{"title":"தடாகம் வெளியீடு","description":null,"products":[{"product_id":"1000-kadal-mile","title":"1000 கடல்மைல் (கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்)","description":"\u003cp\u003eஎண்ணைத் துரப்பண,எரிவாய்வுத் திட்டங்கள்,அனல்,அணுமின் நிலையங்கள்,பெருந்துறைமுகங்கள்,எட்டுவழிச்சாலைகள் – இவற்றில் எதுவும் தனித்த திட்டமல்ல,பல்திணைக் குடிகளின் இயல்பு வாழ்வின் மீதாக உருக்கொள்ளும் கூட்டு வன்முறை.இந்த வலி மிகுந்த எதார்த்தம் எதிர்காலத்தின் மீது சூன்யமாய் நின்று நம்மை அச்சுறுத்துகிறது.\u003cbr\u003e\nமீன்பிடி தொழிலின் எதிர்காலம்,கடல் அபலைகளின் மறுவாழ்வு குறித்த தேடலுடன் ஒக்கிப் பேரிடரின் பின்னணியில் இத்தொகுப்பு உள்ளது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558371179,"sku":"BK1756","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/1000-kadal-mile.jpg?v=1788081575"},{"product_id":"anton-chekhov-aaka-sirandha-kathaigal","title":"ஆன்டன் செக்காவ் அகச் சிறந்த  கதைகள்","description":"\u003cp\u003eதன் மகிழ்ச்சியின் வெளிப்பாடுகளை எல்லாம் கொட்டித் தீர்த்த பின், கதவின் பக்கம் பதட்டத்துடன் நோட்டமிட்டபடியே,\u003cbr\u003e\n\"நல்ல பிள்ளையாக இதனை நீயே திரும்ப எடுத்துச்சென்று விடு. இதனை நான் வைத்துக் கொள்ளமுடியாது\" என வழக்கறிஞர் கூறினார்.\u003cbr\u003e\n\"ஏன் ? என்ன காரணம் ?\" எனப் பதறினார் மருத்துவர்.\u003cbr\u003e\n\"எல்லோருக்கும் தெரிந்த காரணம்தான். என் அம்மாவோ வாடிக்கையாளரோ உள்ளே வர நேர்ந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப்பார். என்னிடம் வேலை செய்பவர்களை எப்படி நான் ஏறிட்டுப் பார்க்க முடியும்?\" என்று கேட்டார்.\u003cbr\u003e\n\"இல்லை. இல்லை தை நீ மறுக்க முடியாது! நீ சரியான பட்டிக்காட்டானாக இருக்கிறாய். இது ஒரு உத்வேகமான படைப்பு. அந்த அசை வைப் பார். அந்த முக பாவத்தைப் பார். இதற்கு மேல் ஏதாவது பிடிவாதம் பிடித்தால், நான் மிகவும் வருத்தமடைவேன்.\" என்று வேக வேகமாக மறுத்தார் மருத்துவர்.\u003cbr\u003e\n\"மேலே ஏதாவது வண்ணம் பூசி இருக்கலாம். இடையினை மறைக்க ஆடை இருந்தாலாவது பரவாயில்லை..\" என வழக்கறிஞர் பொருமினார். ஆனால், இன்னும் வேகமாக அவரைப் பார்த்துக் கையசைத்துவிட்டு, மருத்துவர் சாமார்த்தியமாக அந்த வீட்டை விட்டு வெளியேறி தன் வீடு வந்து சேர்ந்தார். ஒரு வழியாக அந்த அன்பளிப்பினைக் கை கழுவியதில் அவருக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது.\u003cbr\u003e\nநண்பர் போனதும், அவர் விட்டுச்சென்ற கொத்து விளக்கை ஹர்கீன் உற்று நோக்கினார். அதன் எல்லா பாகத்தையும் தொட்டுப் பார்த்த வழக்கறிஞர். மருத்துவரைப் போலவே இதனை என்ன செய்வது என்று மண்டையை உடைத்துக்கொண்டார்.\u003cbr\u003e\n\"இது ஒரு அற்புதமான படைப்புதான். இதனை எடுத்துச் செல்ல விட்டிருந்தால்அவமானம்தான் ஆனால் இதை இங்கேவைத்துக்கொள்வது என்பது முறையாகாது. யாரிடமாவது இதைக் கொடுத்து விடுவது நான் உத்தமம். ஆமாம். இன்று இரவு, நகைச்சுவை நடிகர் ஷாஷ்கின்னுக்கு நிதி அளிக்க சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் காத்து விளக்குத் தண்டை அவனுக்கு அன்பளிப்பாக அளித்துவிடலாம் எப்படிப் பார்த்தாலும் அந்த ராஸ்கலுக்கு இது போன்ற பொருட்கள் பிடிக்கும்..\" எனமுடிவு செய்தார் வழக்கறிஞர்.\u003cbr\u003e\nஉடனடியாக அங்குப் புறப்பட்டு சென்றார். மிகுந்த கவனத்துடன் சுற்றப்பட்ட அந்த சொத்துவிக்குத் தண்டு, நகைச்சுவை நடிகர் ஷாஷ்கின்னுக்கு அன்பளிப்பாக அன்று மாலை அளிக்கப்பட்டது.\u003cbr\u003e\n \u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558403947,"sku":"BK1757","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/anton-chekhov-aaka-sirandha-kathaigal.jpg?v=1788081577"},{"product_id":"appavin-mothiram","title":"அப்பாவின் மோதிரம்","description":"\u003cp\u003eகவிதாயினி நித்யா அவர்களின் அப்பாவின் மோதிரம் எனும் இக்கவிதைத் தொகுப்பு அவருடைய வாழ்க்கையை நகலிட்டுப் பிரதிபலிக்கின்றது.அவர்தம் குரலில் அவரின் கவிதைகள் ஒலிக்கின்றன.\u003cbr\u003e\nஅதிலும் குறிப்பாகத் தன்னுடைய தந்தை மீது அவர் கொண்ட அளப்பரிய அன்பின் வெளிப்பாட்டைக் கவி கொண்டு நிரப்பியிருக்கிறார்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558436715,"sku":"BK1758","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/appavin-mothiram.jpg?v=1788081580"},{"product_id":"ariviyal-kalaignar-raseswari-1906","title":"அறிவியல் கலைஞர் ராசேசுவரி 1906","description":"\u003cp\u003eஈ.த. இராசேசுவரியம்மையார் விஞ்ஞானத்தில் 1928ஆம் ஆண்டு பி.ஏ. தேர்விலும் 1931ஆம் ஆண்டு எம்.ஏ. தேர்விலும் சென்னை மாகாணத்தில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். 1932ஆம் ஆண்டு போதனா முறையில் புலமைப் பட்டம் பெற்றார். இவர் பள்ளி, கல்லூரி கல்வியைக் கற்ற நிலையங்களை அறிய இயலவில்லை. இவருடைய தந்தை தணிகாசல முதலியார் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருந்ததால் சென்னை அல்லது அருகாமைப் பகுதியில் அவர்கள் வசித்திருக்கலாம்; இராசேசு வரியும் சென்னையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்திருக்கலாம் எனக் கருதலாம். இராசேசுவரியம்மை மகளிர் ஆசிரியர் தொழிற் பயிற்சிக்கான சென்னை வெலிங்கடன் சீமாட்டி கல்லூரிப் பெளதிக கலைப் பேராசிரியையாகப் பணியாற்றினார். இவர் பணியில் சேர்ந்த வருடம், குடும்ப வாழ்வு உட்பட பிற தகவல்களைத் திரட்ட இயலவில்லை. இவர் எழுதிய அறிவியல் கட்டுரைகளே இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558469483,"sku":"BK1759","price":280.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ariviyal-kalaignar-raseswari-1906.jpg?v=1788081582"},{"product_id":"ariyappadaatha-thamizhmozhi","title":"அறியப்படாத தமிழ்மொழி","description":"\u003cp\u003eஅறியப்படாத தமிழ்மொழி\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅறியப்படாத தமிழ்\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமறுக்கப்பட்ட தமிழ்\u003c\/p\u003e\n\n\u003cp\u003eமறைக்கப்பட்ட தமிழ்\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇன்றும் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்\u003c\/p\u003e\n\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅதென்ன, ‘மறைக்கப்பட்ட’ தமிழ்? யார் மறைத்தார்கள் நம் மொழியை? நம் மரபில்\/பண்பாட்டில், பலப்பல நூற்றாண்டுகளாக, நம்மை அறியாமல், பொய்யென்றே தெரியாமல் பழகிவிட்ட பொய்கள். அவற்றை விலக்கி ‘பண்பாட்டு நீதி’யை வென்றெடுக்க, ஒரு கருவியே இந்நூல்!\u003c\/p\u003e\n\n\u003cp\u003e***************\u003c\/p\u003e\n\n\n\u003cp\u003eதொல்காப்பியர் முதல் தொ.பரமசிவன் வரை...ஐயன் வள்ளுவன் முதல் மொழிஞாயிறு பாவாணர் வரை...\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஅறிஞர்கள் அளவிலேயே தங்கிவிட்ட தமிழ் உண்மைகளை, உங்கள் வீடுகளுக்கு எடுத்து வருவதே, இந் நூலின் ‘நோக்கம்’\u003c\/p\u003e\n\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\n\u003cp\u003eகால வெள்ளத்தில் ஊறி ஊறித் தூர் வாராமலேயே மண் அண்டிப் போய், குளம்  குட்டை ஆகிவிடும் அல்லவா? தமிழ்க் குளத்தை, உங்களோடு சேர்ந்து, தூர் வாரும் புத்தகமே இது!\u003c\/p\u003e\n\n\u003cp\u003e*****************\u003c\/p\u003e\n\n\n\u003cp\u003eநூல் உள்ளடக்கம்\u003c\/p\u003e\n\n\u003cp\u003eகல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யா?\u003cbr\u003e\nதிருக்குறளில் முரண்பாடுகள் ஏன்?\u003cbr\u003e\nஅணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா?\u003cbr\u003e\nமுருகன் = தமிழ்க் கடவுளா? சம்ஸ்கிருதக் கடவுளா?\u003cbr\u003e\nஆறுபடை வீடுகளில் எத்தனை வீடுகள்?\u003cbr\u003e\nஎது முதல் திணை? - குறிஞ்சியா? முல்லையா?\u003cbr\u003e\nதமிழ் மறைப்பு அதிகாரம்\u003cbr\u003e\nதுக்கடாக்கள்: \u003cbr\u003e\nசொல் = Sol-ஆ? Chol-ஆ?\u003cbr\u003e\nசித்திரையா? தையா?\u003cbr\u003e\nதிராவிடமா? தமிழா?\u003cbr\u003e\nதொல்காப்பியத்திலேயே சாதி உண்டா?\u003cbr\u003e\nசிலப்பதிகார - கம்ப ராமாயணச் சண்டை!\u003cbr\u003e\nஇலக்கண அரசியல்\u003cbr\u003e\nநாட்டுப்புறத் தமிழ்\u003cbr\u003e\nசொல், செப்பு, பறை! பூ, அலர், மலர்!\u003cbr\u003e\nதமிழகத்தின் ஊர் பேர் விகுதிகள்\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபின்னுரை\u003c\/p\u003e\n\n\u003cp\u003eபின்னுரை: அறிவியல் தமிழ், Meme தமிழ், வளர் தமிழ்!\u003cbr\u003e\nபின் இணைப்பு: வடமொழி விலக்கு அகராதி!\u003c\/p\u003e\n\n\n\u003cp\u003eதொழில்நுட்பம் பயின்ற இளைஞர்கள் மொழிநுட்பத்தோடு இயங்குகிறபோது அவர்களும் பெருமை பெறுகிறார்கள்; மொழியும் பெருமை பெறுகிறது.\u003cbr\u003e\n– கவிப்பேரரசு வைரமுத்து\u003c\/p\u003e\n\n\u003cp\u003eஇந்நூல் தெளிவும், செறிவும், திட்பமும், நலனும் நிறைந்து விளங்கும் ஓர் அரிய நூல். தமிழிலக்கியப் பகுதிகளில் அறியப்படாத இருண்ட பகுதிகளுக்கு ஒளியூட்டும் ஒப்பற்ற பனுவல் இது எனலாம். \u003cbr\u003e\n- அ. கலியமூர்த்தி, IPS (Former Superintendent of Police, Tiruchirapalli)\u003cbr\u003e\n \u003cbr\u003e\nபல தமிழறிஞர்களின் நூல்களைத் தேடித் தேடி படித்தா\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558567787,"sku":"BK1760","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ariyappadaatha-thamizhmozhi.jpg?v=1788081585"},{"product_id":"arumarundhu-veetil-irukka-vendiya-siddha-marundukkal","title":"அருமருந்து வீட்டில் இருக்க வேண்டிய சித்த மருந்துகள்","description":"\u003cp\u003eவீட்டில் இருக்க வேண்டிய சித்த மருந்துகள் குறித்து விவரிக்கும் சிறந்த நூல்.\u003cbr\u003e\nமருந்து என்பது உடல்நோயை குணமாக்குவதோடு மட்டுமல்லாது உளநோயையும் தீர்ப்பதாகவும்,வரக்கூடிய நோயைத் தடுக்கவல்லதாகவும்,சாவை மறுக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.\u003cbr\u003e\nஇயற்கையின் பிற உயிரினங்களைப்போல் இயற்கைப் பொருட்களை இரையாகக் கொண்டு பசியாறிய மனிதர்கள் தங்கள் உடலை இயற்கைப் பொருட்களோடு ஒப்பிட்டு இயற்கையில் வினையாற்றினர்.இயற்கையில் உடலும்,உடலில் இயற்கையும் வினையாற்றிய போக்கில் எதிர்வினையையும் விளைவையும் உணர்ந்தறிந்ததன் விளைவுகளில் ஒன்றுதான் மருத்துவம்.இயற்கையில் வினையாற்றிய பட்டறிவின் வழி நோய்களைத் தீர்த்த அதேசமயம் மருத்துவம் மாயவித்தையோடு பிணைந்திருந்தது.இதன் தொடர்ச்சி “நோய்க்கும் பேய்க்கும் பார்” என்ற சொல் வழக்கு\u003cbr\u003e\n \u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558600555,"sku":"BK1761","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/arumarundhu-veetil-irukka-vendiya-siddha-marundukkal.jpg?v=1788081587"},{"product_id":"ayan-imayam-thotta-thirai-iyakkunarkal","title":"அயன்(இமையம் தொட்ட  திரை இயக்குநர்கள்)","description":"\u003cp\u003eசினிமாக்களையும் அவர்களின் வாழ்க்கை வரலாற் றையும் மட்டுமில்லாமல் அவர்களின் சினிமா உருவாக்கத் தின் முக்கியத்துவமும் அவர்களின் படைப்பாக்கத்தின் முக்கியத்துவமும் கவனமாக ஆராய்ந்து எழுதப்பட்டதால் உலக சினிமா பார்வையாளர்கள், சினிமா ரசிகர்கள், சினிமாத் துறையில் சாதிக்கத் துடிப்பவர்கள் ஆகிய அனை வரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.'\u003cbr\u003e\n- P. பாரதிராஜா\u003cbr\u003e\nஅயன் என்றால் படைப்பவன், திறமையானவன், மேன்மை மிக்கவன், நான்முகன், நிதானமாக வெற்றி அடைபவன் போன்ற அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அந்த மகுடங்கள்யாவும் இந்தப் புத்தகத்தில் உள்ள இயக்குநர்களுக்கும் அவர்களின் அகநிலையினை வெளி கொணர்ந்த இந்த பத்தொன்பது வயது சிறுவன் மிதுன் பிரகாஷுக்கும் பொருந்தும்.\u003cbr\u003e\n- K.பாக்யராஜ்\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558633323,"sku":"BK1762","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ayan-imayam-thotta-thirai-iyakkunarkal.jpg?v=1788081589"},{"product_id":"ayargal","title":"ஆயர்கள்","description":"\u003cp\u003eமனிதர்கள் வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையிலிருந்து, கால்நடைகளைப் பழக்கப்படுத்திப் பயன்பெறும் நிலைக்கு உயர்ந்தனர். கால்நடைகளுக்காக மேய்ச்சல் வெளிகளைத் தேடி இடம் பெயர்ந்த நிலையில், கால்நடைகளைக் கொண்டு, வேளாண்மை ஒருபுறம் வளர்ந்தது. தொடர்ந்து கால்நடைகளை மையமிட்டே தம்முடைய வாழ்வியலை அமைத்துக்கொண்ட மேய்ச்சல் நில மக்கள் குழுக்கள், ஆயர் என்று அழைக்கப்பெற்றனர். ஆயர்கள் என்பது மேய்ச்சல் நில மக்களின் பொதுப்பெயராகும். இவர்கள் வாழ்ந்த மேய்ச்சல் வெளி, காடு முதலானவை முல்லை நிலம் எனப்பட்டது. மனித நாகரிகம் முல்லை நிலத்தில்தான் பல்கிப்பெருகியது என்று அறிஞர்கள் இயம்புவர்.இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு பிரிவினராகக் கிளைத்து நிற்கும் மக்கள் குழுக்களுள், கால்நடைகளை மட்டுமே நம்பியுள்ள மேய்ச்சல் நில மக்களின் வாழ்வியல், தனித்துவமானதாகும். ஒரு நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சியையும், அறுபடாத மரபையும் கொண்டுள்ள மக்கள் குழுக்களுள், ஆயர் குழுக்கள் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.ஆயர்கள் குறித்த ஆய்வு, மாந்த இனத்தின் தோற்றுவாயோடு தொடர்புடையதாகத் திகழ்கிறது. இந்திய நிலப்பரப்பில் வரலாற்றுக் காலத்திலிருந்து ஆயர்கள் குறித்த பதிவுகள் சேகரிக்கப்பெற்று, வரலாற்றாய்வாளர்களின் மேற்கோள்களோடு அவர்தம் வரலாற்றை இந்நூல் சுருக்கமாக உரைக்கின்றது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558666091,"sku":"BK1763","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ayargal.jpg?v=1788081592"},{"product_id":"balammal-muthal-pen-ithazhasiriyar","title":"பாலம்மாள் முதல் பெண் இதழாசிரியர்","description":"\u003cp\u003eபெண் சிந்தனையைத் தமிழ்ப் பதிப்புலகம் பதிப்பிக்கவில்லை என்ற குறையை ‘மாற்றத்துக்கான மகளிர் நூல் வரிசை’ நீக்கும். இதன் தொடக்கப் புள்ளி சிந்தாமணி இதழ் அதிபர் வி. பாலம்மாள். தன்னந்தனிப் பெண்ணாக நின்று இதழாசிரியராக, இதழ் அதிபராக நிர்வாகப் பொறுப்பை முழுவதும் அவர் ஏற்று பெண்களுக்கென வெளியிட்ட முதல் இதழ் சிந்தாமணி. அக்கால இதழ்களான தாய்நாடு’, ‘குடியரசு’, ‘ஜஸ்டிஸ்’, ‘இந்து சாதனம்’, ‘பொதுஜன மித்திரன்’, ‘தாரூல் இஸ்லாம்’, ‘தேசோபகாரி’ போன்றவை ‘சிந்தாமணி’யை வரவேற்றன. புராதனத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் பெற்றிருந்த உன்னத நிலையை மீட்டெடுக்கப் பாலம்மாள் ‘சிந்தாமணி’ வழியாகப் போராடினார். தொழிலாளிகளின் உழைப்பின் விளைவுதான் முதலாளிகளின் வளர்ச்சி எனக் கூறிய பாலம்மாள் பெண், தேசம், தாழ்த்தப்பட்டோர் விடுதலையை நேசித்தார்; சாதி, வர்க்கம் கடந்த மணவுறவை ஆதரித்தார். அவருடைய நூல்களுக்கு டாக்டர் எஸ். கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார், ஹிந்து இதழாசிரியர் எஸ். கஸ்தூரிரங்க அய்யங்கார் போன்ற ஆளுமைகள் முன்னுரை எழுதினர். பெண் முன்னேற்றத்திற்காகப் பாலம்மாள் எழுதிய தலையங்கம், கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558698859,"sku":"BK1764","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/balammal-muthal-pen-ithazhasiriyar.jpg?v=1788081594"},{"product_id":"chittu-kuruvigalin-vazhvum-veelchium","title":"சிட்டுக் குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்","description":"\u003cp\u003eசெல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணாமல் போனது என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் .அது உண்மையா? இல்லை என்று சொல்லும் இந்த புத்தகம் . அதற்கான உண்மையான காரணத்தைப் பட்டியல் போடுகிறது.சிட்டுக் குருவிகளைப் பற்றிய நுணுக்கமான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் அழகிய படங்களுடன் இருக்கின்றன.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558731627,"sku":"BK1765","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/chittu-kuruvigalin-vazhvum-veelchium.jpg?v=1788081597"},{"product_id":"dravida-pathirikaikalil-aathidravidar-aavnangal","title":"திராவிடப்  பத்திரிகைகளில் ஆதிதிராவிடர் ஆவணங்கள்","description":"\u003cp\u003eசுயமரியாதைக் கோட்பாட்டைப் பின்னாளில் பெரியார் பின்பற்றியதால், \"நியாயப்படி அயோத்திதாசப் பண்டிதர்தான் சுயமரியாதைத் தலைவர்\" எனத் \"தாழ்த்தப்பட்டோர் தொண்டர் படைத் தலைவரான பாலகுரு சிவத்தின் பேச்சு திராவிடன் பத்திரிகையிலேயே வெளியானதால் திராவிட இயக்கம் அந்த நியாயத்தை ஒப்புக்கொண்டது தெளிவு. ஆதிதிராவிடத்திலிருந்து திராவிடம் பரிணமித்ததால் முன்னதும் பின்னதும் ஒன்று மற்றொன்றுக்குப் பக்கப் பலமாய் இயல்பாய் இணங்கி இயங்கின. மதவாதத்தைச் சுட்டுவதற்கு சமகாலத்தில் பயன்படுத்தும் \"தீவிரவாதம், தீவிரவாதி\" என்ற சொற்களுக்கான “Terrorizing, terrorists\" என்ற ஆங்கிலச் சொற்களால் ஜாதிவெறியர்களை இரட்டைமலை சீனிவாசனும் ஆர். வீரையனும் குறிப்பிட்டனர். கே.எம். தானியேல் மேஸ்திரி, ராமசொக்கலிங்கம் பிள்ளை, ஜி.எம்.ராஜூ, பள்ளப்பட்டி அ. ராமசாமி, வி.பி.எஸ்.மணி, மு. பெரியசாமி மூப்பன், சின்னபையன் மூப்பன், வீ. மருதைமுத்து மூப்பன், பி. மரியண்ணன், வி.அண்ணாமலை, இளந்திருமாறன், ஏ.எஸ். ஜான், பி.எம்.தாஸ், எம்.தேவதாசன் எம்.எல்.ஸி., ஜி. ஆர். பிரேமையா எம்.எல்.ஸி., அ. பாலகிருஷ்ணன், ஆர்.பி. தங்கவேலன், திருச்சி அந்தோணி, பெ.தா.அலெக்சாந்தர், எம்.சி.ராஜா, சிந்தாதிரிப்பேட்டை மு.கோவிந்தராமன், டி.ஏ.சுந்தரம், பி.பாலசுந்தரம்பிள்ளை, எம்.சி.ராஜா, மீனாம்பாள் சிவராஜ், ப. அழகானந்தம், இரட்டைமலை சீனிவாசன், ஆர். வீரையன், பி.ராஜகோபாலன், பாலகுருசிவன் என அறியப்பட்ட, அறியப்படாத ஆதிதிராவிட ஆளுமைகளின் பேச்சும் எழுத்தும், அம்பேத்கர் - சீனிவாசன் கூட்டறிக்கை, தூத்துக்குடி ஆதிதிராவிடர்கள் நேருவுக்கு வாசித்தளித்த வரவேற்புப் பத்திரம், திருச்சி ஆதிதிராவிட வாலிபர்கள் காந்தியுடன் நிகழ்த்திய உரையாடல், மேல அரசூர் ஆதிதிராவிடர்கள், ஊத்தங்கரை வட்டாட்சி ஆதிதிராவிடக் குடிகளின் கோரிக்கைகள், ஈரோடு ஆலயப் பிரவேச வழக்கு, சீலையம்பட்டி \"குடும்பர்” மத மாற்றமும் இதற்கு ஆதரவாய் திருவண்ணாமலை ஆதிதிராவிடரின் அறிவிப்பும் போன்ற ஆவணங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558764395,"sku":"BK1766","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/dravida-pathirikaikalil-aathidravidar-aavnangal.jpg?v=1788081599"},{"product_id":"etta-iyalum-ilakkugal","title":"எட்ட இயலும் இலக்குகள்","description":"IRS என்ற இந்திய வருமானப் பணியில் இரண்டு பிரிவு உள்ளது. ஒன்று Income Tax என்ற வருமான வரி, மற்றொன்று Customs and Indirect Taxes என்ற சுங்க மற்றும் கலால் பணிகள் ஆகும். இப்பணியில் சேர்பவர்களுக்கு National Academy of Direct Taxes, Nagpur-யிலும், National Academy of Customs \u0026amp; Indirect Taxes and Narcotics, Faridabad-லும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் Assistant Commissioner ஆக பணியில் அமர்ந்து Deputy Commissioners, Joint Commissioners, Additional Commissioners மற்றும் Commissioners ஆக பதவி உயர்வு பெறுகின்றனர். மேலும் இப்பணியில் உள்ளவர்களே Principal Commissioners, Chief Commissioners மற்றும் Director General ஆகவும் உயர்ந்த பதவியை அடைகிறார்கள்.\nதேர்வு என்றாலே முதலில் நமக்கு தமிழ் நாட்டில் நடைபெறும் தேர்வை மட்டுமே தேர்ந்தெடுத்து எழுதி, பலமான போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்று இங்கேயே பணி புரிய வேண்டும் என்ற மன நிலை உள்ளது. அதிலும் தமிழக அரசின் தேர்வை மட்டுமே எழுதும் எண்ணமும் நம்மிடம் உள்ளது. இந்த நிலையிலிருந்து மாறி, மத்திய அரசால் நடத்தப்படும் குடிமையியல் பணி தேர்வானாலும் சரி, Grou B மற்றும் இதர தேர்வுகளிலும் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலை மாணவர்களிடையே வளர வேண்டும்.","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558797163,"sku":"BK1767","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/etta-iyalum-ilakkugal.jpg?v=1788081601"},{"product_id":"fascisathin-ilakanam-nam-avargal","title":"ஃபாசிசத்தின் இலக்கணம் : நாம் - அவர்கள்","description":"\u003cp\u003eஊடுருவும் ஆற்றல்கொண்ட ஃபாசிசத் தந்திரங்கள் உலகெங்கும் எழுச்சிபெற்று வருகின்றன.அவற்றை ஒருங்கிணைக்கும் கட்டமைப்புகளான பத்துத் தூண்களைக் குறித்து இந்நூலாசிரியரும்,புகழ்பெற்ற மெய்யியலாளரும்,பரப்புரை குறித்த ஆய்வறிஞருமான ஜேசன் ஸ்டான்லி இந்நூலில் தனது கவனத்தை குவிக்கிறார்.மக்களை “நாம்” மற்றும் “அவர்கள்” என்று பிரித்தாளும் மொழியையும்,நம்பிக்கையையும் சரியாகத் திட்டமிட்டு,பத்துத் தலைப்புகளில் ஒழுங்குப்படுத்திப் பகுப்பாய்வு செய்கிறார்.\u003cbr\u003e\nசமகால ஹங்கேரி,போலந்து,இந்திய,மியான்மர் மற்றும் அமெரிக்கவில் நிகழ்ந்த சம்பவங்களோடு வரலாறு,மெய்யியல்,சமூகவியல் மற்றும் விமர்சனப்பூர்வமான இனவியல் கோட்பாடு ஆகியவற்றைத் தொடர்புபடுத்தி ஆழ்ந்த கருத்துகளை இந்நூல் ஒன்றிணைக்கிறது.படிப்படியாகப் பெருகிவரும் ஃபாசிசத் தந்திரங்களின் தாக்கங்களைக் குறைத்து மதிப்பிடுவது மிகவும் ஆபத்தானது என்று இந்நூல் எச்சரிக்கிறது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558829931,"sku":"BK1768","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/fascisathin-ilakanam-nam-avargal.jpg?v=1788081603"},{"product_id":"fukushima-oru-perazhivin-kathai","title":"ஃபுக்குஷிமா: ஒரு பேரழிவின் கதை","description":"\u003cp\u003eநிலநடுக்கம்,சுனாமி,ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சாட்சியான மிக்கேயேல் ஃப்பெரியே -யின் நேரடி சாட்சியமே இந்நூல்.\u003cbr\u003e\nஃபுக்குஷிமாவில் அணுஉலை வெடிப்பு நிகழ்ந்த பின்னர் நடந்தது என்ன என்பதை ‘ஃபுக்குஷிமா ஒரு பேரழிவின் கதை’ என்ற நூல் மூலம் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஃபிரெஞ்சு நாவலாசிரியரும் பேராசிரியருமான மிக்கேயில் ஃபெரியே. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பணியாற்றிவரும் மிக்கேயில் ஃபெரியே, அணுஉலை வெடிப்பு நிகழ்ந்தபோது தலைநகரில் வாழ்ந்தவர். ஃபுக்குஷிமாவிலிருந்து 239 கி.மீ. தொலைவில் டோக்கியோ இருந்த நிலையிலும் அணுஉலை விபத்தால் அந்த நகரமும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த விபத்தால் புரட்டிப் போடப்பட்ட ஜப்பானிய நிலத்தையும் மக்களையும் பற்றிய நேரடி சாட்சியமாகவே ஃபெரியே இந்த நூலை எழுதியுள்ளார்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558862699,"sku":"BK1769","price":260.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/fukushima-oru-perazhivin-kathai.jpg?v=1788081606"},{"product_id":"gaiya-boomithayin-marana-sasanam","title":"கையா பூமித்தாயின் மரண சாசனம்","description":"\u003cp\u003eபுவி என்பது வாழ்வின்றி வேறேது?என்னைப் புவி என்பதற்கு பதில் உயிர்என்றே அழைக்கலாம்.\u003cbr\u003e\nஉலகின் ஒவ்வொரு அணுவும் மற்றதுடன்உறவு கொண்டதென்கிறது பௌதீகம்.மனதின் வறுமை உடலில் வெளிப்படும்.நவீனம் என்ற பெயரில் நீங்கள்தனிமைப்பட்டுப் போகிறீர்கள்.\u003cbr\u003e\nஉன்னத அறிவுடன் உன்னைப்படைத்தேன். ஆள்வதற்கல்ல...காப்பதற்காகவே...\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558895467,"sku":"BK1770","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/gaiya-boomithayin-marana-sasanam.jpg?v=1788081608"},{"product_id":"ithaiyame-kodaiyaanaal","title":"இதயமே கொடையானால்","description":"\u003cp\u003eஇருந்தார்கள். தூய்மைபடுத்தப்பட்ட துணியைச் சன்னல்கள் போல் வைத்து மார்புப் பகுதியிலும் அடி வயிற்றிலும் மூடியிருந்தார்கள்.தொடங்க ஆரம்பித்தார்கள். அறுவைச் சிகிச்சை அறையிலிருந்த முதல் குழு, சிறுநீரக மருத்துவர்கள் குழு. அவர்கள்தான் முதலில் உடலைத் திறப்பார்கள்; அவர்கள்தான் கடைசியில் அதனை மூடுவார்கள். லாரல்-ஹார்டி போல் இருவர். மெலிந்த, உயரமான ஒருவர்: அவர்தான் அறுவைச் சிகிச்சை நிபுணர். குட்டையாக, குண்டாக இருந்தவர் உள்ளுறை பயிற்சி மருத்துவர். முன்னவர்தான் குனிந்து அடிவயிற்றில் சிலுவைபோல் ஒரு கீறல் போட்டார் –அதாவது ‘பை லேட்டரல்லேப்பராட்டமி’ (bilateral laparotomy) செய்தார். இடைத்திரை சவ்வை ஒட்டி உடல் இரண்டு பாகமாகப் பிரிக்கப்படுகிறது. அடிவயிற்றுப் பகுதியில் கல்லீரலும் சிறுநீரகமும், அதற்கு மேல்பகுதியில் நுரையீரலும், இதயமும் இருந்தன. அதன் பின், கிழிவை அகலப்படுத்த, அதற்கான கருவி யைப் பயன்படுத்துவதோடல்லாமல் கைப்பக்குவத்தையும் பயன்படுத்துகின்றனர். கைப்பக்குவத்தின் முக்கியத்தை அப்போதுதான் உணர முடிகிறது. அங்குள்ள சூழலுக்கு உடல் பிரயாசையும் தேவைப்பட்டது தெளிவாகியது. உடலின் உள்ளே கசிந்துகொண்டிருந்த இரத்தம் சங்கடத்தை ஏற்படுத்தியது. விளக்கின் ஒளியில் அனைத்துமே சிவப்பாகத் தெரிந்தது.\u003cbr\u003e\nமருத்துவர்கள் தங்களுக்கு வேண்டிய உறுப்பை எடுப்பதற்குத் தயார் நிலையில் இருந்தனர். உறுப்புகளை அவற்றோடு ஒட்டியிருப்பதிலிருந்து பிரிப்பதற்கான கத்தி சரியாகவும், தடங்கலில்லா மலும் வேலை செய்ய வேண்டும். இதுவரை எதையும் வெட்டி எடுக்கவில்லை. சிறுநீரக மருத்துவர்கள் உடலின் இருபக்கமும் நின்றுகொண்டிருந்தனர். மூத்த மருத்துவர் தன் மாணவன் அதிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று யோசித்தார். சிறு நீரகங்கள் மீது தலை குனிந்துகொண்டு, தன்னுடைய செயல் திட்டத்தை ஒவ்வொரு பகுதியாக விளக்கினார். மாணவன் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டான். சில சமயம் கேள்விகள் கேட்டான்.\u003cbr\u003e\nBlurb Description : அவ்விரு பேராசிரியர்களும் சொன்ன தகவல் மெல்ல வெடிக்கும் ஒரு வெடிகுண்டுபோல் அவரை உலுக்கியது. அதாவது, இதய இயக்கம் நிற்பது மரணத்தின் அறிகுறியன்று. மூளையின் செயல்பாடுகள் நிற்பதுதான் மரணத்தின் அறிகுறி. வேறுவிதமாகச் சொல்வதானால், 'நான் சிந்திக்க முடியாமல் போனால், நான் இறந்துவிட்டேன்,' என்று பொருள். இதயத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து, அதனைச் சிம்மாசனத்திலிருந்து இறக்கிவிட்டு, மூளைக்கு முடிசூட்டும் விழா நடந்தது. குறியீட்டளவில், அது ஓர் ஆட்சிக் கவிழ்ப்பு - ஒரு புரட்சி.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558928235,"sku":"BK1771","price":260.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ithaiyame-kodaiyaanaal.jpg?v=1788081611"},{"product_id":"jeeviya-sarithira-churukkam-thadagam","title":"ஜீவிய சரித்திர சுருக்கம் (தடாகம்)","description":"\u003cp\u003eதமிழக ஒடுக்கப்பட்டோர் அரசியல் முன்னோடிகளில் முதன்மையானவரான இரட்டைமலை சீனிவாசன் (1860 - 1945) எழுதிய தன்வரலாற்று நூல் இது. தன்னுடைய அரசியல் பயணத்தின் முக்கியமான தருணங்களைத் தேர்ந்தெடுத்து சுருக்கமாக இந்நூலில் முன்வைத்திருக்கிறார். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நவீன அரசியல் தளம் சார்ந்து தலித்துகளிடைய உருவான அரசியல் எழுச்சி 20 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியினூடாக தலித்துகள் மேற்கொண்ட சட்டரீதியான தலையீடுகள் ஆகியவற்றை விவரித்துச் செல்கிறது இந்நூல். இந்நூலிலிருந்து கிடைக்கும் தரவுகள் மூலம் தாழ்த்தப்பட்டோர் வரலாற்றை மட்டுமல்ல தமிழக அரசியல் வரலாற்றையும் புதிய பரிமாணத்தோடு வாசிக்க இயலும்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558961003,"sku":"BK1772","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/jeeviya-sarithira-churukkam-thadagam.jpg?v=1788081613"},{"product_id":"kadalum-oru-kilavanum","title":"கடலும் ஒரு கிழவனும்","description":"\u003cp\u003eஎது எப்படியாயினும், காற்று நமது நண்பன் என்று நினைத்தான். அதன்பின் 'சில வேளைகளில்\" என்று சேர்த்துக்கொண்டான். மேலும், நமது நண்பர்களையும், எதிரிகளையும் உள்ளடக்கிய பரந்த கடலும் நமது நண்பன்தான். படுக்கையும் கூடத்தான். என்று நினைத்தான். படுக்கை எனது நண்பன்; வெறும் படுக்கை. படுக்கைதான் மிகச் சிறந்த நண்பன். ந் தோற்கடிக்கப்படும் போது, படுக்கைதான் உனக் குச் சிறந்தது. என்று எண்ணினான். அது எவ்வளவு சிறந்தது என்று எனக்கு ஒருபோதும் தெரியாது. இரவு நேரத்தில் இரண்டு குட்டி டால்பின்கள் படகைச் சுற்றின. அவை உருளுவதையும் தண்ணீரை மேலே ஊதித் தள்ளுவதையும் அவனால் கேட்க முடிந்தது. ஆண் டால்பின் ஊதும் சத்தத்துக்கும் பெண் டால்பின் ஏக்கத்துடன் எழுப்பும் சத்தத்துக்கும் இடையே யான வேறுபாட்டை அவனால் கூற முடியும். “அவை நல்லவை. ஒன்றை ஒன்று நேசித்து, கேலி பேசி விளை யாடுபவை. பறவைமீன்களைப் போல் அவையும் நமது சகோதரர் கள்\" என்றான். நான் தெளிவாகத்தான் இருக்கிறேன் என்று நினைத்தான். மிகத் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய சகோதரர்களாகிய நட்சத் திரங்கள் எவ்வளவு தெளிவாக இருக்கின்றனவோ அந்த அளவு தெளி வாக இருக்கிறேன். இருந்தாலும், நான் தூங்க வேண்டும். நட்சத் திரங்கள் தூங்குகின்றன; நிலவும் சூரியனும் தூங்குகின்றன.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784558993771,"sku":"BK1773","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/kadalum-oru-kilavanum.jpg?v=1788081615"},{"product_id":"maanuda-vaasippu","title":"மானுட வாசிப்பு","description":"\u003cp\u003eஇரவுச் சாப்பாடு சாப்பிடுகிறபோது எங்கம்மா ஏன்ட்ட நிறைய பேசிட்டே இருப்பாங்க.ஒவ்வொரு கதையா சொல்லுவாங்க.அவ இந்த ஊர்லயே பிறந்து வளர்ந்தவ.அவ இந்த ஊர்லயே இருந்ததுனால இந்த ஊருடைய வளர்ச்சி,பிற சாதிகளோட தொடர்பு, பழமொழிகள், சொலவடைகள், proverbs, phrases இதுலயெல்லாம் எங்கம்மா கெட்டிகாரங்க.எல்லோரும் சொல்வாங்க நிறைய பழமொழி சொல்லிட்டே இருப்பாங்க.பார்ப்பானுக்கு மூப்பு பறையன் அதே எங்கம்மா சொன்னதுதான்.அப்புறம் யாரும் சொல்ல நான் பார்க்கல.கடைசியா முப்பது ,முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து எங்க மாமனார் சொல்லி நான் கேட்டேன்\u003cbr\u003e\nஇத்தனைக்கும் எங்கம்மா பள்ளிக்கூடத்திற்கு போகாத ஆளு.மூணு நாள் தான் பள்ளிக்கூடத்திற்குப் போனேன்னு சொல்லி,கடைசி வரைக்கும் வருத்தப்பட்டுக்கிட்டிருந்தா.....\u003cbr\u003e\nமனித உறவுகள பத்தி நிறைய பேசுவாங்க.இந்த ஊர்ல வெள்ளைக்காரன் இருந்தான்ல. வெள்ளைக்காரன பத்தி நிறைய பேசுவா. வெள்ளைக் காரன் கண்ணு வச்சா ஒரு பொருள் விளங்காது அப்படிண்ணுவா. எங்க வீட்டுல இருந்த ஆட ஒரு வெள்ளைகாரன் விலைக்கு கேட்டானாம். எங்கப்பா கொடுக்க மாட்டேன்ராட்டாராம்.அந்த ஆடு செத்துப் போச்சாம். அதான் சொல்லுவா.\u003cbr\u003e\nஎங்கம்மாவோட பேச்சு காரணமாக every old man is good read with என்ற எண்ணம் வந்துச்சு. ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய புத்தகங்கள். அதுனாலதான் யார் எங்க பேசுனாலும் கேட்டுட்டே இருக்க வேண்டியது. அல்லது அவங்கள பேச வச்சு கேட்டுகிட்டு இருக்கிறது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559026539,"sku":"BK1774","price":120.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/maanuda-vaasippu.jpg?v=1788081619"},{"product_id":"nathaigalai-kondra-beerangigal","title":"நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள்","description":"\u003cp\u003eசென்னையின் ஒரு பள்ளியில் சிறுமிக்கு நத்தையை வரைந்து வருதல் வீட்டுப்பாடமாகக் கொடுக்கப்படுகிறது. நத்தையை நேரில் கண்டறியாத குழந்தை தன் அம்மாவிடம் நத்தையை வரைந்து தருமாறு சொல்கிறது. அவளின் அம்மாவும் நத்தையை நேரில் கண்டறியாதவள் ஆகையால் தனமனதில் உள்ளவாறு வரைகிறாள். அதைப்பார்த்த சிறுமியின் தந்தை வரையப்பட்ட நத்தை நத்தை போலல்லாமல் சங்குசக்கரம் போல் உள்ளதெனக் கூற சிறுமியின் அம்மா தான் நத்தையை நேரில் பார்த்தறியாததைக் கூற சிறுமி நத்தையை நேரில் பாரக்க ஆசைப்படுகிறார். தன் சிறுவயதில் தன் கிராமத்தில் நத்தைகளை மிகுதியாக இருந்ததையும் நத்தைகளை சமைத்து உண்பது தங்கள் உணவுப்பழக்கமாக இருந்துள்ளதையும் நினைவுகூர்ந்து முப்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட தன் கிராமத்து விளிம்புநிலை மக்களுடனான வாழ்வை மிக யதார்த்தமாக இருந்தது இருந்தபடி அவர்களின் வாழ்வியற்கூறுகளை மிக அழகாக மக்களின் வட்டார மொழியில் விவரித்து நாவலுக்குள் நம்மை கட்டிக்கூட்டிச் செல்கிறார்.\u003cbr\u003e\nஇக்கதையில் இடம்பெற்றிருக்கின்ற சம்பவங்கள் அனைத்தும் இன்றும் அப்படியே தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்று அது வேறு வடிவம் பெற்று இருக்கிறது. இந்த வடிவ மாற்றத்தை தலித்துக்கள் தற்காலிக விடுதலைக்கான வழியாக நம்பி இருக்கின்றனர்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559059307,"sku":"BK1775","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/nathaigalai-kondra-beerangigal.jpg?v=1788081620"},{"product_id":"nayakar-kalasamooga-panbattu-varalaru","title":"நாயக்கர் காலச்சமூகப் பண்பாட்டு வரலாறு","description":"\u003cp\u003e2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கல்வெட்டறிஞர் முனைவர் அ.பத்மாவதி அவர்கள் என்னை பணிநிமர்த்தமாக சென்னைக் கிறித்தவக் கல்லூரிக்குச் சென்று முனைவர் சா.பாலுசாமி அவர்களைச் சந்திக்குமாறு கூறினார்கள். அ ப் பொழுது தான் கிறித்தவக் கல்லூரிக்குள் முதல் முதலில் காலடி வைத்தேன். அக்கல்லூரியில் தமிழில் பேராசிரியர்களையும் தாவரவியல் துறை பேராசிரியர்களையும் சந்தித்தபோது இதுவரை என் வாழ்வில் தவறவிட்ட அறிவு' அனுபவங்களைக் கற்றுகொள்ளவேண்டும் என்று தோன்றியது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559092075,"sku":"BK1776","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/nayakar-kalasamooga-panbattu-varalaru.jpg?v=1788081622"},{"product_id":"neerkothi-manidhargal","title":"நீர் கொத்தி மனிதர்கள்","description":"\u003cp\u003e1967-1971 காலவாக்கில் கதை சொல்லப்படுகிறது. இந்தக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு எல்லையை ஒட்டிய பல கிராமங்களில் ஒன்றில் நிலவிய கோடைவறட்சி, குடிநீருக்கான பஞ்சம் , இந்தத் தடத்தில் செல்லும் நாவல், சாதி,சாதிதுவேசம் என்று ஒதுக்கபட்ட மக்களிடம் வெளிப்படும் சாதிய முரண்பாட்டின் மீதான விமர்சனத்தை எழுப்பிப் பேசுகிறது.\u003c\/p\u003e\n\n\u003cp\u003eவர்க்கம் சாதி என்ற பிரிவுகளில் கடைநிலையாய் இருக்கும் மக்கள் மத்தியில் வெளிப்படும் முரண்பாட்டில் அரசு தப்பித்துக் கொண்டு , நம்மை அதிகாரம் செய்யும் ,அதிகாரப்பரப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது நீர்கொத்தி மனிதர்கள். சாதிப்படிநிலையில் கீழ்நிலையில் அலைவுறும் மக்கள் மத்தியில், தனக்குக் கீழேயும் அதிகாரம் செலுத்த வேண்டிய, மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கருதும் எளிய மக்கள் குறித்து, நமக்கு பெரும் விசனத்தை அபிமானி உருவாக்குகிறார்.\u003cbr\u003e\nநாவலின் ஒவ்வொருக் காட்சியும் வலி மிகுந்த துயர் சித்திரமாகப் படிந்து, நம்மை அலைக்கழிக்கிறது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559124843,"sku":"BK1777","price":220.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/neerkothi-manidhargal.jpg?v=1788081624"},{"product_id":"nilamadanthaikku-krishanammal-jaganathan-iyakka-varalaru","title":"நிலமடங்தைக்கு கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் இயக்கவரலாறு","description":"\u003cp\u003eமுன் மாதிரியாகப் பலரை உதாரணங்களாகச் சுட்டிக் காட்டுவது நம் அனைவருக்கும் எளிது; ஆனால், தன்னையே பலருக்கு முன்மாதிரியாக ஆக்கிக்கொள்வது என்பது அரிது. இந்த அரிதான கூற்றைப் பொய்யாக்கி, தனது எண்ணத்தால், சொல்லால், செயலால் தன்னையே பிறருக்கு முன்னுதாரணமாக வெளிப்படுத்திய தகைமை, காந்திகிராமத்தின் நிறுவனர், டாக்டர் டி.எஸ்.செளந்திரம் அம்மா அவர்களின் செல்ல மகள், பெருமதிப்பிற்குரிய கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களென்றால் அது மிகையாகாது.பட்டிவீரன்பட்டிக்கு அருகில் உள்ள அய்யன்கோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த, இராமசாமி – நாகம்மையார் என்ற ஏழை உழைப்பாளர்களுக்கு, 1926ஆம் ஆண்டு முதல் பெண் மகவாகக் கிருஷ்ணம்மாள் பிறந்தார். 1950இல் காந்தி கிராமத்தில் செளந்தரம் அம்மா முன்னிலையில் ஜெகந்நாதன் அவர்களைக் கரம்பிடித்தார் அன்றுமுதல் தற்போதைய தனது 93ஆவது அகவை வரையிலும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காவும் ஏழை உழைப்பாளர்களுக்காவும், நிலமில்லா கூலித் தொழிலாளர்களுக்காவும் போராடிக் கொண்டிருக்கிறார். நிலமீட்புப் போராட்டமாகட்டும், சர்வோதய இயக்கச் செயல்பாடுகள் ஆகட்டும் அனைத்திலும், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தியும், அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருனை என்ற வள்ளலாரின் வாக்கை உச்சரித்தும் தனது இலக்கை நோக்கியே அவரது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இத்தம்பதியினர் ஆரம்பித்த லாஃப்டி அமைப்பு மூலம் மண் குடிசையில் வாழ்ந்த ஏழைகளுக்கு சுமார் 500 கல் வீடுகளைக் கட்டிக் கொடுத்தது, விளைநிலங்களில் இறால் பண்ணை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, உண்ணாவிரதம் மேற்கொண்டு வெற்றிபெற்றது, கீழத்தஞ்சை வடபாதி மங்கலத்தில் மக்கள் ஆதரவுடன் போராடி, கரும்புப் பண்ணையை கலைத்து அந்த நிலத்தை தாழ்த்தப்பட்ட ஏழை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்து, முத்துபேட்டை சீலத்தநல்லுரில் தரிசாகப் போடப்பட்ட நிலங்களை மீட்டு பெண்களுக்கு பட்டா வாங்கித் தந்த்து, நாகை மாவட்டம், கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த,தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாட்கோ திட்டத்தின் உதவியுடன் 1000 ஏக்கர் நிலத்தை நிலச்சுவாந்தார்களிடமிருந்து பெற்று 1000 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வாங்கித் தந்தது, கீழ்வெண்மணி, வலிவலம் போராட்டம், ஆரம்ப காலத்தில் வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டு, நிலங்களைத் தானமாகப் பெற்று, ஏழைகளுக்கு விநியோகித்த்து, பீகார் மாநிலத்தில் போராடி நிலமில்லா ஏழைகளுக்கு நிலம் பெற்றுத் தந்தது என இந்த இணைபிரியா தம்பதியினரின் சாதனைகளைப் பட்டியலிட்டால் அவை நீண்டுகொண்டே போகும்.காந்திஜிக்கு எவ்வாறு ஒரு கஸ்தூரிபாய் பின்புலமாக இருந்து, அவரது அனைத்துச் செயல்பாடுகளிலும் பக்கபலமாகவும், உறுதுணையாகவும் இருந்தாரோ அதுபோலவே, கிருஷ்ணம்மாள் அவர்களின் அனைத்துப் போராட்டங்களிலும் முயற்சிகளிலும், திட்டங்களிலும் பூமிதான இயக்கத்தின் தமிழக முன்னோடியான ஜெகந்நாதன் அவர்கள் அவருக்கு உற்ற பங்காளராகவும் ஏற்ற செயல்வீர்ராகவும், போராளியாகவும் இருந்து அனைத்திலும் அவரை வெற்றி பெறச் செய்தார். பெண்களை போராட்டங்களில் அவரை வெற்றி பெறச் செய்தார். பெண்களை போராட்டங்களில் முன்னேடுக்க வைத்தில் கிருஷ்ணம்மாளுக்கு நிகர் அவரே.தனது தொன்னூற்று மூன்றாண்டு கால வாழ்க்கைப் பயணத்தில் ஏழை எளியவர்க்காக, குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் ஆபத்பாந்தவனாக இருந்த, அரும்பெரும் சேவைகள் புரிந்து அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்கா நினைவில் இடம்பெற்றுள்ள ‘’கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் இயக்க வரலாறு’’ என்கிற உட்தலைப்பில், அவரது சாதனைகளையும் வேதனைகளையும் தொடுத்து வெளிவரும் இந்நூல், இக்கால இளைஞர்களுக்கும், சமூக அக்கறையாளர்களுக்கும், வருங்கால சந்ததியினருக்க்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்குமானால், அதுவே அவரது சேவைக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும் எனக் கருதுகிறேன்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559157611,"sku":"BK1778","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/nilamadanthaikku-krishanammal-jaganathan-iyakka-varalaru.jpg?v=1788081627"},{"product_id":"nizhar-kudai-ezhaththu-sirukathaigal","title":"நிழற்குடை: ஈழத்து சிறுகதைகள்","description":"\u003cp\u003e2008ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஈழப்போரில் வாழ்வும் வளமும் பறிக்கப்பட்டு நிர்க்கதியான ஈழத்து மக்களின் துயரங்களும், வேதனை இந்தச் சிறுகதைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சந்ததியின் பெருவாழ்வு இந்த எழுத்துகள் மூலம் ஒவ்வொரு கதைமாந்தர்களுக்கான ஒரு நிழந் குடையை இந்தச் சிறுகதை வழங்கியிருக்கிறது. சுத்தத்தின் சத்தங்கள் நின்று போனதே தவிர அந்த மனிதர்களின் வாழ்வு போராட்டம் நிறைத்தே கடந்துகொண்டிருந்த நேரத்தில் நிழல் கொடுத்து அவர் களைத் தாங்கிய கதைகள் இவை. போரின் பின்னான காலத்தின் துயரம் என்பது உயிர்களை எப்படி வதைக்கும் என்பதன் சாட்சிகளாக 'நிழற்குடை' உயிரும் உணர்வும் கலந்திருக்கிறது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559190379,"sku":"BK1779","price":250.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/nizhar-kudai-ezhaththu-sirukathaigal.jpg?v=1788081629"},{"product_id":"oru-poorva-bowththanin-satchiyam","title":"ஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம்","description":"\u003cp\u003eஒரு பூர்வ பெளத்தனின் சாட்சியம் அயோத்திதாசரின் சொல்லாடல்\u003cbr\u003e\nமனிதன் வாழ்வு, இறப்பு மூலமாக இவ்வுலகில் பெறும் வளர்ச்சி பற்றியும் பேசுதற்கரிய பிரம்மத்தில் அவன் விதி இறுதி அடைவதைப் பற்றியும் அவை விரிவாக விளக்குகினறன. உபநிடதங்கள் பற்றி இத்தகைய பாராட்டுகள் குவிக்கப் பட்டிருந் தாலும் அவற்றை ஆழ்ந்து நோக்குவார் வேறு முடிவுகள் எடுக்க நேரும். வேதங்களினின்றும் அவை மாறுபடவில்லையென்று கூறும் சர்மாவே \"உபநிடதங்கள் ஒரு கீழ்த்தரமான வேள்விச் சமயத்தை (Aratherlowtype of sacrificial religion) எக்காலத்திற்கும் பொதுவான ஓர் அரிய மெய்யுணர்வுச் சமயமாக (A great mystical religion) மாற்றும் பெரிய பணியில் ஈடுபட்டன\" என்று கூறுவார் (சர்மா 2). ஆனால் வேள்விச் சமயத்தையும் வேள்வியையும் புகழ்ந்து பாடும் இடங்கள் உபநிடதங்களில் உண்டு. சுவேதாஸ்வதர உபநிஷதம்,\u003cbr\u003e\nஎல்லாக் கடவுளரும் வாழும் மிகவுயர்வான, மாறுபாடு அடையாத விண் ணுலகில் இருக்கு வேதமும் உள்ளது. அவனை அறியாதவன் இருக்கு வேதத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வான்? இதைத் தெரிந்தவர்களே அமரத்துவம் அடைவார்கள். இப்பொருளிலிருந்துதான் படைத்தவன் வேதங்களையும் வேள்விகளையும் சடங்குகளையும் இருந்ததையும் இருப்பதையும் வேதங்கள் சொல்வதையும் வெளிப்படுத்துகிறான். (சர்மா 258)\u003cbr\u003e\nஎன்று தெளிவில்லாமல் பேசும்.\u003cbr\u003e\nபிருகதாரண்யக உபநிஷதம் வேள்விக்குதிரையே எல்லாமென்று பாராட்டுவதையும் காணலாம்:\u003cbr\u003e\nவிடியலே வேள்விக்குதிரையின் தலை : கதிரவன் அதன் கண்; காற்று அதன்மூச்சு: தீ அதன் திறந்த வாய் வருடம் அதன் உடல வான் அதன் முதுகு, இடைப்பட்ட உலகம் அதன் வயிறு பூவுலகம் அதன் குளம்பு ; நான்கு பகுதிகள் அதன் பக்கங்கள். இடைப்பட்ட பகுதிகள் அதன் விலா எலும்புகள் பருவங்கள் அதன் உறுப்புகள் மாதங்களும் அரை மாதங்களும் அதன் மூட்டுகள்; பகல்களும் இரவுகளும் அதன் பாதங்கள் : விண்மீன்கள் அதன் எலும்புகள்: மேகங்கள் அதன் சதை மணல்கள் அதன் பாதி செரித்த உணவு : ஆறுகள் அதன் குருதி நாளங்கள் மலைகள் அதன் சாற்குரையும் நுரையீரலும், செடிகளும் மரங்களும் அதன் மயிர் உதிக்கும் கதிரவன் அதன் முன்பகுதி மறையும் கதிரவன் அதன் பின்பகுதி, மின்னல் அதன் கொட்டாவி, இடி அதன் அசைவு, மழை அதன் சிறுநீர்; பேச்சு அதன் கணைப்பு -சர்மா 182)\u003cbr\u003e\nவேள்விக்குதிரை இவ்வாறெல்லாம் பொருளற்ற முறையில் புகழப்படுவதற்குச் சமாதானம் கூற முனையும் அரவிந்தர் அங்கு அது குறியீட்டுப் பொருளாக அண்டத்தைக் குறிக்கும என்பார்.\u003cbr\u003e\n \u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559223147,"sku":"BK1780","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/oru-poorva-bowththanin-satchiyam.jpg?v=1788081632"},{"product_id":"paarthivendhivarman-rajaraja-cholane-ki-pi-950-985-chola-rajiyam","title":"பார்த்திவேந்திரவர்மன் இராஜராஜ சோழனே கி.பி.950-985ல் சோழ இராஜ்யம்","description":"\u003cp\u003eபார்த்திவேந்திரவர்மன் இராஜராஜ சோழனே கி.பி.950-985ல் சோழ இராஜ்யம்\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559255915,"sku":"BK1781","price":495.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/paarthivendhivarman-rajaraja-cholane-ki-pi-950-985-chola-rajiyam.jpg?v=1788081634"},{"product_id":"pandaiya-tamil-samugam","title":"பண்டையத் தமிழ்ச்சமுகம்","description":"\u003cp\u003eபண்டையத் தமிழ்ச் சமூகம்' என்னும் இந்நூல் தமிழ்ச் சமூகம் பற்றிய தொல்பழங்காலம்முதல் சங்ககாலம்வரையிலான பன் முகப்பட்ட பண்பாட்டுக் கூறுகளைத் தொல்லியல் தரவுகள் கொண்டு ஆய்வுசெய்யும் ஒரு வரலாற்று நூலாக அமைகிறது. இந்நூல் மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் அமைக்nts கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. தமிழ்ச் சமூகத்தின் தனித்தன்மையான திணை,குடி, அகம், புறம் இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்ட வாழ்வியலின் கூறுகளையும், வழிபாட்டு நிலைகளையும் எடுத்தியம்புகிறது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559288683,"sku":"BK1782","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/pandaiya-tamil-samugam.jpg?v=1788081636"},{"product_id":"parayan-paattu","title":"பறையன் பாட்டு","description":"\u003cp\u003eபறையன் பாடல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் இந்நூலாசிரியர்களின் கற்பனையில் உதித்தவை அல்ல. மாறாகத் தீண்டாமையை ஏற்றுக்கொண்டு அதை வலியுறுத்தும் வைதீக சமயத்தின் புனிதநூல்களில் இடம்பெற்ற செய்திகள்தாம். எனவே இச்செய்திகள் உண்மை அல்ல என்று வைதீகர்களால் மறுக்கமுடியாது.\u003cbr\u003e\n- ஆ. சிவசுப்பிரமணியன்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559321451,"sku":"BK1783","price":80.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/parayan-paattu.jpg?v=1788081639"},{"product_id":"piano","title":"பியானோ","description":"\u003cp\u003eநம் கால மனித வாழ்வில் அதிகமும் உணரப்படாதிருக்கிற பிரச்சனைகளின் முகங்களை இக்கதைகள் எழுத்தில் பதிய வைத்திருக்கின்றன. இந்த முகங்களில் தெரியும் நம்முடைய சாயல்களை இப்படைப்புகளோடு உறவு கொள்ளூம் ஒவ்வொரு வாசகனும் ரகசியமாக உணர முடியும். யதார்த்த உலகின் வாசலிலிருந்து ஒரு வெட்டவெளி விந்தை உலகை நோக்கி விரிந்து பரவியிருக்கிற கதைகள் இவை. யதார்த்தமும் புனைவும், அவதானிப்பும் விந்தையும் ஒன்றோடொன்று கலந்துறவாடும் கதைகள். இவற்றில் பொரும்பாலான்வை யதார்த்தமும் ஆழ்மன யதார்த்டமும் கூடி முயங்கிய கனவுத் தன்மையிலானவை. நம் நனவுலகை இடையறாது தொடந்து அதோடு இரண்டறக் கலக்கும் கனவுலகம் மற்றும் தொன்மங்களாகத் தொடரும் நினைவடுக்குகள் ஆகிய ஆழ்ந்த, பிடிபடாப் பிரேதசங்களில் சஞ்சரிப்பவை. மேலும், சிறுகதை வடிவத்தின் அழகியல் சாத்தியங்களை அற்புதமாக வசப்படுத்தியிருப்பவை.\u003cbr\u003e\n- சி. மோகன், முன்னுரையிலிருந்து...\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559354219,"sku":"BK1784","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/piano.jpg?v=1788081641"},{"product_id":"ramrao-vazhvenum-maranam-india-vivasayiyin-nilai","title":"ராம்ராவ் வாழ்வெனும்  மரணம் இந்தியா விவசாயியின் நிலை","description":"\u003cp\u003eராம்ராவ், மகாராஷ்டிராவில் உள்ள யவத்மால் மாவட்டத்தின் உள்ளடங்கிய இராமமான தஹிவாராவில் வாழ்கிறார், அவர் எதற்காகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்? அதன் பின்னரான அவரது வாழ்வு எப்படி இருந்தது? ஒரு விவசாயியில் வாழ்வு எத்தகை என்ற அடிப்படை கேள்விகள் ஊடாக விதர்பாவில் என்ன நடக்கிறது? உண்மையில் பருத்தி விவசாயத்தில் என்ன சிக்கல்? ஓட்டுமொத்தமாக விவசாயத்தில் என்ன சிக்கல்தான் உள்ளது? என்ற கேள்விகளுக்கான விடையைத் தேடி ஆசிரியர் மேற்கொள்ளும் பயணமே இந்நூல்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559386987,"sku":"BK1785","price":350.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ramrao-vazhvenum-maranam-india-vivasayiyin-nilai.jpg?v=1788081644"},{"product_id":"rettaimalai-srinivasan-matha-nilaippadu","title":"இரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு","description":"\u003cp\u003eமதங்களின் வரலாற்றில் அவை உதித்தல், உதிர்தல், ஊடுருவல், உள்ளிருத்தல் போன்ற நிகழ்வுகளைத் தனிப்பட்ட நபர்கள் அல்லது குழுக்களின் நம்பிக்கைகள் மட்டுமன்றி சமூகப் பண்பாட்டுக் காரணிகளும் அரசியல் பொருளாதாரமும் தீர்மானிக்கின்றன.\u003cbr\u003e\nபௌத்தர்களால் “தீண்டத்தகாதவர்”களாகக் கருதப்பட்ட கோயிலடிமைகளைக் கண்டபோது அதில் தலித் கண்களும் சிமிட்டுவதை உணர்ந்து 1899ஆம் ஆண்டு வெளியிட்ட இன்றைய இரங்கோனில் மினுமினுக்கும் பௌத்தச் “சுயதேக்கன் கோபுர சரித்திர” நூல் வழி “நாம் இந்துக்கள் அல்லர்” என அறிவித்த இரட்டைமலை சீனிவாசன் “இந்து மதத்தினின்று பிரித்தெடுக்கப்பட்ட” பௌத்தத்தையும் மறுத்தார்.\u003cbr\u003e\n                                                                                                                   கோ.ரகுபதி\u003cbr\u003e\nதொடைபுடைய மற்ற பதிவுகள்:\u003c\/p\u003e\n\n\n\u003cp\u003eஇரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு - முன்னுரை\u003c\/p\u003e\n\n\n\u003cp\u003eஇரட்டைமலை சீனிவாசனின் மத நிலைப்பாடு - பொருளடக்கம்\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559419755,"sku":"BK1786","price":100.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/rettaimalai-srinivasan-matha-nilaippadu.jpg?v=1788081646"},{"product_id":"seyal-thalaivar","title":"செயல் தலைவர்","description":"\u003cp\u003eசெயல் தலைவர்\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559452523,"sku":"BK1787","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/seyal-thalaivar.jpg?v=1788081648"},{"product_id":"sketch-book-of-trotsky-marudhu-1","title":"Sketch book of டிராட்ஸ்கி மருது -1","description":"\u003cp\u003eSketch book of டிராட்ஸ்கி மருது -1\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559485291,"sku":"BK1788","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/sketch-book-of-trotsky-marudhu-1.jpg?v=1788081650"},{"product_id":"tamilar-maruthuvam","title":"தமிழர் மருத்துவம்","description":"\u003cp\u003eசித்த மருத்துவத் தாவரங்களைக் களத்திலும் சித்த மருத்துவச் செய்திகளை அச்சிலும் பதிவு செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பவர் பாபநாசத்தைச் சேர்ந்த மூத்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு. சித்த மருத்துவம்தான் தமிழரின் ஆதி மருத்துவம் என்று பல்வேறு தரவுகள் மூலம் இந்தப் புத்தகத்தில் எடுத்துரைக்கிறார் மருத்துவர் மைக்கேல். அத்துடன், தாவர-உயிரினப் பன்மை நிறைந்த பொதிகை மலையின் தனிச்சிறப்பைப் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளார். குறிப்பாக இயல் தாவரங்கள் எப்படி நம் மண்ணைக் காக்கின்றன, மருந்தாகப் பயன் தருகின்றன என்பதையும் தெளிவாக விவரித்துள்ளார். இந்த நூலைத் தொகுத்து எழுதியவர்கள் தயாளன், ஏ. சண்முகானந்தம்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559518059,"sku":"BK1789","price":70.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/tamilar-maruthuvam.jpg?v=1788081652"},{"product_id":"tamizhagathil-sathikal","title":"தமிழகத்தில் சாதிகள்","description":"\u003cp\u003eஇந்நூலானது தமிழ்ச் சமூக உருவாக்கத்தில் சாதியத்தின் தோற்றம். வளர்ச்சி. வரலாறு. மிக முக்கியமாக சாதிக்கலப்பும் புதிய சாதிகள் உருவாக்கம் பற்றி இந்நூல் பேசுகிறது. சங்ககாலம் தொடங்கி களப்பிரர் காலம், பல்லவர் காலம், சோழர்கள் காலம், பாண்டியர்கள் காலம், விசயநகர பேரரசுக் காலம், ஐரோப்பியர் காலம், அயலவர் வருகையும் இனக்கலப்பும். புலப் பெயர்வும் இனக்கலப்பும், புதிய சாதிகள் உருவாக்கம். சாதிகளின் தோற்றத் தொன்மம் பற்றி நீண்டு பேசுகிறது. சங்ககாலத்தில் ஒவ்வொரு திணையிலும் 4-5 திணைக்குடிகள் நிலைகுடிகளாக வாழ்ந்தனர். ஆசு ஐந்து திணைகளிலும் ஏறக்குறைய 20-25 நிலைகுடிகளே வாழ்ந்து வந்துள்ளனர்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559550827,"sku":"BK1790","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/tamizhagathil-sathikal.jpg?v=1788081654"},{"product_id":"thaaivazhi-samugam-vazhvum-valipaadum","title":"தாய்வழிச் சமூகம்: வாழ்வும் வழிபாடும்","description":"\u003cp\u003eதாய்வழிச் சமூகமாக பன்னெடுங்காலமாக தன் இயல்பில் மாறாது வாழ்ந்து வளர்ந்து வரும் தமிழ்ச்சமூகத்தின் கட்டமைப்பானது, பெரும்பாலும் பிரபஞ்ச உற்பத்தியின் இயக்க அடிப்படைக் கோட்பாடுகளை நன்கு உள்வாங்கி கொண்டதால் தான் உறுதிபெற்றது என்பதனை இந்நிலத்தில் காலந்தோறும் நிகழ்ந்து வரும் வழிபாட்டு சடங்குகள் மட்டுமின்றி அதன் கலை மற்றும் பண்பாட்டு ரீதியாகவும் நன்குணர முடிகிறது. உலகம் முழுமையும் தாய்வழிச் சமூகமாக இருந்து பின் வீரயுகத்திலும், உபரி உற்பத்தியாலும் தந்தைவழிச் சமூகமாக மாறிய நிலையிலும் அதன் தொல் நிலையை விடாது கைக்கொண்ட ஒரு சில குறிப்பிட்ட சமூகங்களில் தமிழ்ச் சமூகம் முதன்மையானது. அந்த நிலைப்பாட்டை இந்நூல் கலை வரலாற்று அடிப்படையிலும், இலக்கியங்களின் வாயிலாகவும் விளக்குகின்றது.தாய்வழிச் சமூகம், காலப்போக்கில் தந்தைவழிச் சமூகமாக மாறியபோதிலும், தாய்வழிச் சமூகத்தில் தாய் பெற்றிருந்த முதன்மையை, அதன் நெறியை, நிலைத்த தன்மையை இன்றும் முழுமுதற் எச்சங்களாக பரவலாக பேரரசின் பெருங்கோயில்கள் முதல் பல்குடிகளின் வழிபாடுகள் வரை காணமுடிகிறது. இந்நிலையில் அந்த தொன்ம சடங்கு மற்றும் வழிபாட்டு நிலையிலும், கலைகளிலும், அகழ்வுகளில் கிடைக்கும் தொல் பொருட்களிலும் காணப்பெற்றமையை தொகுத்தும், விளக்கியும் தாய்வழி சமூகத்தின் உயர்நனி சமூகமாக தமிழ்ச்சமூகம் விளங்கியது என்பதை தாய்த்தெய்வ வழிபாடு, வளமைச்சடங்குகள் மற்றும் சமூகத்தில் பெண்மையின் நிலையைப் போற்றியிருந்த தன்மை ஆகியவற்றை இந்நூல் விளக்குகிறது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் தரவுகளையும், சங்க இலக்கிய கொற்றவைப் பாடல்களையும் ஒப்பியல் ரீதியில் பொருந்திக்காட்டுவது உள்ளிட்ட பல்வேறு தாய்வழிபாட்டுப் பொருண்மைகளை சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுகள் மூலமாகவும் இந்நூல் எடுத்தியம்புகிறது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559583595,"sku":"BK1791","price":160.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thaaivazhi-samugam-vazhvum-valipaadum.jpg?v=1788081656"},{"product_id":"thamilagathin-maruthuva-thaavarangal-payiridudhal","title":"தமிழகத்தின் மருத்துவ தாவரங்களை பயிரிடுதல்","description":"\u003cp\u003eதமிழகத்தில் மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா,சித்தா போன்ற மருத்துவ கல்வி முடித்து மருத்துவர்களாக பணியாற்றுவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து கொண்டே வருகின்றது.\u003cbr\u003e\nஇந்தியாவிலும்,பிற நாடுகளிலும்,இந்திய மருத்துவ முறைகளைப் பற்றிய விழிப்புணர்வும்,இந்திய மருத்துவ தாவரங்களின் நன்மைகளை பற்றியும், முன்பை விட அதிக மக்கள் புரிந்துக் கொண்டு இந்த மருந்துகளை நாடுகின்றார்கள், இதனால் இந்த மருந்துகளின் தேவை அதிகரிப்பதுடன், அதில் பயன்படுத்தப்படும் மூலிகை பொருட்களின் தேவையும்  அதிகரிக்கின்றது. மருந்துகளின் விலை கூடுவதுடன் தரமான மூலிகை பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுகின்றது.\u003cbr\u003e\nஇந்தாண்டு இதுவரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் சராசரிக்கு சற்று அதிகமாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மருந்து தாவரங்களை பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றார்கள். இதனை கருத்தில் கொண்டு அவரகளுக்கு வழிகாட்டும் பொருட்டு 25 ஆண்டுகள் அனுபவத்தில் இந்த கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559616363,"sku":"BK1792","price":60.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thamilagathin-maruthuva-thaavarangal-payiridudhal.jpg?v=1788081658"},{"product_id":"thamizhagathin-iravaadigal","title":"தமிழகத்தின் இரவாடிகள்","description":"\u003cp\u003eவெளவால்கள், தேவாங்குகள், ஆந்தைகள் உள்ளிட்ட இரவாடிகள் வாழ ஏற்ற சூழலை உருவாக்குவோம். இனிய வாழ்வியலுகேற்ற சூழலமைப்பை, இரவாடிகள் நமக்கு உருவாக்கிக் கொடுக்கும். நமக்கும், காட்டுயிர்களுக்குமான உறவை அறிவியலடிப்படியில், பகுத்தறிவு சிந்தனையோடு வளர்த்தெடுப்போம்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559649131,"sku":"BK1793","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thamizhagathin-iravaadigal.jpg?v=1788081659"},{"product_id":"thamizhagathin-varuvaai-sangakalam-muthal-pathimooram-nootrandu-varai","title":"தமிழகத்தின் வருவாய் சங்க காலம் முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை","description":"\u003cp\u003eசங்க காலம் தொடங்கி கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் வருவாய் எவ்வழிகளில் எல்லாம் கிடைத்தது என்பதை இந்நூலின் வழி அறிந்து கொள்ள இயலும்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559681899,"sku":"BK1794","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thamizhagathin-varuvaai-sangakalam-muthal-pathimooram-nootrandu-varai.jpg?v=1788081661"},{"product_id":"thamizhar-panbaadum-thathuvamum","title":"தமிழர் பண்பாடும் - தத்துவமும்","description":"\u003cp\u003eபேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ' தமிழர் பண்பாடும், தத்துவமும்' என்னும் பொருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559714667,"sku":"BK1795","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thamizhar-panbaadum-thathuvamum.jpg?v=1788081663"},{"product_id":"thamizha-samskrithama","title":"தமிழா? சம்ஸ்கிருதமா?","description":"\u003cp\u003e\"அறியப்படாத தமிழ்மொழி\" எனும் மிகச்சிறந்த நூலை இயற்றிய முனைவர் கண்ணபிரானின் இன்னொரு மகத்தான படைப்பு தான் தமிழா? சமஸ்கிருதமா? எனும் இந்நூல். வருகிற பிப்ரவரி 01 முதல் இந்நூல் உங்கள் கைகளில் தவழும்...\u003cbr\u003e\nஒருவர், ஒரே ஒரு கேள்வி கேட்கின்றார்; அந்த ஒரு வரிக் கேள்விக்கு, கிட்டத்தட்ட 12 பக்கம் சிலப்பதிகாரச் சிறப்புகளை எல்லாம் சொல்லிச் சொல்லி ஆத்துப் போகிறார் பேரா.கண்ணபிரான் இரவிசங்கர். இதுபோல் பல கேள்விகளைக் கண்ணபிரானை நோக்கி எல்லோரும் எழுப்ப வேண்டும். அதற்கு அவர் பதில் சொல்வதாக, இன்னும் பல புத்தகங்கள் எழுத வேண்டும் என்பது என் விருப்பம். ஒரு நூலைப் படித்தால், அது இன்னொரு நூலைப் படிக்க, நூல் பிடித்தாற் போல நம்மை இழுத்துச் செல்ல வேண்டும்! அதுவே சிறந்த நூல்!.அப்படி, முனைவர் கண்ணபிரானின் 'தமிழா? சம்ஸ்கிருதமா?' என்கிற இந்த நூல். மீண்டும் சிலப்பதிகாரத்தைப் படிக்க என்னை இழுத்துச் செல்கிறது; உங்களையும், ஒரு நூறு புத்தகங்கள் வாசிக்க, இந்த நூல் தூண்டும்!- திரு. கரு. பழனியப்பன்\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559747435,"sku":"BK1796","price":180.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thamizha-samskrithama.jpg?v=1788081665"},{"product_id":"thandanai","title":"தண்டனை","description":"\u003cp\u003eகாலந்தோறும் ஒவ்வொரு நாட்டிலும் மாறிவரும் அரசியல் சமூகச் சூழலுக்கேற்பச் சிறைகளும் அவை நிறைவேற்றும் தண்டனைகளும் மாறி வந்துள்ளன. மனிதனை நல்வழிப்படுத்தல் என்னும் போர்வையில் சிறைவாசத்தில் நிறைவேற்றப்படும் அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் கணக்கிலடங்காதவை. சில நேரங்களில், அங்கு அரங்கேறும் சித்திரவதைகள் மனித உரிமை மீறலின் உச்சமாக இருக்கும். ஆனால், அவற்றை வரலாற்று நூல்கள் மறைக்க முயன்றாலும் அத்தகையச் சமூக அவலங்கள் கலை இலக்கியத்தில் பதிவாவதைத் தடுக்க இயலாது. இதனை மீண்டும் நிறுவும் விதமாக 2018ஆம் ஆண்டில் வெளியான  ‘தண்டனை’ என்னும் தஹர் பென் ஜெலூனின் தன்புனைவு புதினம் அமைந்துள்ளது.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559780203,"sku":"BK1797","price":200.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thandanai.jpg?v=1788081667"},{"product_id":"thedal","title":"தேடல்","description":"\u003cp\u003eதேடல்\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559812971,"sku":"BK1798","price":75.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thedal.jpg?v=1788081669"},{"product_id":"theerppukalin-kaalam","title":"தீர்ப்புகளின் காலம்","description":"\u003cp\u003e\"ரொம்ப நாள் மனசிலே வச்சிருந்த கருமிசம் சாமி. எம்மொவள இப்படித்தானய்யா கொன்னுருப்பானுவ? அன்னைக்கி நாங்க எப்படித் துடிச்சொம் தெரியுமாய்யா? எம்மொவா கலகண்டரமாப் பேசி சிரிச்சி வெளையாடிக்கிட்டிருந்தப் புள்ள. ராத்திரி அவளுக்குக் கண்ணாளம்...அதுக்கு மின்னாடியே அவள வல்லடியா தூக்கிட்டுப்போயிக் கதறக்கறக் கொதறி எடுத்துக் கொன்னுப்புட்டானுவ. அன்னைக்கி முடிவுப்பண்ணொம், அந்த மூணுபேரையும் எங்கக் கையாலக் கொல்லணுமின்னு. மத்தவிய எல்லாரையும் எம்மொவா பழி வாங்கிட்டதாவச் சொன்னாவா. பாக்கியிருந்த இவம்தாம் எங்கக் கைக்குக் கெடச்சான்.\" ''செஞ்சாலும் செய்வப்பா. அப்புராணிகளத்தான் நம்பக்கூடாது. இருந்தாலும் எச்சரிக்கையா இருக்கணும் மாப்ள. அவனுவ பாம்பு மாரி.... வெசத்த வாய்க்குள்ள ஒதுக்கியே வச்சிருப்பானுங்க. சமயம் வரும்போ அவனுவ சண்டியத்தனத்தக் காட்டிப்புடுவானுங்க\" ''நம்மத் தெய்வான அக்கா நமக்குப் பாதுகாப்பு தந்துகிட்டிருப்பா மச்சான்.\" \"பெரிய வீரன் சூரன்னுகிடுவானுங்க.\" \"ஒரு மயிரும் கெடையாது. சும்மா பாவ்லா\"\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559845739,"sku":"BK1799","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/theerppukalin-kaalam.jpg?v=1788081671"},{"product_id":"therinthavan","title":"தெரிந்தவன்","description":"\u003cp\u003e“எனக்கும் கீழக்காடுவெட்டிதான்.எங்கத்தோட்டங்களுக்கு அழகுமுத்துக் குடும்பம் வேலைக்கு வரும். அழகுமுத்து மருமகனா? தெரியாமப் போச்சிதே... ச்சே... தெரிஞ்சிருந்தா சோறுவாங்கித் தின்னிருக்கமாட்டனே” “ஏந்தம்பி?சோறு நல்லாத்தானே இருந்துச்சி” “நா சோறு வாங்கித் தின்னத ஊர்ல யாருக்கிட்டயும் சொல்லிரக்கூடாது.என்னையக் காறித் துப்புவானுங்க... பரிகாசம் பண்ணுவானுங்க.” அங்கிருந்து திருநெல்வேலி ரயில் நிலையம்வரைக்கும் உத்தமனோடு பேசிக்கொள்ளவில்லை அவன். ரயிலை விட்டுக் கீழே இறங்கியதும் தன்னிடம் ஒருவார்த்தைகூட சொல்லிக்கொள்ளாமல் அவன் வேகமாக நடைபோட்டதன் காரணமும் இப்போதுதான் புரிந்தது உத்தமனுக்கு.- ‘தெரிந்தவன்’ சிறுகதையிலிருந்து.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559878507,"sku":"BK1800","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/therinthavan.jpg?v=1788081673"},{"product_id":"thinaiyiyal-kotpadugal","title":"திணையியல் கோட்பாடு","description":"\u003cp\u003eபண்டைத் தமிழர்கள் இயற்கையோடு கொண்டிருந்த நெருக்கமான உறவையும், அதன் அடிப்படையில் உருவான வாழ்வியலையும் எளிய நடையில் விளக்குகிறது பிரபலச் சூழலியல் எழுத்தாளர் பாமயன் எழுதியுள்ள ‘திணையியல் கோட்பாடுகள்' (தடாகம் பதிப்பகம்). நமது மரபு பற்றியும், நமது சூழலியல் பாரம்பரியம் பற்றியும் தெரிந்துகொள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல். பண்டைத் தமிழர்களின் அறிவியல் நுட்பத்தையும், அறிவையும் அறிந்துகொள்ள இது போன்ற நூல்கள் உதவும்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559911275,"sku":"BK1801","price":60.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thinaiyiyal-kotpadugal.jpg?v=1788081675"},{"product_id":"thonmudhuguravar-alaivurum-vazhvu","title":"தொன்முதுகுறவர் அலைவுறும் வாழ்வு","description":"\u003cp\u003e“கானக்குறவர்களே' முதல் தமிழ் விவசாயிகள். ஆக, உணவு உற்பத்தியென்பது முதன்முதல் மனித சமூகத்தில் 'பயிரிடுதல்' என்னும் புதிய தொழில்நுட்பத்தோடு ஏற்பட்டது. இது மனித சமூகத்தில் ஏற்பட்ட இரண்டாம்கட்ட புரட்சியாகும். சங்க காலத்தில் கானக் குறவர்களின் காடெரிப்பு வேளாண்மை இருந்ததால் தமிழ்ச் சமூகம் மனித குலப்படிமலர்ச்சியின் இக் கட்டத்தையும் அடைந்தது. தமிழகத்தின் தொல் வேளாண் முறைக்கு கானக்குறவர்களே சாட்சியாகிறார்கள் என்பதை தமிழ்ச் சமூக \"வரலாறெழுதியலாளர்கள் அழுத்தமாகப் பதிவு செய்யவில்லை .\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559944043,"sku":"BK1802","price":150.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thonmudhuguravar-alaivurum-vazhvu.jpg?v=1788081677"},{"product_id":"thuravigalum-puratchiyalargalum-china-1957","title":"துறவிகளும் புரட்சியாளர்களும்: சீனா 1957","description":"\u003cp\u003eரொமிலா தாப்பர் 1957 இல் சீனாவுக்குச் சென்று வந்த பயனக்குறிப்பே ‘துறவிகளும் புரட்சியாளர்களும், சீனா 1957’ ஆகும். ஸ்ரீலங்காவின் கலைவரலாற்றறிஞரான அனில் டி சில்வாவின் ஆராய்ச்சி உதவியாளராக அவருடன் சென்று, மேஜிஷன், டன்ஹுவாங் ஆகிய இரு பெரும் புத்தமத வரலாற்றிடங்களில் பணிபுரிந்தார்.\u003cbr\u003e\nபுரியாத மௌனம் சீனாவில் நிலவிய காலகட்டம் அது. மாவோ ஆட்சியதிகாரத்துக்கு வந்ததும் சீனா மாறத் தொடங்கி இருந்தாலும் பெரும்பாலான பழைய வழிமுறைகள் அப்படியேதான் இருந்தன. அவர் ஆய்வு செய்ய வந்த புத்தமத வரலாற்றிடங்கள் தவிர பீஜிங், சியான், நான்கிங், ஷங்கை போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களுக்கும் சீனாவின் உட்பகுதியில் இருந்த கிராமங்களுக்கும் ஆசிரியரால் பயணம்செய்ய முடிந்தது. அவரால் முடிந்த வரையில் சீன சமூகத்தை புரிந்துகொள்ள முயன்றார். சீனாவில் செலவழித்த நேரத்தில் அவர் கவனித்த உலகின் மிகப்பழமையான மிகச் சிக்கலான நாடுகளில் ஒன்றான சீனாவின் ஆழமான, வேடிக்கையான, அசலான, தொடர்ந்து உள்ளொளி அளிக்கும் கண்ணோட்டத்தை அப்படியே எதையும் மாற்றாமல் இந்நூலில் பதிவு செய்கிறார்.\u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784559976811,"sku":"BK1803","price":695.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/thuravigalum-puratchiyalargalum-china-1957.jpg?v=1788081679"},{"product_id":"ullasa-thirumanam","title":"உல்லாசச் திருமணம்","description":"\u003cp\u003eஇது பற்றி விவாதிக்க மீண்டும் ஒருமுறை முலே அகமதுவைச் சந்தித்தான்.\"பொதுவாகப் பார்த்தால் உன் குழந்தைகள் பால் கலந்த காபி போன்றவர்கள். ஒருபுறம் கருப்பு காபியும், மறுபுறம் பாலுமாக இருக்கின்றனர். இறைவன் ஏதாவது காரணங்கள் வைத்திருப்பான். இறைவனின் அருட்கொடையை ஏற்றுக்கொண்டு, இது அவருடைய நல்லுள்ளத்தின் அடையாளம் என நினைத்துக்கொள். மனித இனத் தைப் பலவாறாகப் படைத்து அதன்மூலம் ஒருவருக்கொருவர் உதவி செய்யும்படி இறைவன் செய்துள்ளார். கருப்பு மனிதருக்கும் வெள்ளை மனிதருக்குமிடையேயும்; அந்நியருக்கும் இதே நாட்டைச் சேர்ந்தவருக்கும்; இங்கிருப்பவர்களுக்கும் அங்கிருந்து வந்தவர்களுக் கும் என இறைவன் பேதம் பார்ப்பதில்லை. நீ கொடுத்து வைத்தவன் என்பதை நினைவில் வை. உனக்குக் கிடைத்துள்ள நல்வாய்ப்பைத் தேவையற்ற விஷயங்களில் விரயமாக்காதே. நம் மதத்தின் மீதும் நம்பிக்கைகள் மீதும் ஈடுபாடு வருமாறு நல்லதொரு கல்வியை அவர்களுக்கு வழங்கு\".\u003cbr\u003e\nதனக்கு இரண்டு புதிய சகோதரர்கள் கிடைத்திருக்கும் மகிழ்ச் சியை வெளிக்காட்டாமல் இருக்க கரீமால் இயலவில்லை. நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றபோது மகிழ்ந்ததைப்போல் அவன் ஆடுவதும் பாடுவதுமாக இருந்தான். பிரசவத்தின் போது, அங்கு இருந்ததால் இன்று காலை அவன் பயிற்சியில் ஈடுபடவில்லை. அம்மாவிடம் அவன்தான் இச்செய்தியை அறிவித்தான். அவள் ஆச்சரியப்படவில்லை. மாறாக,\u003cbr\u003e\n\"ஒன்று வெள்ளை, மற்றது கருப்பு என்பதிலிருந்தே அவள் ஒரு சூன்யக்காரி என்பது புலனாகிறது! இதுவரை யாராவது இப்படிக் கேள்விப்பட்டதுண்டா?\" என்றாள்.\u003cbr\u003e\nகரீம் எதுவும் மறுத்துப் பேசவில்லை. எல்லோருக்கும் இச்செய்தியை அறிவிக்க வீட்டுக்குள் ஓடினான். வாணலி ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு,ஒரு மரக்கரண்டியால் அதை அடித்து ஓசை எழுப்பியபடிக் கூவினான்.\u003cbr\u003e\n\"எல்லோருக்கும் ஓர் அறிவி... அறிவிப்பு: ஹஸ்... ஹசன்.. ஹூ...ஹூசேன் வத்திருக்கின்றனர். வாழ்க அப்பா... வாழ்க அம்மா...\"\u003cbr\u003e\nBlurb Description : மொராக்கோவில் பிறந்த பிரஞ்சு எழுத்தாளர் தஹர் பென் ஜெலூன் தன் சமூகத்தில் நிலவும் அடக்குமுறைகள்,அநீதிகள்,தீமைகள் ஆகியவை குறித்துக் கட்டற்ற சுதந்திரத்துடன் விவாதிக்கப் பொருத்தமான புனைவுக்களமாக உல்லாசத் திருமணம் என்னும் இப்புதினத்தைப் படைத்திருக்கிறார்.\u003cbr\u003e\nமூன்று தலைமுறையினை உள்ளடக்கியுள்ள இப்புதினத்தில்,ஏறக்குறைய எழுபது ஆண்டு கால மொராக்கோ வரலாற்றை நடுநிலை பிறழாமல் அழகியலோடு விவரிக்கமுனையும் தஹர் பென் ஜெலூனின் சுயவாழ்க்கையும் இந்தப் புதினத்தின் காலகட்டத்தோடு பொருந்தி விடுகிறது.\u003cbr\u003e\nஇப்புதினத்தைத் தன் மகன் அமீனுக்குச் சமர்ப்பணம் செய்திருப்பதோடு மட்டுமின்றி கரீம் என்னும் பாத்திரத்தின் வடிவில் வாசகர்கள் அவனைக் காண வழி செய்கிறார் ஜெலூன்.இயற்கையின் சோதனையால் நிரந்தர மழலைத் தன்மையுடன் விளங்கும் கரீமுக்கு இக்கதையினை இயக்கும் பெரும் பங்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\u003cbr\u003e\nவிடாமல் தொடரும் சமூகத் தீமைகள் மீதான தன் அறச்சீற்றத்தைத் தணித்துக்கொள்ளும் வடிகாலாக அமையும் இப்புதினம் வெள்ளை இருள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.\u003cbr\u003e\n \u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784560042347,"sku":"BK1804","price":300.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ullasa-thirumanam.jpg?v=1788081681"},{"product_id":"ulloli-issaikkavithai","title":"உள்ளொளி","description":"\u003cp\u003eஉள்ளொளி இசைக் கவிதைகள்\u003cbr\u003e\nஉயிர்களின் உயிரே உலகின் உணர்வே... . காதல் நிலைத்திடும் கருணையின் உருவே...\u003cbr\u003e\nதோற்றங்கள் பலவாய் தோகையின் மகிழ்வாய்... தோரண அழகாய் தோன்றும் வியப்பே...\u003cbr\u003e\nநீயின்றி புவியில் நிம்மதி இல்லை... நேசத்தை சுமக்கா தாய்மடி இல்லை...\u003cbr\u003e\n* (உயிர்களின் உயிரே..)\u003cbr\u003e\nதாகத்தைப் தீர்க்கும் தரணியின் தருவே... தளிர்களின் சிரிப்பில் வாழ்ந்திடும் உருவே\u003cbr\u003e\nமின்னலாய் புன்னகை மேகமாய் எழில்நடை... விண்ணின் விளக்கம் உன்னில் பிறக்கும்\u003cbr\u003e\nஆறுதல் அளிக்கும் ஆறுதல் ஆவாய்... அகங்கள் உயிர்க்கும் அருமருந்து ஆவாய்...\u003cbr\u003e\nவேதனைப் போக்கும் விந்தையின் கருநீ.... விண்ணில் பூக்கும் விருட்சத்தின் மணம்நீ... (உயிர்களின் உயிரே..)\u003cbr\u003e\nமானுடம் சுமக்கும் மயக்கங்கள் தெளிய... மாயங்கள் விலக்கும் மாபூதத் திருவே...\u003cbr\u003e\nஉன் விளையாட்டில் உயிர்த்தெழும் வையம்... பூமியின் தாகம் காதலாய் பூக்கும்...\u003cbr\u003e\nஏரிக் குளங்களின் ஏக்கத்தை தீர்ப்பாய்.... ஆறாய் அமுதாய் அவதார இயல்பாய்...\u003cbr\u003e\nமானுடத் தோற்றத்தின் மாதவக் கூறே.... மாமழையாக மலர்ந்திடும் மகிழ்வே...\u003cbr\u003e\n(உயிர்களின் உயிரே..)\u003cbr\u003e\n \u003c\/p\u003e","brand":"தடாகம் வெளியீடு","offers":[{"title":"Default Title","offer_id":53784560075115,"sku":"BK1805","price":320.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/files\/ulloli-issaikkavithai.jpg?v=1788081683"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0959\/0515\/3387\/collections\/Thadagam_Logo_for_PB.png?v=1786679844","url":"https:\/\/anytamilbooks.com\/collections\/thadagam.oembed?page=4","provider":"Any Tamil Books","version":"1.0","type":"link"}