழ்க்கை குறித்த புரிதல் உங்களுக்கு வந்துவிடும். பணத்திற்கு நாம் அடிமையாகாமல், பணத்தை நமக்கு அடிமையாக்கி வேலை செய்ய வைக்க வேண்டும் என்ற உண்மை உங்களுக்குப் புலப்படும். பள்ளி, கல்லூரியில் நாம் படிக்காத பணம் குறித்த விஷயங்களை. எதை எப்படிச் செயல்படுத்திப் பணத்தைக் குட்டிபோட வைத்துப் பெருக்கலாம் என்ற வழிமுறைகளை இந்தப் புத்தகம் உங்களுக்கு கற்றுத் தரும். உங்கள் கனவை அடைவதற்கான சாவியாகப் பணத்தை மாற்ற, ஒரு ஆசானாக இந்த நூல் உங்களுக்கு உதவும்.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463301483,"sku":"BK3113","price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/panakkutty.jpg?v=1788695786"},{"product_id":"pirathaba-muthaliyar-sariththiram","title":"பிரதாப முதலியார் சரித்திரம்","description":"","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463334251,"sku":"BK3116","price":256.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/pirathaba-muthaliyar-sariththiram.jpg?v=1788695786"},{"product_id":"pirpaduthapatta-makkalukku-enathu-arivurai","title":"பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எனது அறிவுரை","description":"\u003cp\u003e“உங்கள் அடிமைத்தனத்திலிருந்து அக்குவேர், ஆணிவேருடன் முழுமையாய் விடுதலை பெற நீங்கள் உறுதிபூண்டு அதற்காக இன்னல்கள் இடர்கள் எவைவரினும் எதிர்கொள்ளத் துணிவீர்களாயின், நான் நிறைவேற்ற முயன்று கொண்டிருக்கும் இக்கடும் பணியின் பேரும் புகழும் உங்களையே சாரும்”\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463367019,"sku":"BK3117","price":64.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/pirpaduthapatta-makkalukku-enathu-arivurai.jpg?v=1788695785"},{"product_id":"pithan","title":"பித்தன்","description":"\u003cp\u003eஇலக்கிய உலகின் பெரிய சிகரத்தைத் தொட்டவர் கலீல் ஜிப்ரான். தம் ஈடு இணையற்ற சொல்லாற்றலால், காலத்தை வெல்லும் சொல்லோவியம் படைத்துள்ளார். கவிஞராய், கட்டுரையாளராய், கதாசிரியராய், நாவலாசிரியராய், ஓவியராய், சிற்பியாய், நாடக ஆசிரியராய்ப் பன்முகப் பரிமாணம் கொண்டு திகழ்ந்த ஜிப்ரானின் மனித நேய நெஞ்சம் வானைப் போல மிகப் பெரியது. அவருடைய சமுதாயப் பார்வை மிகவும் தெளிவானது; உறுதியானது. எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் அவருடைய பாதிப்பில்லாத படைப்பாளியே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். 1905-முதல் அரபி மொழியில் எழுதிவந்த கலீல் ஜிப்ரான், ஆங்கிலத்திலும் எழுதினார். 1918-இல் அவர் எழுதிய The Madman எனும் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்புதான் ‘பித்தன்’ என்ற இந்நூல்.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463399787,"sku":"BK3118","price":64.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/pithan.jpg?v=1788695786"},{"product_id":"puyalile-oru-thoni","title":"புயலிலே ஒரு தோணி.","description":"\u003cp\u003eபுலம் பெயர்ந்த மனிதர்களின் வாழ்வியல் பதிவாக ’புயலிலே ஒரு தோனி’ புதினத்தைக் கூறலாம். இதில் வரும் நாயகன் பாண்டியன் தனி மனிதன் அல்ல. புலம் பெயர்ந்த நிலத்தில் தங்களுக்கான வாழ்க்கையைத் தேடும் ஒவ்வொருவரின் மனசாட்சியாகவும் விளங்குகிறான். பிறந்த இடத்தில் தொலைத்த தங்களின் வாழ்க்கையை அந்நிய நிலத்தில் மீட்டெடுக்கப் போராடும் மனிதர்களை இதில் பார்க்க முடியும். வாழ்க்கைப் போராட்டத்தில் தங்களின் மரணம் குறித்த அக்கறையின்மையை நம்மால் உணர முடியும். அவர்களின் அன்றாட வாழ்க்கை ஒரு சாகசம் போலத் தெரியும். நிச்சயமற்ற வாழ்க்கையில் நிச்சமுள்ள ஒரு விஷயத்தைத் தேடிச் செல்லும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கையை இந்த நாவல் நம் கண்முன்னால் கொண்டு வருகிறது.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463432555,"sku":"BK3120","price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/puyalile-oru-thoni.jpg?v=1788695785"},{"product_id":"sherlock-holmes","title":"ஷெர்லாக் ஹோம்ஸின் நினைவுக் குறிப்புகள்","description":"\u003cp\u003e“The Memories of Sherlock Holmes\" ஆங்கில நூலின் தமிழாக்கம். சர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet\" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பாத்திரங்களைக் கொண்டு “The Sign of Four\" என்ற நாவலையும் எழுதினார். இதில், ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற பாத்திரம் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க, “The Adventures of Sherlock Holmes\" என்ற குறுநாவல்களை எழுதினார். இதில், வாட்சன் என்ற கதாபாத்திரம் நேரில் கதை சொல்வதுபோல் அனைத்துக் கதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இன்று வரை பல துப்பறியும் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரப்படைப்புதான் முன்னோடியாக இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதைகள் என்றாலும், இன்றும்கூட துப்பறியும் கதைகள் வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு முதன்மைப் பாத்திரமாக இருப்பது ஷெர்லாக் ஹோம்ஸ்தான்.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463465323,"sku":"BK3121","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/sherlock-holmes.jpg?v=1788695785"},{"product_id":"sherlock-holmsein-saagasa-kathaigal","title":"ஷெர்லாக் ஹோம்ஸின் சாகசக் கதைகள்","description":"\u003cp\u003eசர் ஆர்தர் கோனான் டாயில் திறமையானதொரு கதைசொல்லி. 1881ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற இவர், தனது படிப்பு முடிந்த அடுத்த ஆண்டிலேயே “A Study in Scarlet\" என்ற முதல் துப்பறியும் நாவலை எழுதினார். இதில்தான், “ஷெர்லாக் ஹோம்ஸ்” என்ற பாத்திரத்தையும், அவருடைய உதவியாராக “வாட்சன்” என்ற பாத்திரத்தையும் இவர் அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து அந்தப் பாத்திரங்களைக் கொண்டு “The Sign of Four\" என்ற நாவலையும் எழுதினார். இதில், ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற பாத்திரம் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க, “The Adventures of Sherlock Holmes\" என்ற குறுநாவல்களை எழுதினார். இதில், வாட்சன் என்ற கதாபாத்திரம் நேரில் கதை சொல்வதுபோல் அனைத்துக் கதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இன்று வரை பல துப்பறியும் கதைகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் பாத்திரப்படைப்புதான் முன்னோடியாக இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கதைகள் என்றாலும், இன்றும்கூட துப்பறியும் கதைகள் வாசிக்க விரும்பும் வாசகர்களுக்கு முதன்மைப் பாத்திரமாக இருப்பது ஷெர்லாக் ஹோம்ஸ்தான். 'RAW : இந்திய உளவுத்துறை எவ்வாறு இயங்குகிறது?', 'C.B.I : ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு', 'உளவு ராணிகள்', 'இனப்படுகொலைகள்' போன்ற நூல்கள் எழுதிய எழுத்தாளர் குகன், “The Adventures of Sherlock Holmes\" நூலை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463498091,"sku":"BK3122","price":312.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/sherlock-holmsein-saagasa-kathaigal.jpg?v=1788695785"},{"product_id":"siddharthan","title":"சித்தார்த்தன்","description":"\u003cp\u003eகவுதம புத்தர் வாழ்ந்த காலக்கட்டத்தின் பின்னணியில் இந்த நாவலை எழுதியிருக்கிறார் ஹெர்மன் ஹெஸ்ஸே. பவுத்தம், தாவோயிஸம், கிறித்தவம், இந்து போன்ற சமயக் கருத்தாக்கங்களின் தாக்கமாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும், இறுதியில் பொதுவான சமயக் கருத்துகளை நிராகரிக்கிறது. வாழ்க்கையின் உண்மை, அடையாளத்தைத் தேடும் அகப்பயணமாக இந்த நாவல் இருக்கிறது. தனது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களின் எதிரொலியாக முதன்மைக் கதாபாத்திரமான சித்தார்த்தனின் வாழ்க்கைக் கதையின் மூலம் விடுதலையின் பாதையை ஹெர்மன் ஹெஸ்ஸே விளக்கியிருக்கிறார். ஜெர்மானிய மொழியில் 1922-ம் ஆண்டு வெளியான இந்த நாவல், 1951-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகுதான், உலகம் முழுவதும் பிரபலமானது. 1972ல் கான்ராட் ரூக்ஸ் ஆங்கிலத்தில் Siddhartha என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியுள்ளார்.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463530859,"sku":"BK3123","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/siddharthan.jpg?v=1788695786"},{"product_id":"sindha-nadhi","title":"சிந்தா நதி","description":"","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463563627,"sku":"BK3124","price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/sindha-nadhi.jpg?v=1788695785"},{"product_id":"sir-issac-newton","title":"சர் ஐஸக் நியூட்டன்","description":"\u003cp\u003eசர் ஐஸக் நியூட்டன் தான் படிக்கும் காலத்திலேயே ஒளியின் இயல்பு பற்றிய ஆய்வுகளை செய்தார். எப்படி வானவில் தோன்றுகிறது என்பதை முதன் முறையாகக் கண்டுபிடித்து உலகிற்குத் தெரிவித்தார். அதற்கு VIBGYOR என்றும் பெயரிட்டார். தொலைநோக்கியைக் கண்டுபிடித்துப் பல விஞ்ஞான ஆராய்ச்சிக்கு உதவியாகப் பயன்படுத்தினார். புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இயற்கை தத்துவத்தின் கணித விதிகள், வானவியல்துறை, பொருளியல் துறை, ஒளியியல் ஆகியவைகளைக் குறித்து ஆய்வுகள் எழுதி வெளியிட்டார். இவர் எழுதிய புத்தகங்கள் இன்றைக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்குப் பயன்படக் கூடியதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் பல சிக்கல்களைத் தீர்த்து வைக்கவும் உதவுகிறது. இப்படி அறிவியல் கலைக் களஞ்சியத்தில் மற்ற விஞ்ஞானிகளைவிட சர் ஐசக் நியூட்டனின் கண்டுபிடிப்புகளுக்கு அதிகமான பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட பெரும் விஞ்ஞானி நியூட்டனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் சிறு நூல் இது.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463629163,"sku":"BK3125","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/sir-issac-newton.jpg?v=1788695786"},{"product_id":"solaimalai-ilavarasi","title":"சோலைமலை இளவரசி","description":"","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463661931,"sku":"BK3126","price":128.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/solaimalai-ilavarasi.jpg?v=1788695785"},{"product_id":"soothadi","title":"சூதாடி","description":"\u003cp\u003eஇந்த நாவல் சூதாட்டம் தவறு என்ற ஒழுக்க போதனையோ அளிக்கும் நாவல் அல்ல.முக்கியமாக ஒரு சூதாடியின் மனம் எப்படி தர்க்கம் புரியும் என்பதே நாவலின் மையம்.அது அடுத்த முறை வெற்றி பெற்றுவிடுவேன் என்று தர்க்கம் புரியும். அந்த தர்க்கமே அவனை தொடர்ந்து சூதாட வைத்து சூதாடியாகவே இருக்க வைக்கும்.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463694699,"sku":"BK3127","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/soothadi.jpg?v=1788695786"},{"product_id":"stephen-hawking","title":"ஸ்டீஃபன் ஹாக்கிங் : சக்கர நாற்காலியில் பிரபஞ்சத்தைச் சுற்றிய மனிதர்","description":"\u003cp\u003eஇந்த உலகைச் சுற்றிய மனிதர்கள் இரண்டே வகையானவர்கள் என்று சொல்லலாம். ஒன்று முருகன் வகையைச் சேர்ந்தவர்கள். மயிலில் உலகைச் சுற்றுவதுபோல் விமானத்திலும், கப்பலிலும் உலகத்தைப் பார்த்தவர்களை முருகன் வகையினர் என்று சொல்லலாம். இன்னொரு வகையினர் பிள்ளையாரைப் போன்றவர்கள். இருந்த இடத்தில் இருந்துகொண்டே உலகத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறுபவர்கள். இந்த இரண்டு வகையினரில்லாமல் மூன்றாவதாக ஒரு வகை இருக்கிறது என்று எனக்கு உணர்த்தியவர் ஸ்டீஃபன் ஹாக்கிங். உலகம் சுற்றம் மனிதர்களுக்கு மத்தியில் சக்கர நாற்காலியில் இந்த பிரபஞ்சத்தையே சுற்றியவர். சுற்றியதோடு அல்லாமல் எளிமையாக மக்களுக்கு விளக்கியவர். அறிவியலுக்கும், ஆன்மீகத்திற்கும் சம்மந்தம் இருக்கிறதா என்று விவாதம் நடத்து கொண்டிருந்த வேளையில் அறிவியலுக்கு புது சிலபஸ் ஏற்படுத்தி தந்திருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாற்று மற்றும் பணிகளைக் குறித்து மிக எளிமையான தமிழில் உங்களிடம் பகிர்கிறோம்\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463727467,"sku":"BK3128","price":56.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/stephen-hawking.jpg?v=1788695786"},{"product_id":"thaai-the-mother","title":"தாய்","description":"\u003cp\u003e1907இல் முதன்முதலாக வெளியான இந்த நாவல் உலகின் மிகச் சிறந்த செவ்விலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ரஷ்யாவின் கம்யூனிசப் புரட்சிக்கு நெருங்கிய காலகட்டத்தை காலமாகவும், புரட்சியில் பங்கேற்கும் இளைஞர்களை கொண்ட தொழிற்சாலையைக் கதைக் களமாகவும் கொண்ட நாவல். இந்த நாவல் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கபட்டுள்ளது\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463760235,"sku":"BK3129","price":360.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thaai-the-mother.jpg?v=1788695786"},{"product_id":"ulavu-ranigal","title":"உளவு ராணிகள்","description":"","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463793003,"sku":"BK3130","price":104.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ulavu-ranigal.jpg?v=1788695786"},{"product_id":"veril-pazhutha-pala","title":"வேரில் பழுத்த பலா","description":"","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463825771,"sku":"BK3133","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/veril-pazhutha-pala.jpg?v=1788695786"},{"product_id":"verukku-neer","title":"வேருக்கு நீர்","description":"\u003cp\u003e1973-ல் சாகித்ய அகாடமியின் பரிசு பெற்ற நாவல். -- பீகார் மாநிலத்தில் அன்று நான் கண்ட அரசியல் கோளாறுகளும், மக்களின் பிரச்னைகளும், முறுக்கேறி நாட்டின் ஆட்சியை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கின்றன. கங்கை தன் வண்மைக்கரம் கொண்டு தழுவும் இந்த மண்ணில், இந்நாவலில் குறிப்பிட்ட, பிரச்னைகளும், நெருக்கடிகளும் புதிய வலிமைகள் பெற்றிருக்கின்றன. \"நீங்கள் காந்தீயக் கொள்கைகளை ஆதரிக்கவில்லையா அம்மா?\" என்று என்னைப் பலர் இந்த நூலைப் படித்துக் கேட்டிருக்கின்றனர். பலதரப்பட்ட மக்கள் கொண்ட மிகப் பெரிய பாரத சமுதாயம் இது. இலக்கிய ஆசிரியர்கள், சிந்தனையாளர், ஒதுங்கியிராமல், தத்தம் வழியிலே நாம் கொண்டிருக்கும் நடைமுறையில், கொள்கைகளில் வெற்றி பெற்ற அம்சம் எது, மறுபரிசோதனைக்குரிய அம்சம் எது என்று சிந்தனை செய்வது அவசியமாகிறது; அதை மக்களிடம் கொண்டு செல்வதும் கடமையாகும் என்று கருதுகிறேன்.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463858539,"sku":"BK3134","price":240.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/verukku-neer.jpg?v=1788695786"},{"product_id":"washington-thirumanam","title":"வாஷிங்டனில் திருமணம்","description":"\u003cp\u003eபத்திரிகையுலகப் பிதாமகர் என்று அழைக்கப்படும் சா. விஸ்வநாதன் (சாவி) என்பவரால் வாஷிங்டனில் திருமணம் என்ற நகைச்சுவைக் கதை எழுதப்பட்டது. இந்தக் கதை ஆனந்த விகடனில் பதினோரு அத்தியாயங்களாக வெளியானது. 1995ல் சென்னை தொலைக்காட்சியில் தொடராகவும் ஒளிப்பரப்பானது.\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463891307,"sku":"BK3135","price":112.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/washington-thirumanam.jpg?v=1788695786"},{"product_id":"wright-sagotharargal","title":"ரைட் சகோதரர்கள்","description":"\u003cp\u003eபறவைகளைப் போல மனிதனும் வானத்தில் பறக்கவேண்டும் என்பதுதான் ஆதிகால மனிதனில் தொடங்கி அத்தனை பேர் ஆசையும்! காலம் காலமாக அதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்தன. வாயு பலூன் முதல் கிளைடர் வரை பலர் முயற்சித்துத் தோற்ற விஷயம் அது! கடைசியில் அதைச் சாதித்தவர்கள் வில்பர் ரைட் (Wilbur Wright), ஆர்வில் ரைட் (Orville Wright) சகோதரர்கள். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பை உலகுக்கு அளித்த சாதனையாளர்கள். கல்லூரிப் படிப்போ, காசு பண வசதியோ எதுவும் இல்லாமல், சாதாரண சைக்கிள் மெக்கானிக்குகளாகப் பணியாற்றியவர்கள் உலகத்தையே அண்ணாந்து பார்க்க வைத்து எப்படி!\u003c\/p\u003e","brand":"வளரி வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53807463924075,"sku":"BK3136","price":56.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/wright-sagotharargal.jpg?v=1788695786"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/collections\/No-image.jpg?v=1788697834","url":"https:\/\/anytamilbooks.com\/collections\/valari-veliyeedu.oembed","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}